எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 5.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி, ஜானி பாட்ஷா தெருவில் 1.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நூலகமானது தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் புத்தக அலமாரிகள், 24 இருக்கை வசதிகளுடன் படிக்கும் பகுதி, 45 இருக்கை வசதிகளுடன் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வால்டாக்ஸ் சாலை, திருப்பள்ளி தெரு பகுதியில் 1.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54 பயணிகள் அமரும் வசதி, 6 எண்ணிக்கையிலான குளிர்சாதன இயந்திரங்கள், குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள "திருப்பள்ளி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்", ஏழு கிணறு, வால்டாக்ஸ் சாலை சண்முகம் தெருவில் 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள "முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்" ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொண்டித் தோப்பு அம்மன் கோவில் தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 2.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டடம், ஏழுகிணறுத் தெருவில் 1.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் ஆகியவற்றை துணை முதல்வர் திறந்து வைத்து மருத்துவ சேவை வசதிகளை பார்வையிட்டார்.
பின்னர் ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்மண்டபத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 60 பயணிகள் அமரும் வசதி, குளிர்சாதன இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகயுடன் கட்டப்பட்டுள்ள கல்மண்டபம் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை துணை முதல்வர் திறந்து வைத்தார்.
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு துணை முதல்வர் அகத்தியர் நகரில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 5.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள "அகத்தியர் நகர் விளையாட்டுத் திடலை" திறந்து வைத்து பார்வையிட்டு, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.
அகத்தியர் நகர் விளையாட்டு திடலில் 4,500 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்கள் கொண்ட உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில், பேட்மிண்டன் மைதானமும் மற்றும் முதல் தளத்தில் நவீன உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விளையாட்டு திடலில் வாலிபால் மைதானம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, யோகா பகுதி, சறுக்கு வளையம், செயற்கை புல்வெளி மூலம் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம், நீண்ட நடைபாதை, 8 வடிவ நடைபயிற்சி, கண்காணிப்பு கேமராக்கள், இருக்கை வசதிகள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.இளங்கோ, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 6.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இனமானப் பேராசிரியர் அன்பழகனார் சமூக நலக்கூடத்தை துணை முதல்வர் திறந்து வைத்து, திருமண மண்டபம், உணவருந்தும் கூடம் உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
09 Mar 2026சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்து விற்பனையானது.
-
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விஜய் வாழ்த்து
09 Mar 2026சென்னை, டி-20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு
09 Mar 2026தெஹ்ரான், ஈரானின் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது.
-
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் ரூ. 5.08 கோடியில் அமைக்கப்பட்ட அகத்தியர் நகர் விளையாட்டு திடல்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
09 Mar 2026சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 5.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
சட்டசபை தேர்தல் நடைபெறும் 3 மாநிலங்களில் பா.ஜ.க. மத்திய பார்வையாளர்கள் நியமனம்
09 Mar 2026டெல்லி, மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூன்று மாநிலங்களுக்கு மத்திய பார்வையாளர்களை பா.ஜ.க. தலைவர் நிதின் நவீன் நியமித்தார்.
-
கொச்சியில் நாளை நடைபெறவுள்ள என்.டி.ஏ. தேர்தல் பிரச்சார கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
09 Mar 2026கொச்சி, கொச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்.
-
வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் ராமதாஸ் இல்லை: நீதிமன்றத்தில் அன்புமணி தரப்பில் மனு தாக்கல்
09 Mar 2026சென்னை, 87 வயதாகும் ராமதாஸ் மருத்துவ காரணங்களால் பா.ம.க.வின் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை.
-
ஈரான் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பார்லி.யில் ஜெய்சங்கர் விளக்கம்
09 Mar 2026புதுடெல்லி, ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் விவகாரத்தில், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே சரியான தீர்வைத் தரும் என்று பாராளுமன்றத்தில் மத்திய வ
-
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மை வெற்றி: பிரதமராக பொறுப்பேற்கிறார் பாலேந்திர ஷா
09 Mar 2026காத்மண்டு, ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
-
கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: விலைவாசி உயர்வை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கை: பார்லி.யில் நிர்மலா சீதாராமன் பதில்
09 Mar 2026புதுடெல்லி, கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து: ராகுல் மீதான அவதூறு வழக்கு: வருகிற 12-ம் தேதி விசாரணை
09 Mar 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.
-
திருப்புவனமம் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது மதுரை நீதிமன்றம்
09 Mar 2026சிவகங்கை, மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைப்பதாக மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
09 Mar 2026அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.33 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
-
3 கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. தலைமையில் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026சென்னை, விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வழியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதி த,வெ,க, சா
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: காங்., வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் சிறப்பு குழு நாளை ஆலோசனை
09 Mar 2026சென்னை, காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் கொண்ட சிறப்பு குழு நாளை சென்னையில் ஆலோசனை நடத்துகிறது.
-
மீண்டும் தள்ளிப்போகிறதா? 'ஜனநாயகன்' திரைப்படம் மறு ஆய்வு ஒத்திவைப்பு
09 Mar 2026சென்னை, விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான மறு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டல்: அமெரிக்காவில் தென்கொரியா 29 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
09 Mar 2026சியோல், தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்ப
-
சவுதியில் இந்தியர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை: இந்திய தூதரக அதிகாரி தகவல்
09 Mar 2026ரியாத், ஈரான் போர் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 'ஏவுகணை தாக்குதலில்' ஒரு இந்தியர் இறந்ததாக வெளியான செய்திகளை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்தது.


