Idhayam Matrimony

தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது : ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன், ஐகோர்ட் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், 

ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 9-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களது நான்கு மோட்டார் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்களின் வாழ்வாதாரத்தை நடத்துவதற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 450 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 61 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது கடலோர காவல்துறையினரின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லை பகுதிக்குள்தான் மீன் பிடித்துள்ளனர். அவர்களை கைது செய்தது சட்டவிரோதமானது. பிற மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படும்போது மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகையில் ஒருதலைபட்சமாகவே செயல்படுகிறது.

எனவே, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவதோடு, அவர்களை விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், 

இலங்கை நீதிமன்றத்தில் மீனவர்களுக்கான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக தூதரகம் மூலமாகவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அரசியல் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து