எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அடிலெய்டு : அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
அணியில் மாற்றம்...
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றமாக தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுப்மன் கில், அஸ்வின் இடம் பிடித்தனர்.
இந்தியா பேட்டிங்...
இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது. லபுஸ்சேன் 20 ரன்களுடனும் , மெக்ஸ்வினி 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆஸி.க்கு நெருக்கடி...
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மெக்ஸ்வினியின் விக்கெட்டை பறிகொடுத்தது. அவர் பும்ராவின் பந்துவீச்சில் 39 ரன்களில் வீழ்ந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் சுமித்தும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவரையும் 2 ரன்களில் பும்ரா அவுட்டாக்கினார். பும்ரா சிறப்பாக பந்துவீசி 2-வது நாளின் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தார்.
டிராவிஸ் ஹெட் சதம்...
இருப்பினும் அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், லபுஸ்சேனுடன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த லபுஸ்சேன் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த பின் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார். அவருக்கு மறுமுனையில் இருந்து பெரிய அளவில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவர் சிறப்பாக விளையாடி அணி 300 ரன்களை எட்ட உதவினார். 111 பந்துகளில் சதம் அடித்து அசத்திய ஹெட் 140 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் சிராஜ் மற்றும் பும்ரா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்தியா திணறல்....
இதனையடுத்து, 157 பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்தும், விராட் கோலி 11 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில் 28 ரன்கள், கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலாண்ட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. ரிஷப் பந்த் 28 ரன்களுடனும், நிதீஷ் குமார் ரெட்டி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 29 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெட் - சிராஜ் வாக்குவாதம்
ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார். அதற்கு அடுத்த 4-வது பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார். மேலும் டிராவிஸ் ஹெட்டை நோக்கி ஆக்ரோஷமாக கத்தியதுடன் 'போ' என்ற வகையில் சைகையும் காண்பித்தார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
சிராஜ் அதிவேக பந்துவீச்சு ?
இந்த போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது 25-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் அவர் வீசிய 5-வது பந்து 181.6 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டதாக காட்டப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் சிராஜ் கிரிக்கெட்டில் அதி வேகமாக பந்து வீசியதாக தகவல்கள் பரவின. ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பந்தின் வேகம் அவ்வாறு காட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிவேகமாக பந்து வீசியவர்களின் சாதனை பட்டியலில் 161.3 கி.மீ. வேகத்துடன் சோயப் அக்தர் உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக நீடித்த சி.பி.ஐ. விசாரணை
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் நேற்று 3 -வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
4 மாவட்டங்களில் ரூ.48 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு பணிகள் துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்
31 Dec 2025சென்னை, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு அரசு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசாணை வெளியீடு
31 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-12-2025.
31 Dec 2025 -
ஒரே நாளில் இரண்டு முறை குறைந்தது தங்கத்தின் விலை: சவரன் ரூ. 99,840-க்கு விற்பனை
31 Dec 2025சென்னை, ஒரே நாளில் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது.
-
தமிழ்நாடு மக்களுக்கு நிம்மதியை வழங்கும் ஆண்டாக 2026 புத்தாண்டு அமையட்டும் : எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
31 Dec 2025சென்னை, புத்தாண்டு தமிழக மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கும் ஆண்டாக அமையட்டும் என்றும் நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும் வழங்கும் ஆண்டாக அமையட்ட
-
உலகிலேயே முதல் நாடாக கிரிபாட்டி தீவில் பிறந்தது புத்தாண்டு
31 Dec 2025கிரிபாட்டி, உலகிலேயே முதல் நாடாக 2026-ஐ கிரிபாட்டி தீவு வரவேற்று கொண்டாடியது.
-
நியூசிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
31 Dec 2025வெலிங்டன், 2026 புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் நியூசிலாந்து வரவேற்றது.
-
சாலை வரி விலக்கு நீட்டிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி
31 Dec 2025சென்னை, சாலை வரி விலக்கு நீட்டிப்பு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.
-
சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்..? தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கேள்வி
31 Dec 2025சென்னை, போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை
31 Dec 2025சென்னை, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
-
ஆபரேஷன் சிந்தூரின்போது சீனா மத்தியஸ்தம் செய்ததா? இந்தியா திட்டவட்டமாக மறுப்பு
31 Dec 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின் போது மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறி வரும் நிலையில் தற்போது சீனாவும் இதே கருத்தை கூறியுள்ளதை இந்தியா திட்டவட
-
தமிழக சட்டசபை தேர்தல்: விருப்ப மனுக்கள் வழங்கும் கால அவகாசத்தை நீட்டித்த காங்கிரஸ்
31 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசத்தை ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மீண்டும் இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க.
-
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா? காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பதில்
31 Dec 2025காரைக்குடி, காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பிப்ரவரி மாதமே தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு
-
தமிழகத்தில் 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் வரி விலக்கு நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
31 Dec 2025சென்னை, தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான 100 சதவீதம் சாலை வரி விலக்கு 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
-
இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு: பிரதமர் மோடியின் இரங்கல் கடிதம் கலீதா ஜியா மகனிடம் ஒப்படைப்பு
31 Dec 2025டாக்கா, மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா நகரத்துக்குச் சென்ற நிலையில் பிரதமர்
-
அதிபர் ட்ரம்ப் அரசுக்கு பதிலடி: அமெரிக்கர்கள் மீது பயணத்தடை விதித்தது 2 ஆப்பிரிக்க நாடுகள்...!
31 Dec 2025மாலி, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய 2 நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன.
-
ஏற்றமிகு ஆண்டாக 2026 அமையட்டும்: முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து: நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்
31 Dec 2025சென்னை, 2025 ஆண்டில் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டங்களுக்கு குறைவே இல்லை என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வ
-
பிறந்தது 2026 புத்தாண்டு: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
31 Dec 2025புதுடெல்லி, 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்
31 Dec 2025சென்னை, சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமா...? த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியுள்ளார்.
-
2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு முழுவதும் டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் துவக்கம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
-
கல்வி நிதி விடுவிப்பதை தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம்: மத்திய அமைச்சர் மீது கனிமொழி விமர்சனம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ. 2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ.க.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை ஜன. 6-ம் தேதி கூடுகிறது
31 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



