எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 10 வருடங்களுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதன்படி நடைபெற்ற இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தடுப்பாட்டத்தில் கவனத்தை செலுத்தாமல் அதிரடியாக விளையாட முயற்சித்து முக்கியமான தருணங்களில் விக்கெட்டை தாரை வார்த்தார். இந்நிலையில் ரிஷப் பண்டிடம் உலகிலேயே மிகச்சிறந்த தடுப்பாட்டம் இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அஸ்வின் பேசியது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட் தடுப்பாட்டம் விளையாடி மிகவும் அரிதாகவே விக்கெட்டை இழப்பார். ஏனெனில் இந்த உலகிலேயே அவரிடம் சிறந்த தடுப்பாட்டம் இருக்கிறது. இப்போதெல்லாம் தடுப்பாட்டம் என்பது மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. அவருக்கு எதிராக வலைப் பயிற்சியில் நான் நிறைய பவுலிங் செய்துள்ளேன். அப்போது போல்ட், எட்ஜ், எல்.பி.டபிள்யூ., முறைகளில் அவர் அவுட் ஆனதில்லை. அந்த வகையில் தனது கைகளில் அவர் சிறந்த தடுப்பாட்டத்தை வைத்துள்ளார்." என்று கூறினார்.
_________________________________________________________________________
இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ்
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த தொடரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் லியுட்மிலா சாம்சோனோவா உடன் மோதினார். இந்த போட்டியில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் லியுட்மிலா சாம்சோனோவாவும், 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸும் கைப்பற்றினர்.
தொடர்ந்து நடைபெற்ற 3வது செட்டில் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸ் முன்னிலையில் இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லியுட்மிலா சாம்சோனோவா காயம் அடைந்தார். இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் மேடிசன் கீஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா - கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா ஆகியோரில் ஒருவரை சந்திப்பார்.
_________________________________________________________________________
தொடக்க வீரர்களாக கோலி, பில் சால்ட்
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது. அதுபோக ஏலத்தில் பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன் , புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களை வாங்கியுள்ளது.
விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 சீசன்களாக ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த அணிகளில் ஒன்றாக உள்ளது. அதனால் இம்முறை கோப்பையை வென்று ரசிகர்களின் நீண்ட கால ஏக்கத்தை அந்த அணி நீக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளரான ஆண்டி பிளவர் அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கான தங்களது திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
_________________________________________________________________________
செல்லப்பிராணியுடன் எம்.எஸ்.டோனி
ஓய்வுக்கு பின்னர் தனது குடும்பத்துடனும் செல்ல பிராணியுடனும் தோனி நேரத்தை செலவிட்டு வருகிறார். கிரிக்கெட் ஜாம்பவானும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுமான தோனி, கிரிக்கெட் ஆடுகளத்தில் தனது விளையாட்டு நுணுக்கங்களுக்காவும், கணநேரத்தில் முடிவு எடுக்கும் திறனுக்காகவும் பெரிதும் போற்றப்படுபவர். கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றநிலையில் சி.எஸ்.கே அணிக்காக ஐ.பி.எல்-லில் மட்டும் விளையாடி வருகிறார்.
ஓய்வுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். குறிப்பாக தனது மகள் ஜிவாவுடன் பொழுதுபோக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ள தோனி, மகளுடன் இணைந்து செல்லப்பிராணி பராமரிப்பில் ஈடுபட்டார். தனது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணி நாய்க்கு, தோனி 'சீப்பு'வை கொண்டு வாரி விட்டார். அருகில் உட்கார்ந்திருந்த ஜிவா, தந்தையின் நடவடிக்கையை பார்த்து சிரித்தப்படி நாயுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
_________________________________________________________________________
ஓய்வை அறிவித்தார் வருண் ஆரோன்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் சராசரியாக 145 கி.மீ.,வேகத்தில் பந்து வீசக்கூடியவர். இவர் இந்திய அணிக்காக 9 ஒருநாள் போட்டி மற்றும் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:- கடந்த 20 ஆண்டுகளாக, நான் வேகமாகப் பந்து வீசுவதில் தான் வாழ்ந்திருக்கிறேன், சுவாசித்திருக்கிறேன், செழித்திருக்கிறேன். இன்று, மிகுந்த நன்றியுடன், பிரதிநிதித்துவ கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.
மேலும் பிசிசிஐ மற்றும் மாநில அணியான ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி. தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பிசியோக்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் நன்றி. ஆரோன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு பங்கை வகித்ததற்காக தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பயிற்சியாளர்கள், அணி வீரர்கள் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்தார். வேகப்பந்து வீச்சுதான் எனது முதல் காதல். நான் மைதானத்தை விட்டு வெளியேறினாலும், அது எப்போதும் நான் யார் என்பதில் ஒரு பகுதியாகவே இருக்கும் என்று ஆரோன் கூறினார்.
_________________________________________________________________________
கிண்டல்களுக்கு ஸ்மித் பதில்
ஆஸி. டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன்னைப் பற்றிய மணல் காகித மோசடியாளர் (சேண்ட்பேப்பர்கேட்) கிண்டலுக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:- ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்தைக்கூற உரிமை இருக்கிறது. அவர்களுக்குப் பிடித்ததைக் கூறலாம். நான் எனது நிலையில் மிகவும் சௌகரியாகவே உணர்கிறேன். நீண்ட காலமாக எங்களது அணி நல்ல சூழ்நிலையில் இருக்கிறது. அனைவரும் தங்களது கருத்தினை கூறுவார்கள். நான் எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளிப்பேன். வெற்றியில் பங்கெடுத்தது மகிழ்ச்சி. பெர்த் தோல்விக்குப் பிறகு மீண்டு வந்தது சிறப்பாக இருந்தது. இது குழுவுக்கு கிடைத்த வெற்றி.
எங்களது பந்துவீச்சாளர்கள் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்கள். ஸ்காட் போலண்ட் வந்தவிதம் அற்புதமானது. அந்தக் கணத்தில் அவர் செய்தது எல்லாம் நம்பமுடியாதது. 1 ரன். ஆமாம், அந்த நேரத்தில் சிறிது வருத்தமாக இருந்தது. என்னுடைய நண்பர்களுக்கு மத்தியில் நான் 10ஆயிரம் ரன்களை கடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். காலேவில் (இலங்கை டெஸ்ட்) இதை முதல் விஷயமாக செய்து முடிப்பேன். தொடர் முழுவதும் என மனதை எந்தவிதமான நோக்கமுமின்றி திரிந்ததால் அதை இழந்துவிட்டேன். 10 ஆயிரம் ரன்களை தாண்டுவது மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான் என்றார். இலங்கை உடனான ஆஸி. டெஸ்ட் ஜன.29ஆம் தேதி தொடங்குகிறது.
_________________________________________________________________________
கேப்டனாக கோலி: கில்கிறிஸ்ட்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்ஷிப் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாவது:- ரோகித் சர்மா ஜூன் மாதம் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்லமாட்டார். அவரது இலக்கு அனேகமாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியாக இருக்கும். அது முடிந்ததும் ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன். இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பும்ரா இருக்க முடியுமா என்பது தெரியவில்லை. அது அவருக்கு சவாலானதாக இருக்கும். அதனால் அடுத்த கேப்டனாக யார் வருவார்? கோலியை மறுபடியும் கேப்டன்ஷிப்புக்கு கொண்டு வர முயற்சிப்பார்களா? என்னை கேட்டால் கோலி மீண்டும் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தியாவுக்கு இது சவாலான கால கட்டமாகும். மூத்த வீரர்கள் வெளியேறினால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளது. அதனால் 1 முதல் 11-வது வரை இந்த வரிசைக்கும் புதிய வீரர்களை கொண்டு வர முடியும். அதற்காக சர்வதேச போட்டியில் அது உடனடியாக வெற்றியை தேடி தரும் என்று அர்த்தம் கிடையாது. இந்திய அணிக்கு இது சற்று சவாலான நேரமாக இருக்கப்போகிறது. ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் அந்த நாட்டு பவுலர்கள் முழு உடல்தகுதியுடன் இருந்தால், நிச்சயம் ஆதிக்கம் செலுத்துவார்கள். இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
09 Mar 2026சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்து விற்பனையானது.
-
மீண்டும் தள்ளிப்போகிறதா? 'ஜனநாயகன்' திரைப்படம் மறு ஆய்வு ஒத்திவைப்பு
09 Mar 2026சென்னை, விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான மறு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு
09 Mar 2026தெஹ்ரான், ஈரானின் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது.
-
மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
09 Mar 2026சென்னை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
09 Mar 2026சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர், அ.தி.மு.க.
-
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விஜய் வாழ்த்து
09 Mar 2026சென்னை, டி-20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழக சட்டசபை தேர்தல் தேதி வரும் 15ம் தேதி வெளியாகிறது
09 Mar 2026சென்னை, வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
3 கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. தலைமையில் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026சென்னை, விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வழியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதி த,வெ,க, சா
-
சட்டசபை தேர்தல் நடைபெறும் 3 மாநிலங்களில் பா.ஜ.க. மத்திய பார்வையாளர்கள் நியமனம்
09 Mar 2026டெல்லி, மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூன்று மாநிலங்களுக்கு மத்திய பார்வையாளர்களை பா.ஜ.க. தலைவர் நிதின் நவீன் நியமித்தார்.
-
மேற்கு ஆசிய போர் பதற்றம்: பாராளுமன்ற விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026புதுடெல்லி, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் குறித்தும், அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி எத
-
சவுதியில் இந்தியர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை: இந்திய தூதரக அதிகாரி தகவல்
09 Mar 2026ரியாத், ஈரான் போர் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 'ஏவுகணை தாக்குதலில்' ஒரு இந்தியர் இறந்ததாக வெளியான செய்திகளை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்தது.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து: ராகுல் மீதான அவதூறு வழக்கு: வருகிற 12-ம் தேதி விசாரணை
09 Mar 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.
-
வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் ராமதாஸ் இல்லை: நீதிமன்றத்தில் அன்புமணி தரப்பில் மனு தாக்கல்
09 Mar 2026சென்னை, 87 வயதாகும் ராமதாஸ் மருத்துவ காரணங்களால் பா.ம.க.வின் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் : திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேச்சு
09 Mar 2026தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேசினார்.
-
பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
09 Mar 2026புதுடெல்லி, குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதாக
-
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மை வெற்றி: பிரதமராக பொறுப்பேற்கிறார் பாலேந்திர ஷா
09 Mar 2026காத்மண்டு, ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
-
ஈரான் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பார்லி.யில் ஜெய்சங்கர் விளக்கம்
09 Mar 2026புதுடெல்லி, ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் விவகாரத்தில், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே சரியான தீர்வைத் தரும் என்று பாராளுமன்றத்தில் மத்திய வ
-
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் ரூ. 5.08 கோடியில் அமைக்கப்பட்ட அகத்தியர் நகர் விளையாட்டு திடல்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
09 Mar 2026சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 5.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: காங்., வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் சிறப்பு குழு நாளை ஆலோசனை
09 Mar 2026சென்னை, காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் கொண்ட சிறப்பு குழு நாளை சென்னையில் ஆலோசனை நடத்துகிறது.
-
கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டல்: அமெரிக்காவில் தென்கொரியா 29 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
09 Mar 2026சியோல், தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்ப
-
கொச்சியில் நாளை நடைபெறவுள்ள என்.டி.ஏ. தேர்தல் பிரச்சார கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
09 Mar 2026கொச்சி, கொச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்.
-
கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: விலைவாசி உயர்வை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கை: பார்லி.யில் நிர்மலா சீதாராமன் பதில்
09 Mar 2026புதுடெல்லி, கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் சம்மன்
09 Mar 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் இன்று (மார்ச் 10) டெல்லி சி.பி.ஐ.
-
திருப்புவனமம் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது மதுரை நீதிமன்றம்
09 Mar 2026சிவகங்கை, மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைப்பதாக மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
09 Mar 2026அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.33 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.


