முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஆண்டில் மாநிலம் முழுவதும் தடுப்பணைகள் கட்டப்படும்: சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      தமிழகம்
Durai-Murugan 2024-06-21

சென்னை, அடுத்த 2 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும்  தடுப்பணைகள் கட்டப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் உறுப்பினர்கள், கேள்விக்கு அளித்த பதிலில் தெரிவித்தார்.

நேற்றைய சட்டசபை கூட்டத்தில், குளித்தலை, உத்தரமேரூர், பேராவூரணி, எம்எல்ஏ.,க்கள் அவரவர் தொகுதிகளில் தடுப்பணைகள் குறித்து கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்;

பல்வேறு உறுப்பினர்கள் பலர் இந்த கோரிக்கையை முக்கியமாக வைக்கின்றனர். தடுப்பணைகள் கட்டுவது குறித்து எவை சாதகமாக உள்ளது என்பது குறித்து முதல்வருடன் பேசி வருகிறேன். தமிழகம் முழுவதும் இன்னும் 2 ஆண்டுகளில் தேவையான தடுப்பணைகள் கட்டித்தரப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் அருகே வைகே ஆற்றில் கருவேலம் மரங்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், இது குறித்து தனியாக ஒரு மனு கொடுத்தால் முடிந்த அளவுக்கு செய்து தருகிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து