முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களித்ததற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு சான்றிதழ்

சனிக்கிழமை, 25 மே 2024      இந்தியா
Jaishankar 2024-05-25

புது டெல்லி, வாக்குச்சாவடியில் முதல் ஆண் வாக்காளராக வாக்குப்பதிவு செய்ததால் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

மக்களவை தேர்தலின் 6-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அவருடைய பெயர் இடம் பிடித்துள்ள வாக்குச்சாவடியில் இவர்தான் முதல் ஆண் வாக்காளராக வாக்குப்பதிவு செய்துள்ளார். இதனால் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

வாக்களித்த பின் ஜெய்சங்கர் கூறியதாவது:-இந்த பூத்தில் நான் முதல் ஆண் வாக்காளராக வாக்களித்துள்ளேன். இதனால் வாக்களித்ததற்காக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற விரும்புகிறோம். மக்கள் மீண்டும் பா.ஜ.க.வுக்கு இந்த தேர்தல் மூலம் அதிகாரத்தை வழங்குவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து