எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தர்பங்கா : நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முழுமையான அணுகுமுறையை பின்பற்றி அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் தர்பங்கா நகரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ. 12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
விழாவில், முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி,
தர்பங்காவில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பீகாரின் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். இது பீகாரின் மிதிலா, கோசி, திருஹட் பகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நேபாளத்தில் இருந்து வரும் நோயாளிகளும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். இது இங்கு பல வேலை வாய்ப்புகளையும் சுயவேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்கும் முன், பீகார் சுகாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்தது. முந்தைய ஆட்சியாளர்கள் சுகாதாரத்துக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்காததால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
மத்திய அரசு, நாட்டின் சுகாதாரம் தொடர்பாக முழுமையான அணுகுமுறையுடன் செயல்பட்டு வருகிறது. முதலில், நோயைத் தடுப்பது, இரண்டாவது நோயை சரியாகக் கண்டறிவது, மூன்றாவது மக்களுக்கு இலவசமான, மலிவான சிகிச்சை கிடைக்கச் செய்வது மற்றும் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்வது, நான்காவது, சிறிய நகரங்களில் கூட சிறந்த சிகிச்சை வசதிகளை வழங்குவது மற்றும் நாட்டில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறையை சமாளிப்பது, ஐந்தாவது, சுகாதார சேவைகளில் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது என திட்டமிட்ட ரீதியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
நாட்டு மக்களுக்கு சேவை செய்வதிலும் அவர்களின் நலன்களை காப்பதிலும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. எனவேதான், நாடு முழுவதும் 1.5 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கியா கோயில்களை நாடு முழுவதும் நாம் உருவாக்கி இருக்கிறோம். புற்றுநோய், நீரழிவு நோய் உள்ளிட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் சுமார் நான்கு கோடி மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் இல்லை என்றால், இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் திட்டத்தால் அவர்களின் வாழ்வில் இருந்த பெரும் கவலை நீங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்கள் சுமார் ரூ.1.25 லட்சம் கோடியை சேமித்துள்ளன.
நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் வரை நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைதான் இருந்தது. சிறந்த சிகிச்சைக்காக ஒவ்வொருவரும் டெல்லிக்கு வர வேண்டிய நிலை இருந்தது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 4-5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க ஆலோசனை நடத்தினார்கள். ஆனால், உரிய சிகிச்சை தொடங்கப்படவில்லை. எனது தலைமையிலான அரசு நாட்டின் அனைத்து மூலைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகளை தொடங்கி இருக்கிறது. தற்போது நாட்டில் சுமார் ஒரு டஜன் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 மருத்துவ இடங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நமது அரசு மருத்துவக் கல்வியை இந்தி மற்றும் இந்திய மொழிகளில் கற்கவும் வாய்ப்புகளை வழங்கி உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் மருத்தவர்களாக ஆக வேண்டும் என்பதே நமது இலக்கு. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஊழல், மோசடிகளை தோலுரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு பாராட்டு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
16 Nov 2025சென்னை : ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும் என்றும், தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-11-2025.
16 Nov 2025 -
பீகாரில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க இன்று தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவாரா?
16 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று
-
தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக த.வெ.க. ஆர்ப்பாட்டம்
16 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
-
10-வது முறையாக பீகார் முதல்வராக 19-ம் தேதி பதவியேற்கிறார் நிதிஷ்குமார்
16 Nov 2025பாட்னா : 10-வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 19-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்ட உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் : பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
16 Nov 2025பாட்னா : உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
விவசாயப்பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்த அதிபர் ட்ரம்ப்
16 Nov 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு ட்ரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை வித
-
நமது தேசத்தை பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
16 Nov 2025லக்னோ : நாட்டையும், மதத்தையும் பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை.
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியானது
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
-
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு முகாம்
16 Nov 2025சென்னை : சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
-
பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணியா? - துணை செயலாளர் நிர்மல் விளக்கம்
16 Nov 2025சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருபோதும் த.வெ.க. இணையாது என்று கட்சியின் துணை செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங். கூட்டணி உறுதி : செல்வபெருந்தகை திட்டவட்டம்
16 Nov 2025சென்னை : தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. த.வெ.க. பக்கம் காங்கிரஸ் செல்லும் என கூறப்பட்ட நிலையில் தி.மு.க.
-
சத்தீஷ்கர் மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரண் : முதல்வர் விஷ்ணு தியோ சாய் தகவல்
16 Nov 2025ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.
-
சமூக நல விடுதியில் மாணவரை தாக்கிய சக மாணவர்கள் விடுதியில் இருந்து நீக்கம்: கலெக்டர் உத்தரவு
16 Nov 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் : ஆர்ப்பாட்டத்தில் புஸ்சி ஆனந்த் பேச்சு
16 Nov 2025சென்னை : வாக்காளர் தீவிர திருத்தத்தைஎதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நேற்று நடைபெற்றது.
-
கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்
-
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: பெண் டாக்டர் உட்பட மேலும் 3 பேர் கைது
16 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயமடைந்தவர்களிடம் 7-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை
16 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
-
யுனிசெப் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
16 Nov 2025சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.
-
மெக்சிகோவில் அரசுக்கு எதிராக ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்
16 Nov 2025மெக்சிகோ-சிட்டி : மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
எஸ்.ஐ.ஆா். பணி தொடர்பான அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
16 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆா். விவகாரத்தில் தி.மு.க.வை கண்டித்து அதி.மு.க. இன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று கொடியேற்றம்
16 Nov 2025திருச்சானூர் : திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது.
-
அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு: சபரிமலைக்கு பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
16 Nov 2025திருவனந்தபுரம் : அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
பறிபோன 20,000 பேரின் வேலை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
16 Nov 2025சென்னை : 20,000 பேரின் வேலை பறிபோனதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.


