எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டாக்கா : நாடு முழுவதும் வலுக்கும் மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். இதற்கிடையே, ‘இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும்’ என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இச்சூழலில், புகழ்பெற்ற எழுத்தாளரும், பேராசிரியருமான சலிமுல்லா கான் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமையும் என்று வங்கதேச தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
பதவியை ராஜினாமா...
வங்கதேசத்தில் தீவிரமடைந்த மாணவர் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை நேற்று (திங்கள்கிழமை) ராஜினாமா செய்தார். இதையடுத்து, நேற்று பகல் 2.30 மணி அளவில் அவர் தனது சகோதரி ஷேக் ரேஹானாவுடன் வங்கதேசத்தின் கனபாபன் என்ற இடத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகள் வெளியாகி உள்ளன. எனினும், அவர்கள் எங்கு சென்றார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்தியாவின் திரிபுராவில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக தகவல் வெளியானது.
இந்திய எல்லையில்...
இதனிடையே, வங்கதேசத்தை ஒட்டிய 4,096 கிலோ மீட்டர் தூரம் உள்ள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் தல்ஜித் சிங் சவுத்ரி கொல்கத்தா விரைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், “இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என தெரிவித்தார்.
தளபதி ஆலோசனை...
இதனையடுத்து, வங்கதேச தேசிய கட்சி, ஜதியா கட்சி, ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் ராணுவத் தளபதி ஆலோசனை மேற்கொண்டதாகவும், அதன் அடிப்படையில் இடைக்கால அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையில் பங்கேற்ற வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி, புகழ்பெற்ற எழுத்தாளரும் பேராசிரியருமான சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமையும் என தெரிவித்துள்ளது.
இடைக்கால அரசில்....
மேலும், இடைக்கால அரசில் டாக்டர் ஆசிப் நஸ்ருல், ஓய்வுபெற்ற நீதிபதி மொகமது அப்துல் வாஹாப் மியா, ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் இக்பால் கரிம் புயியான், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சையத் இஃப்திகார் உத்தின், டாக்டர் தேபபிரியா பட்டாச்சார்யா, மடியூர் ரஹ்மான் சவுத்ரி, ஓய்வுபெற்ற ராணுவ பிரிகேடியர் ஜெனரல் சகாவத் ஹொசைன், டாக்டர் ஹொசைன் ஜில்லூர் ரஹ்மான், ஓய்வுபெற்ற நீதிபதி மாட்டின் ஆகியோர் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மாளிகைக்குள் நுழைந்து...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலைநகரில் திரண்டுள்ள போராட்டக்காரர்கள், ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும், வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுசாமன் கான் கமலின் டாக்கா இல்லத்தின் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தன்மாண்டி பகுதியில் உள்ள அவாமி லீக் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர்.
இடஒதுக்கீடு வழங்க...
கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர் போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மீண்டும் போராட்டம்...
இதன் தொடர்ச்சியாக, போலீஸை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் வங்கதேச போராட்டம் வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
தீவைப்பு சம்பவம்....
கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேற்று காலை போராட்டக்காரர்கள், பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பாதுகாப்புக் கருதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அதை தொடர்ந்து, அந்நாட்டு அரசை ராணுவம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
எல்லையில் கண்காணிப்பு....
இதற்கிடையே வங்கதேசம் - இந்தியா எல்லைப் பகுதியான மேற்கு வங்க எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லை பகுதிகளில் பணியாற்றி வரும் பி.எஸ்.எப். படையினர் அனைவரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தீவிர உஷார் நிலையில் இருக்கும்படி அனைத்து படை பிரிவுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ