முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்பிரிகாவில் பெண்களை கொன்றவர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      உலகம்
South-Africa 2024-10-04

Source: provided

கேப்டவுன் : தென்னாப்பிரிக்காவில் பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவளித்த விவகாரம் தொடர்பாக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மரியா மக்காடோ (45) மற்றும் லூசியா என்ட்லோவ் (34) இருவரும் லிம்போபோ மாகாணத்தில் உள்ள பொலோக்வானே அருகே ஒரு பண்ணையில் உணவு தேடிக்கொண்டிருந்தபோது ஆகஸ்ட் மாதம் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றத்தை மறைக்கும் முயற்சியில் அவர்களின் உடல்கள் பன்றிகளுக்கு உணவாக போட்டதாகக் கூறப்படுகிறது. 

பண்ணை உரிமையாளரான ஜகாரியா ஜோஹன்னஸ் ஆலிவியர் (60) மற்றும் அவரது இரண்டு ஊழியர்களான அட்ரியன் டி வெட்(19) மற்றும் வில்லியம் முசோரா (50)ஆகியோர் கொலைக்கான விசாரணைக்காகக் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து நீதிமன்றம் தற்போது பரிசிலினை செய்து வருகிறது.

இந்நிலையில், பொலோக்வானில் நீதிமன்ற அறைக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியவாறும், சந்தேக நபர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட வேண்டும் என்றும் கோரியதாக தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து