எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: சட்டமன்ற நாட்களை குறைக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 376-ல், கழக ஆட்சியில் சட்டமன்றம் குறைந்தது 100 நாட்களுக்கு மேல் முறையாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2021-ம் ஆண்டில் 29 நாட்களும், 2022-ம் ஆண்டில் 33 நாட்களும், 2023-ம் ஆண்டில் 29 நாட்களும், 2024-ம் ஆண்டில் 18 நாட்களும் சட்டமன்றம் நடைபெற்றுள்ளது. அதாவது 1,365 நாட்களில் வெறும் 109 நாட்கள் மட்டுமே சட்டமன்றம் கூடியுள்ளது. அதுவும், குறிப்பாக குளிர்கால கூட்டத் தொடரை இரண்டே நாளில் முடித்து சாதனை படைத்துள்ள அரசு தி.மு.க. அரசு. இந்த வாக்குறுதியில் கூட தி.மு.க. இரட்டை வேடத்தை கடைபிடிப்பது ஆட்சி அலங்கோலத்தின் உச்சகட்டம்.
ஒவ்வொரு சர்க்கார் அலுவலகமும் ஜனநாயகத்தின் பயிற்சிக் கூடமாக ஆக வேண்டும். அப்பொழுதுதான் ஜனநாயகம் வளரும் என்றார் பேரறிஞர் அண்ணா. போறிஞர் அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக சொல்லிக் கொண்டு, ஜனநாயகத்தின் மையமாக விளங்கும் சட்டமன்றத்திலேயே ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் மனக்குமுறலை மக்கள் பிரதிநிதிகள் மூலம் ஜனநாயக ரீதியில் வலியுறுத்தும் இடமாக விளங்கும் சட்டமன்றத்தை இனி வருங்காலங்களிலாவது அதிக நாட்கள் கூட்டவும்; ஆட்சியின் அவலங்களை, மக்களின் குறைகளை சுட்டிக்காட்டும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பினை வழங்கவும் நடவடிக்கை எடுத்து, ஜனநாயகம் தழைத்தோங்குவதை உறுதி செய்ய வேண்டுமென்று முதல்-அமைச்சரை அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ


