எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி நாளான ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து கூடுதல் செயல் அதிகாரி வெங்கையாசவுத்திரி, முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வெங்கையா சவுத்திரி பேசுகையில், 2025-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வைகுண்ட வாயில் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாமல் தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக சிறப்பு தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்படும். இந்த 10 நாட்களில் வி.ஐ.பி. தரிசனம் புரோட்டோகால் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும்.
சிபாரிசு கடிதங்களுக்கான வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் 10 நாட்களுக்கு கைக்குழந்தைகளுடன் பெற்றோர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ராணுவம், என்.ஆர்.ஐ.களுக்கான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது.
ஜனவரி 9-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி நாளான 10-ம் தேதி தங்க ரத ஊர்வலம், 11-ம்தேதி துவாதசியன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


