எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காட்மாண்டு, அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 3 நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் காத்மாண்டு உருக்குலைந்து காணப்படுகிறது. இதுவரை உயிரிழப்பு 200-ஐ தாண்டியுள்ளது.
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 204 பேர் பலியானதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 33 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமெனவும் அஞ்சப்படுகிறது. “காத்மாண்டு பள்ளத்தாக்கில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளப்பெருக்கு இது” என செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச சம்மேளனத்தின் பொதுச்செயலர் ஜெகன் சேப்பகெயின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் மூன்றாவது நாளாக நேற்று (செப்.30) தொடருந்து நடைபெற்றன. தலைநகர் காத்மாண்டுவில் நூற்றுக்கணக்கான மக்கள் உணவு, பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமலும், சுகாதார வசதிகளின்றியும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிலச்சரிவுகளால் காத்மாண்டுவை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் காத்மாண்டுவுக்கு செல்லும் உணவு உள்பட உணவுப் பொருள்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக, காய்கறிகள் உள்பட உணவுப் பொருள்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
காத்மாண்டுவின் முக்கிய நீராதாரமான பாகமதி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.இதனிடையே, கடந்த 3 நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் நேபாளத்தில் 20 நீர் மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இதன்காரணமாக, 1,100 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காத்மாண்டுவிலும் பிற பகுதிகளிலும் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேபாள பிரதமர் பிரகாஷ் மான் சிங் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(செப். 29) நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் முடுக்கிவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உள்பட பாதுகாப்புப் படைகள் அனைத்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் பாதித்த பகுதிகளிலிருந்து இதுவரை சுமார் 4,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்துள்ளோருக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், உணவு உள்பட அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-06-2025.
21 Jun 2025 -
ஈரானின் முக்கிய தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு
21 Jun 2025தெஹ்ரான், ஈரானின் புரட்சிகர காவல்படை ட்ரோன் படைப் பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் மேலும் உயரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
21 Jun 2025சென்னை : சென்னை மற்றும் பல பகுதிகளில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
21 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 21) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.73,880-க்கு விற்பனை ஆகிறது.
-
புதுப்பொலிவு கண்ட வள்ளுவர் கோட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
21 Jun 2025சென்னை, வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
21 Jun 2025சென்னை : ஒவ்வொரு அமைப்பும், அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில், தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள்.
-
தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
21 Jun 2025சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை சார்பில் சர்வதேச யோகா
-
யோகா, உலகிற்கு பாரதம் அளித்த கொடை; 51 தண்டால் எடுத்து அசத்திய கவர்னர் ரவி
21 Jun 2025மதுரை : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரையில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட கவர்னர் ரவி, 51 தண்டால் எடுத்து பார்வையாளர்களை அசத்தினார். கவர்னருக்கு வயது 73.
-
ட்ரம்ப் நினைத்தால் போரை முடிவுக்கு கொண்டுவரலாம்: ஈரான் அதிபரின் ஆலோசகர் கருத்து
21 Jun 2025தெஹ்ரான், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நினைத்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலை நிறுத்த முடியும் என ஈரான் தெர
-
சிற்றுந்துகள் திட்டத்தால் 1 கோடி மக்கள் பயணம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
21 Jun 2025சென்னை, மினி பேருந்து திட்டத்தால் இதுவரை பஸ் வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் புதிய சாதனை
21 Jun 2025லண்டன் : தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
-
அகமதாபாத் விமான விபத்து எதிரொலி: 3 முக்கிய அதிகாரிகளை நீக்க ஏர் இந்தியாவுக்கு அறிவுறுத்தல்
21 Jun 2025புதுடெல்லி, அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வரும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), விமானக் குழுவினரை திட்டமிடுவது, இயக்குவது
-
நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேட்டி
21 Jun 2025மதுரை, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங்
21 Jun 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்றும் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் ராஜ்நாத்
-
பீகாரில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,100 ஆக உயர்வு: நிதிஷ்
21 Jun 2025பீகார், பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1
-
சமையலின் ஆஸ்கார் விருது: தமிழருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு
21 Jun 2025சென்னை : சிறந்த சமையல் கலைஞருக்கான விருதைத் தமிழ்நாட்டை சேர்ந்த செப் விஜயகுமார் வென்றுள்ள நிலையில் அவருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
21 Jun 2025மேட்டூர் : கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்து வருகிறது.
-
டெஸ்ட் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை
21 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
-
வால்பாறை அருகே பயங்கரம்: சிறுத்தை தூக்கி சென்ற சிறுமி சடலமாக மீட்பு
21 Jun 2025வால்பாறை : வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாய் கண் முன்னே, சிறுத்தை வெள்ளிக்கிழமை மாலை கவ்விச் சென்ற நிலையில், நேற்று சிறுமி சடலமாக மீட்கப
-
போர் நடைபெறும் ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களையும் வெளியேற்ற இந்திய அரசு முடிவு
21 Jun 2025புதுடெல்லி, நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில் அந்நாடுகளின் குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவி
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
21 Jun 2025தர்மபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
உலகத்தை இணைத்த யோகா: விசாகப்பட்டினம் யோகா தினம் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு
21 Jun 2025விசாகப்பட்டினம், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் மாபெரும் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
-
தற்கொலை படை தாக்குதல்: நைஜீரியாவில் 10 பேர் பலி
21 Jun 2025அபுஜா : நைஜீரியாவின் வடக்கிழக்கு மாநிலத்திலுள்ள உணவகத்தில் தற்கொலைப் படை குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யோகா தின நிகழ்ச்சியில் ஆந்திரா 2 உலக சாதனைகள்: சந்திரபாபு நாயுடு பெருமிதம்
21 Jun 2025அமராவதி : யோகா தின நிகழ்ச்சியில் ஆந்திராவில் 2 உலக சாதனை படைத்துள்ளது என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
-
இங்கி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி 471 ரன்கள் குவிப்பு - 3 பேர் சதம்
21 Jun 2025லீட்ஸ் ந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது.