எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பில் பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி 2 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ஆஸ்திரியாவுக்கு புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். இதையடுத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பின்னர், மோடியுடன் கார்ல் நெகம்மர் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரியா அதிபர் அலெக்ஸாண்டர் வான் டிர் பெல்லனை சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசினர்.
இந்தியா - ஆஸ்திரியா இடையே 75 ஆண்டுகளாக நல்லுறவு இருந்து வருகிறது. 1947இல் இந்தியாவின் சுதந்திரத்தை ஆஸ்திரியா அங்கீகரித்தது. இரு நாடுகளும் 1949-ல் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தின. அதன் மூலம் தூதரகங்களும் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில், ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மர், ’’எங்கள் இருதரப்பு உறவை மேலும் ஆழப்படுத்துவது மற்றும் பல புவிசார் அரசியல் சவால்களில் நெருக்கமான ஒத்துழைப்பைப் பற்றி பேச எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்” என பதிவிட்டிருந்தார். நெகம்மருக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஆஸ்திரியாவுக்குச் செல்வது உண்மையிலேயே பெருமைக்குரியது. நமது நாடுகளுக்கு இடையே பிணைப்பை வலுப்படுத்துவது மற்றும் புதிய வழிகளை ஆராய்வது குறித்த நமது விவாதங்களை எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதோடு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “ஆஸ்திரியா அதன் துடிப்பான இசை கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்றது. வந்தே மாதரம் பாடலை அவர்கள் இசைப்பதை பார்க்கும்போது, அதை உணர முடிந்தது” என தெரிவித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும், கடைசியாக இந்திரா காந்தி 1983 இல் பயணம் செய்தார்.
பின்னர் பிரதமர் மோடி, சான்ஸ்லர் கார்ல் நெஹாம்மருடன் கூட்டாக செய்தியாளர் சந்தித்தனர். பிரதமர் மோடி கூறியதாவது., போர்க்களத்தில் நின்றுகொண்டு எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது, எதுவாக இருந்தாலும், அப்பாவி மக்களைக் கொல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது, இந்தியா - ஆஸ்திரியா இடையே நல்லுறவு மட்டும் இருநாட்டு கூட்டுறவு குறித்து பேசப்பட்டது, இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி செய்யப்பட்டது என்றார். பயங்கரவாதம் குறித்துப் பேசிய பிரதமர், பயங்கரவாதத்தை இருநாடுகளுமே கண்டிக்கிறோம், பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதனை ஏற்கக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது, அதனை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றார் மோடி.
சான்ஸ்லர் கார்ல் தெரிவிக்கையில்., மக்களவைத் தேர்தலில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்றிருப்பதன் தொடக்கத்தில், ஆஸ்திரியா வந்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக அமைந்துள்ளது. இந்த பயணம் எனக்கு வரலாற்று மற்றும் சிறப்புமிக்கதாக உள்ளது, 41 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா வந்துள்ளார். கார்ல் நெஹாம்மருடன் மிகவும் பயனுள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இரு நாடுகளும் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்பட்டன என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது: டெல்லியை அச்சுறுத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
11 Jul 2025சென்னை, தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-07-2025.
11 Jul 2025 -
தமிழ்நாட்டு பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
11 Jul 2025சென்னை : வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவ
-
ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்
11 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
-
தங்கம் விலை ரூ.440 உயர்வு
11 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்: இ.பி.எஸ்.
11 Jul 2025விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கனடா நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு
11 Jul 2025வாஷிங்டன் : ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெளிநாட்டு பயணம்: பஞ்சாப் முதல்வர் விமர்சனம்
11 Jul 2025புதுடெல்லி : “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
-
தமிழகத்தில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் வரும் 15-ம் தேதி திறப்பு
11 Jul 2025சென்னை, தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்
-
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jul 2025சென்னை : தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆடு, மாடுகள் முன் சீமான்: அமைச்சர் சிவசங்கர் வருத்தம்
11 Jul 2025அரியலூர் : ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
-
பாக்.கில் கிளர்ச்சியாளர்களால் பயணிகள் 9 பேர் சுட்டுக்கொலை
11 Jul 2025கராச்சி : பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: பொதுசுகாதாரத்துறை
11 Jul 2025சென்னை : தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
குரூப்-4 வினாத்தாள் கசிவா? - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மறுப்பு
11 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.
-
ஜி-மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்
11 Jul 2025வாஷிங்டன் : ஜி மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்: அமைச்சர் சேகர்பாபு
11 Jul 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
11 Jul 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்த பேசசுவார்த்தைககு அமெரிக்காவுககு இந்திய குழுவினர் பயணம் செய்ய உள்ளனர்.
-
வரும் 27,28-ம தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
11 Jul 2025சென்னை, வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
-
வெள்ளம், நிலச்சரிவு பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி
11 Jul 2025புதுடெல்லி : வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க
-
பீகார் தேர்தலை 'திருட' பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
11 Jul 2025புவனேஸ்வர் : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பீகார் தேர்தலையும் திருட பா.ஜ.க. முயல்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
வழக்கின் சாட்சிகளை அழிக்க முயற்சி: தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
11 Jul 2025சியோல் : தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
-
கடமை தவறுவது போல் தெரிகிறது: அ.தி.மு.க. தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
11 Jul 2025சென்னை, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடமை தவறுவது போல் தெரிவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.