Idhayam Matrimony

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைப்பிடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      தமிழகம்
Fairman 2023 06 13

Source: provided

ராமேஸ்வரம் : தமிழக மீனவர்கள் 8 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

ராமேசுவரம் அருகே மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 324 விசைப்படகுகள் அனுமதி டோக்கன் பெற்று சுமார் 1,600 மீனவர்கள் கடலுக்குச் சென்றன. 

இதில் கார்த்திக் ராஜா, சகாய ஆண்ட்ரிஸ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள் நேற்று அதிகாலை நெடுந்தீவு அருக இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் சிறைப்பிடிக்கப்பட்டது.

படகுகளிலிருந்த கண்ணன், காளி, முத்துராஜ், பத்ரப்பன், யாசின், சேசு, ராமகிருஷ்ணன், வேலு ஆகிய 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறையிலுள்ள இலங்கை கடற்படை முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். 

8 மீனவர்களும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. மேலும், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 69 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்து 537 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து