எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தர்பங்கா : நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முழுமையான அணுகுமுறையை பின்பற்றி அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் தர்பங்கா நகரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ. 12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
விழாவில், முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி,
தர்பங்காவில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பீகாரின் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். இது பீகாரின் மிதிலா, கோசி, திருஹட் பகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நேபாளத்தில் இருந்து வரும் நோயாளிகளும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். இது இங்கு பல வேலை வாய்ப்புகளையும் சுயவேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்கும் முன், பீகார் சுகாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்தது. முந்தைய ஆட்சியாளர்கள் சுகாதாரத்துக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்காததால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
மத்திய அரசு, நாட்டின் சுகாதாரம் தொடர்பாக முழுமையான அணுகுமுறையுடன் செயல்பட்டு வருகிறது. முதலில், நோயைத் தடுப்பது, இரண்டாவது நோயை சரியாகக் கண்டறிவது, மூன்றாவது மக்களுக்கு இலவசமான, மலிவான சிகிச்சை கிடைக்கச் செய்வது மற்றும் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்வது, நான்காவது, சிறிய நகரங்களில் கூட சிறந்த சிகிச்சை வசதிகளை வழங்குவது மற்றும் நாட்டில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறையை சமாளிப்பது, ஐந்தாவது, சுகாதார சேவைகளில் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது என திட்டமிட்ட ரீதியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
நாட்டு மக்களுக்கு சேவை செய்வதிலும் அவர்களின் நலன்களை காப்பதிலும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. எனவேதான், நாடு முழுவதும் 1.5 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கியா கோயில்களை நாடு முழுவதும் நாம் உருவாக்கி இருக்கிறோம். புற்றுநோய், நீரழிவு நோய் உள்ளிட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் சுமார் நான்கு கோடி மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் இல்லை என்றால், இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் திட்டத்தால் அவர்களின் வாழ்வில் இருந்த பெரும் கவலை நீங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்கள் சுமார் ரூ.1.25 லட்சம் கோடியை சேமித்துள்ளன.
நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் வரை நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைதான் இருந்தது. சிறந்த சிகிச்சைக்காக ஒவ்வொருவரும் டெல்லிக்கு வர வேண்டிய நிலை இருந்தது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 4-5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க ஆலோசனை நடத்தினார்கள். ஆனால், உரிய சிகிச்சை தொடங்கப்படவில்லை. எனது தலைமையிலான அரசு நாட்டின் அனைத்து மூலைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகளை தொடங்கி இருக்கிறது. தற்போது நாட்டில் சுமார் ஒரு டஜன் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 மருத்துவ இடங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நமது அரசு மருத்துவக் கல்வியை இந்தி மற்றும் இந்திய மொழிகளில் கற்கவும் வாய்ப்புகளை வழங்கி உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் மருத்தவர்களாக ஆக வேண்டும் என்பதே நமது இலக்கு. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
19 Sep 2025லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.