எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய், : சாம்பியன்ஸ் டிராபி விவகாரத்தில் பாகிஸ்தானின் நிபந்தனையை ஐ.சி.சி. ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில்...
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.
ஐ.சி.சி. ஆலோசனை...
ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகியுள்ளது. இதனிடையே சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டியது வரும் என்று ஐ.சி.சி. எச்சரித்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடக்கவில்லை என்றால் அந்த நாட்டுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்படும் என்பதால் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்ற ஒத்துக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு ஒப்புக்கொள்ள பாகிஸ்தான் நிபந்தனைகள் விதித்ததாகவும் கூறப்பட்டது.
துபாயில் நடத்த...
இந்நிலையில் ஐ.சி.சி.-ன் புதிய தலைவராக கடந்த 1-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட ஜெய்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் சில நிபந்தனைகளுடன் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் 2027-ம் ஆண்டு வரை ஐ.சி.சி. போட்டிகள் அனைத்திலும் இதே நடைமுறையை பின்பிற்ற வேண்டும் என்ற பாகிஸ்தானின் நிபந்தனையை ஐ.சி.சி. உள்ளிட்ட அனைத்து தரப்பும் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா வராது...
2027-ம் ஆண்டுக்கு முன்னதாக இந்தியாவில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரும் (2025-ம் ஆண்டு), 2026 டி20 உலகக்கோப்பையின் சில ஆட்டங்களும் இந்தியாவில் நடைபெற உள்ளன. அந்த தொடர்களில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வராது. தற்போது போன்று அந்த தொடர்களையும் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். இது குறித்து பி.சி.சி.ஐ. தரப்பில் எந்த கருத்துகளும் கூறப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடர் எவ்வாறு நடைபெறும் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


