எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: சிறை விதிகள் அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளது என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், சிறைகளில் குற்றவாளிகளை சாதிய
ரீதியில் வகைப்படுத்தக்கூடாது என்று 11 மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறையில் சாதிய பாகுபாடு காண்பிக்கப்பட்டால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவித்தள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய குற்றவாளிகளை அவர்களது சாதிய பின்புலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி வைத்திருப்பது, சிறைகளில் மிக மோசமான வேலைகளை செய்ய சொல்வது, பாகுபாடுடன் நடத்துவது என்பது பல்வேறு மாநிலங்களின் சிறை விதிமுறைகளிலேயே அமலில் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து 11 மாநில சிறைகளில் சாதிய ரீதியிலான அணுகுமுறை விதிகளை ரத்து செய்ய உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், "தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை சாதிய ரீதியில் வகைப்படுத்தக்கூடாது. சாதிய ரீதியில் வகைப்படுத்திய பதிவுகள் சட்ட விரோதமானவை. அவை அழிக்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட மாநிலங்கள் வகுத்துள்ள சிறை விதிகள் அரசியல் சாசனத்திற்கு முரணாக இருக்கிறது. தற்போதைய தீர்ப்பின்படி, சிறை விதிகளில் மாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுகிறது. தண்டனை குறைப்பு, சிறைகளை சுத்தம் செய்வது, சமையல் செய்வது போன்ற பணிகளில் சாதிய பாகுபாடு காட்டக் கூடாது. எஸ்.சி., எஸ்.டி உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களை சிறைகளில் பாகுபாடுடன் நடத்தக்கூடாது. அப்படி சிறையில் சாதிய பாகுபாடு காண்பிக்கப்பட்டால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


