எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரபட்ட வழக்கினை தொடர்ந்து கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அந்த தேர்வுக்கான தேதி அறிவித்தும் சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை பதிலளித்துள்ளது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. இதில் 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதற்கிடையே நீட் தேர்வில் சுமார் 1500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வழங்கியது.
தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் காரணங்களால் எதிர்பாராமல் விரயமானால் அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதை எதிர்த்து 20 ஆயிரம் மாணவர்களிடம் கையொப்பம் பெற்று பிசிக்ஸ் வாலா என்ற கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தை தெளிவுப்படுத்தும் வரை இளநிலை மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு நேற்று நடந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறும் போது,
கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான முடிவை திரும்ப பெறுகிறோம். அந்த மாணவர்களுக்கு வரும் 23-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும். அதன்படி முடிவுகள் வரும் 30-ம் தேதி அறிவிக்கப்படும்.
தேர்வு எழுத விரும்புவோர் எழுதலாம். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே தொடரும். மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை சேர்க்காத உண்மையான மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இதர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 6-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நீட் மறுதேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையின் முடிவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்தனர்.
தேசிய தேர்வு முகமையின் விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. மேலும் கலந்தாய்வு பாதிக்கப்படாத வாறு நீட் மறுதேர்வு விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும்.
கருணை மதிப்பெண்களை தவிர்க்க மனுதாரர்கள் எழுப்பியுள்ள பிற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். நீட் தேர்வு குளறுபடி, வினாத்தாள் கசிவு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் மனு உள்பட நீட் தொடர்பாக அனைத்து மனுக்களும் ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத் தன்மை பாதிக்கப்பட்டு உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பிறகு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
நீட் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. தேசிய தேர்வு முகமை நம்பகமான அமைப்பாகும்.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. அதன் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 69,000-க்கும் கீழ் சரிவு
15 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க
-
ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்கள் 2 பேர் பலி?
15 May 2025பஹல்காம்: இந்தியா நடத்திய தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
-
சிந்தூர் பாராட்டு விழா: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய இளைஞர்கள் 5 பேர் கைது
15 May 2025பெங்களூரு, ஆபரேஷன் சிந்தூர் பாராட்டு விழாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
கடலூர்: சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன நீர் டேங்கர் வெடித்து விபத்து
15 May 2025கடலூர், கடலூரில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் ரசாயண நீர் டேங்கர் வெடித்தது.
-
சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: பா.ஜ.க. அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
15 May 2025புதுடெல்லி, அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டித்துள்ளா
-
விமானத்தில் பாலியல் துன்புறுத்தல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை
15 May 2025சிங்கப்பூர்: பெர்த்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக 20 வயது இந்தியருக்கு 3 வாரம் சிறைத்
-
பாகிஸ்தானியர்கள் என்று அழைக்க வேண்டாம்: பலூசிஸ்தான் தலைவர் கோரிக்கை
15 May 2025பலுசிஸ்தான், பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
15 May 2025சென்னை, கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
-
அருணாசல பிரதேச எல்லை விவகாரம்: சீனாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா
15 May 2025புதுடெல்லி, அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு பதிரடி கொடுத்தது இந்தியா.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காசாவில் பலி 84 ஆக உயர்வு
15 May 2025காசா: காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 84 பேர் உயிரிழந்தனர்.
-
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் கண்கணிக்கப்பட வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
15 May 2025ஸ்ரீநகர், பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
-
வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு: மே 20-ம் தேதி நாள் முழுவதும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
15 May 2025புதுடெல்லி, வக்பு சட்டத் திருத்தங்களுக்கான இடைக்காலத்தடை குறித்த வாதங்களைக் கேட்க தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு மே 20-ம் தேதி முழுவதையும் ஒதுக்கியுள்ளது.
-
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க காலம் நிர்ணயிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட்டிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி முர்மு
15 May 2025புது தில்லி, தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டிற்கு சவால் விடும் ஜனாதிபதி மற்றும் மத்திய அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
15 May 2025சென்னை, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி ஜனாதிபதி
-
கைதானோர் மட்டும் வழுக்கி விழுவது எப்படி? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
15 May 2025சென்னை: வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானோர் மட்டும் வழுக்கி விழும் நிலையில் போலீஸ் ஸ்டேஷன் கழிவறைகள் உள்ளனவா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை
15 May 2025அங்காரா, ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
-
வடகாடு மோதல் சம்பவம்: ஐ.ஜி, ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
15 May 2025மதுரை, புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இருபிரிவினரிடையே நடைபெற்ற மோதல் வழக்கில் திருச்சி ஐ.ஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி.
-
மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்
15 May 2025கோவை, கோவையில் அரசு பஸ்சை மதுபோதையில் இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
இ.யூ.மு.லீக் தேசிய தலைவராக தேர்வு: காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து
15 May 2025சென்னை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காதர் மொகிதீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீட்டு: அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு
15 May 2025தோஹா: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை: மதுரை ஐகோர்ட்டு பாராட்டு
15 May 2025மதுரை: மதுரை சித்திரை திருவிழாவுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை பாராட்டு தெரிவித்தது.
-
வனத்துறை ஊழியர்கள் கவனமுடன் பணியாற்ற அமைச்சர் வேண்டுகோள்
15 May 2025சென்னை, வனத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பணியின் போதும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் செல்லவேண்டும் என வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.
-
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் ரூ.8,670 கோடி விடுவித்தது
15 May 2025இஸ்லாமாபாத், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகளை பாகிஸ்தானுக்கு விடுவித்துள்ளது.
-
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
15 May 2025சென்னை, கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு: யாரும் உரிமை கோருவது நியாயம் அல்ல: வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து
15 May 2025கோவை, பொள்ளாட்சி பாலியல் வழக்கில் யாம் எரிமை கோருவது நியாயம் அல்ல என்று திருமாவளவன் தெரிவித்தார்.