எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல கால்பந்து கிளப் அணியான லிவர்பூல் அணியை எலான் மஸ்க் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலக வரலாற்றில் 500 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையை கடந்த டிசம்பரில் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், எலான் மஸ்க்கின் தந்தை எர்ரோல் மஸ்க் கூறியதாவது., நான் இது குறித்து கமெண்ட் தெரிவிக்க முடியாது. அவர்கள் விலையை ஏற்றிவிடுவார்கள். லிவர்பூல் அணியை வாங்குவாரென்றால் அவருக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால், அதற்காக அவர் வாங்கிவிடுவார் என்று சொல்லமுடியாது. யாராக இருந்தாலும் வாங்கமுடியும் எனில் அவரும் வாங்குவார் என்றார். தற்போது, லிவர்பூல் அணியை எஃப்எஸ்ஜி (ஃபென்வே ஸ்போர்ட்ஸ் குரூப்) வசமிருக்கிறது. அந்த அணியை விற்கும் எண்ணம் இல்லை ஆனால் வெளியிலிருந்து யாரவது முதலீடு செய்தால் அதற்கு சம்மதம் என தெரிவித்திருந்தார்கள்.
_______________________________________________________________________________
ஆப்கான் ஆலோசகராக யூனிஸ்
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடருக்கான அணிகளை வரும் 12-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்காக ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக பாகிஸ்தான் முன்னாள் வீரரான யூனிஸ் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யூனிஸ் கான் பாகிஸ்தான் அணிக்காக 118 டெஸ்ட், 265 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அறிவிப்பை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.
_______________________________________________________________________________
தடகள சம்மேளனத்திற்கு தலைவர்
இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சண்டிகாரில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல் நாளில் 2025-2029-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. 2002-ம் ஆண்டு பூசனில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றவரான பஞ்சாப்பை சேர்ந்த 51 வயது பகதூர் சிங் சாகூ புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் திடீரென ஒதுங்கியதால் பகதூர் சிங் போட்டியின்றி தேர்வானார்.
_______________________________________________________________________________
சிட்னி தண்டர்ஸ் வீரர்கள் விலகல்
ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற டி20 போட்டியான பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் வீரர்கள் பலர் காயத்தால் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதனால், அணியில் ஆள் பற்றாக்குறையால் அணியின் உதவிப் பயிற்சியாளரே மீண்டும் மாற்று வீரராகக் களமிறங்கியுள்ளார். கடந்த 2 சீசன்களாக சிட்னி அணியின் பயிற்சியாளராக இருக்கும் 41 வயதான டேன் கிறிஸ்டியன், அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவராக காயத்தால் விலகி வருவதால் மாற்று வீரராக அணியில் இணைந்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்னதாக பெர்த் அணிக்கு எதிரான போட்டியில் மேலே அடிக்கப்பட்ட பந்தை பிடிக்க முயன்ற போது சிட்னி வீரர்கள் டேனியல் சாம்ஸ் மற்றும் பான்கிராப்ட் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சாம்ஸ் சுயநினைவை இழந்த நிலையில், பான்கிராஃப்ட்டுக்கு மூக்கு உடைந்தது மட்டுமின்றி தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களைத் தவிர்த்து தன்வீர் சங்கா தசைப் பிடிப்பாலும், ஜேசன் சங்கா கையில் காயத்தாலும் விலகியுள்ளனர். மேலும், 19 வயதான இளம் வீரர் சாம் கான்ஸ்டஸ் இந்தியாவுக்கு எதிரான பார்டர்- கவாஸ்கர் தொடரில் கலந்து கொண்டதாலும் வேறு மாற்று வீரர்கள் இன்றி, பயிற்சியாளர் டேன் கிறிஸ்டியன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவு
16 Jan 2025ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். தி.மு.க. - நா.த.க வேட்பாளர்கள் இன்ரு மனுதாக்கல் செய்கின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-01-2025
16 Jan 2025 -
அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதிய குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
16 Jan 2025புது தில்லி, அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
16 Jan 2025மதுரை, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
16 Jan 2025சென்னை, நாமக்கல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ரூ.500-க்கு கேஸ், 300 யூனிட் இலவச மின்சாரம்: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி
16 Jan 2025புதுடெல்லி, டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயு ரூ.500-க்கும், 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இலவச ரேஷன் கிட் வழங்கப்படும் என்று காங்ரஸ் கட்சி தெரிவித
-
ஒரு பவுன் தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை கடந்தது
16 Jan 2025சென்னை, தங்கம் விலை நேற்று (ஜன.16) மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்தது. இது நகை வாங்கும் சாமானியர்கள் மற்றும் இல்லதரசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
உத்தர பிரதேசம், வாரணாசியில் பிப். 15-ல் தொடங்குகிறது காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி: அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
16 Jan 2025புது டில்லி, மூன்றாம் ஆண்டு காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெறவுள்ளது என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்ம
-
ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் போட்டியிட முதல்வர் சந்திரபாபு நிபந்தனை
16 Jan 2025ஐதராபாத், ஆந்திர மாநிலத்தில் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் அல்லது மேயராக முடியும் என்று அந்த மாநில முதல்வர் என
-
போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சி: ரவுடி பாம் சரவணன் மீது போலீசார் துப்பாக்கி சூடு
16 Jan 2025சென்னை, காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடி பாம் சரவணனை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.
-
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
16 Jan 2025புதுடெல்லி, விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
16 Jan 2025சென்னை, கருணாநிதி அறக்கட்டளை சார்பில், நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை கடந்த 16-ம் தேதி 
-
சந்திரயான் - 4 திட்டத்திற்கு ஸ்பேடெக்ஸ் வெற்றி உதவும்: மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
16 Jan 2025பெங்களூரு, ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
-
மாடுபிடி வீரர்களை தேர்வு செய்வதில் பாரபட்சம்: ஜல்லிக்கட்டு விளையாட்டில் அரசியலை புகுத்தக்கூடாது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்
16 Jan 2025மதுரை, ஜல்லிக்கட்டு விளையாட்டில் அரசியல் புகுத்தாமல் நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் முட்கள் மீது படுத்து ஆசி வழங்கும் துறவி
16 Jan 2025பிரயாக்ராஜ், உத்தர பிரதேச மகா கும்பமேளாவிற்கு வந்திருந்த துறவி ஒருவர், முட்கள் மீது படுத்து மக்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
-
ஆந்திராவில் சேவல் சண்டை போட்டியில் பங்கேற்காத சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு
16 Jan 2025அமராவதி, ஆந்திராவில் சேவல் சண்டை போட்டியில் பங்கேற்காத சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு கிடைத்துள்ளது.
-
கர்நாடகாவில் கொள்ளை சம்பவம்: வங்கி ஊழியர் சுட்டுக்கொலை
16 Jan 2025பெங்களூரு, கர்நாடகாவில் வங்கி முன்பு நடந்த கொள்ளை சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: மணீஷ் சிசோடியா வேட்புமனு தாக்கல்
16 Jan 2025புதுடெல்லி, டெல்லி சட்டசபை தேர்தலில் மணீஷ் சிசோடியா தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.
-
அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்
16 Jan 2025வாஷிங்டன், அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.;
-
15 மாதங்களாக நீடித்த போர் முடிவுக்கு வருகிறது: இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்புதல்
16 Jan 2025டெல் அவிவ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 15 மாதங்களாக நீடித்த போர் முடிவுக்கு வருகிறது.
-
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோவுக்கு அண்ணாமலை வாழ்த்து
16 Jan 2025சென்னை, இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நடிகர் சயிப் அலிகான் மீது தாக்குதல்: மேற்குவங்க முதல்வர் மம்தா கவலை
16 Jan 2025கொல்கத்தா, நடிகர் சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதலில் வேதனை அடைந்ததாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
-
7 மாதங்களில் மட்டும் அயோத்தி ராமர் கோவிலில் 183 கோடி ரூபாய் காணிக்கை
16 Jan 2025புதுடெல்லி, அயோத்தி ராமர் கோவிலில் ஏழு மாதங்களில் ரூ.183 கோடி அளவில் காணிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதில் வெள்ளி, தங்கம் மற்றும் ரொக்கம் அடங்கும்.
-
கோவையில் யானை தாக்கி விவசாயி பலி
16 Jan 2025கோவை, கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார்.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாரதிய ஜனதா நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு
16 Jan 2025புது டெல்லி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்