எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அடிலெய்டு : அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
அணியில் மாற்றம்...
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றமாக தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுப்மன் கில், அஸ்வின் இடம் பிடித்தனர்.
இந்தியா பேட்டிங்...
இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது. லபுஸ்சேன் 20 ரன்களுடனும் , மெக்ஸ்வினி 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆஸி.க்கு நெருக்கடி...
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மெக்ஸ்வினியின் விக்கெட்டை பறிகொடுத்தது. அவர் பும்ராவின் பந்துவீச்சில் 39 ரன்களில் வீழ்ந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் சுமித்தும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவரையும் 2 ரன்களில் பும்ரா அவுட்டாக்கினார். பும்ரா சிறப்பாக பந்துவீசி 2-வது நாளின் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தார்.
டிராவிஸ் ஹெட் சதம்...
இருப்பினும் அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், லபுஸ்சேனுடன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த லபுஸ்சேன் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த பின் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார். அவருக்கு மறுமுனையில் இருந்து பெரிய அளவில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவர் சிறப்பாக விளையாடி அணி 300 ரன்களை எட்ட உதவினார். 111 பந்துகளில் சதம் அடித்து அசத்திய ஹெட் 140 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் சிராஜ் மற்றும் பும்ரா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்தியா திணறல்....
இதனையடுத்து, 157 பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்தும், விராட் கோலி 11 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில் 28 ரன்கள், கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலாண்ட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. ரிஷப் பந்த் 28 ரன்களுடனும், நிதீஷ் குமார் ரெட்டி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 29 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெட் - சிராஜ் வாக்குவாதம்
ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார். அதற்கு அடுத்த 4-வது பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார். மேலும் டிராவிஸ் ஹெட்டை நோக்கி ஆக்ரோஷமாக கத்தியதுடன் 'போ' என்ற வகையில் சைகையும் காண்பித்தார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
சிராஜ் அதிவேக பந்துவீச்சு ?
இந்த போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது 25-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் அவர் வீசிய 5-வது பந்து 181.6 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டதாக காட்டப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் சிராஜ் கிரிக்கெட்டில் அதி வேகமாக பந்து வீசியதாக தகவல்கள் பரவின. ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பந்தின் வேகம் அவ்வாறு காட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிவேகமாக பந்து வீசியவர்களின் சாதனை பட்டியலில் 161.3 கி.மீ. வேகத்துடன் சோயப் அக்தர் உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
குகேஷ் தரமான பதிலடி
28 Oct 2025அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு அனுமதியா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
28 Oct 2025சென்னை : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஐ.சி.சி. பேட்டிங் தரவரிசை: ஸ்மிருதி தொடர்ந்து முதலிடம்
28 Oct 2025துபாய் : இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஐ.சி.சி.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
மகளிர் உலக கோப்பை முதல் அரையிறுதி: இங்கி., - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
28 Oct 2025கவுகாத்தி : 13-வது ஐ.சி.சி.
-
ஆஸி.,க்கு எதிரான டி-20 தொடரை வெற்றியுடன் துவங்குமா இந்தியா? _ கான்பெராவில் இன்று முதல் போட்டி
28 Oct 2025கான்பெரா : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி என்ற ஆவல் இந்திய ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் முதல் போட்டி இன்று கான்பெராவில் ந
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
29 Oct 2025சென்னை : மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
தற்போது பிரதமர் பதவியோ, பீகார் முதல்வர் பதவியோ காலியாக இல்லை : பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு
29 Oct 2025பாட்னா : பீகார் முதல்வர் பதவியும், பிரதமர் பதவியும் தற்போது காலியாக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க ரூ.48.33 கோடியில் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு அமைப்பு
29 Oct 2025சென்னை : பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
29 Oct 2025மைசூரு : கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7 ஆயிரத்து 135 கனஅடி நீர் திறக்கப்பட்டது.


