எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.
இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடருக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் பார்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் குஜராத் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பார்தீவ் படேல் 139 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி 2848 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________
மே.இ.தீவுகள் வீரர் விலகல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கணுக்கால் காயத்தால் விலகுவதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து - மேற்கிந்திய தீவு அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் அதில் இரண்டிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
பார்படாஸில் நடத்த முதல் ஆட்டத்தில் போது ஆண்ட்ரே ரஸ்ஸல் கணுக்காலில் காயமடைந்தார். அதன்பின்னர் காயத்தால் அவதிப்பட்ட அவர் 2-வது போட்டியில் விளையாடவில்லை. தொடரை தக்கவைக்க மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும், அவருக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் சமர் ஸ்பிரிங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டியின் போது கேப்டன் ஷாய் ஹோப்புடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மைதானத்தில் இருந்து வெளியேறிய பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் இரண்டு போட்டிகளில் இருந்து விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
___________________________________________________________
முதலிடத்தை பிடித்தார் அப்ரிடி
பாகிஸ்தானில் அடுத்தாண்டு சாம்பியஸ் டிராபி நடைபெறும் நிலையில் பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஷா அஃப்ரிடி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருநாள் தொடரை வென்றதற்கு உறுதுணையாக இருந்த ஷாகின் ஷா அஃப்ரிடி 12.62 சராசரியுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தற்போது மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் 2-வது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மஹராஜ் 3-வது இடத்திலும் உள்ளனர்.
மற்றொரு பாகிஸ்தான் வீரரான ஹாரிஸ் ராஃப் 3 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர்நாயகன் விருது வென்றதுடன் 14 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் 4-வது இடத்திலும், பும்ரா 6-வது இடத்திலும், முகமது சிராஜ் 8-வது இடத்திலும் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


