எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹர் கோப்பை (4 நாள் ஆட்டம்) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாடு- குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்று முதலில் பேட் செய்த குஜராத் அணி முதல் இன்னிங்சில் 380 ரன்களும், தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 413 ரன்னும் எடுத்தன.
தொடர்ந்து 33 ரன் பிந்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய குஜராத் அணி 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி கடைசி நாளில் ஒரு விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டம் டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக வீரர் ஜெயந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
________________________________________________________________________________________________
ஸ்டீவ் சுமித் அதிரடி சதம்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹென்ரிக்ஸ் தலைமையிலான சிட்னி சிக்சர்ஸ், ஆஷ்டன் டர்னர் தலைமையிலான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெர்த் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு தொடக்க வீரரான ஸ்டீவ் சுமித் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். பெர்த் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹென்ரிக்ஸ் 46 ரன்களும், துவாரசுயிஸ் 7 பந்துகளில் 23 ரன்களும் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிட்னி சிக்சர்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் சுமித் 121 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெர்த் அணியும் அதிரடியாக விளையாடியது. இருப்பினும் இலக்கை நெருங்க முடிந்ததே தவிர வெற்றி பெற முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் பெர்த் அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் வெற்றி பெற்றது. பெர்த் தரப்பில் ஆஷ்டன் டர்னர் 66 ரன்கள் அடித்தார். சிட்னி தரப்பில் சீன் அபோட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டீவ் சுமித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
________________________________________________________________________________________________
பும்ராவுக்கு மில்ஸ் பாராட்டு
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா எந்த அணிக்கு கிடைத்தாலும் அந்த அணி மிகவும் அதிர்ஷ்டமான ஒரு அணி என்று இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தைமல் மில்ஸ் பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பும்ரா போன்ற ஒரு வீரர் எந்த அணிக்கு கிடைத்தாலும் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்தான். ஏனெனில் பும்ராவால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருடன் இணைந்து விளையாடியபோது அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். போட்டியின் எந்த சூழலிலும் சிறப்பாக பந்துவீசும் ஒரு பவுலர் என்றால் என்னை பொறுத்தவரை அது பும்ராதான். அந்த அளவிற்கு அவர் ஒரு மிகச்சிறப்பான பந்துவீச்சாளர். அவரைப்போன்ற ஒரு பந்துவீச்சாளர் எந்த அணிக்கு கிடைத்தாலும் அந்த அணிக்கு அவர் சொத்தாக மாறுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக பந்துவீசும் அவர் தலைசிறந்த பவுலர்களின் பட்டியலில் தற்போதே இணைந்து விட்டார்" என்று கூறினார்.
________________________________________________________________________________________________
மேடிசன் கீஸ் சாம்பியன்
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டவரான மேடிசன் கீஸ் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. இறுதியில் 3-வது செட்டை கீஸ் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கீஸ் இந்த ஆட்டத்தில் 6-3, 4-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
________________________________________________________________________________________________
டு பிளெஸ்ஸி பிட்னஸ் ரகசியம்
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரரும் ஜே.எஸ்.கே (ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்) அணியின் கேப்டனுமான பாப் டு பிளெஸ்ஸி 41 வயதை நெருங்கினாலும் பிட்டாக இருக்கிறார். உடல்நலத்தில் அதீத அக்கறை காட்டும் டு பிளெஸ்ஸி கூறியதாவது: நான் எனது உடலை நன்கு புரிந்து கொள்கிறேன். பொதுவாகவே நாம் உடல்நலத்துடன் இருக்க வேண்டுமென்றால் அதிகமாக செயல்பட வேண்டுமென்ற தவறான கருத்து நிலவி வருகிறது. நான் அப்படியாக நினைக்கவில்லை. நான் தொடர்சியாக உடற்பயிற்சி செய்கிறேனே தவிர அதிகமாக செய்வதில்லை. இது உங்களது நேரத்தை சரியாக பயன்படுத்துவதைப் பொறுத்தது. நீங்கள் இளமையாக இருக்கும்போது நேரடியாக சென்று எதையும் செய்யலாம். நீங்கள் எதையும் வார்ம்-அப் செய்ய வேண்டியதில்லை.
எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தற்போது, ஐஸ் பாத், ஊட்டச்சத்து அதிக அளவு மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. பின்தசை தொடை நார்கள் மிகவும் முக்கியமானது. நீங்கள் வித்தியாசமாக பயிற்சி செய்யும்போது அவை மிருகமாக மாறும். அடுத்து தூக்கம் மிகவும் முக்கியம். நான் இளமையாக இருக்கும்போது அதைச் செய்யவில்லை. அப்போது முயற்சித்தபோது அது சரியாகவும் வேலை செய்யவில்லை. நீங்கள் பரிணமிக்க வேண்டும். பிட்டாக இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது. கடந்த 3 வருடமாக பேட்டிங்கில் முன்னேறி இருக்கிறேன். பயிற்சியிலும் அதேதான். அது நாம் பழக்கப்பட்ட மாதிரி இல்லை. எனது பிட்னஸ் சிறந்த தடகள வீரருடனும் என்னைவிட இளவயது நபர்களுடனும் போட்டியிட உதவுகிறது என்றார்.
________________________________________________________________________________________________
இலங்கை தொடரில் லயன்
நாதன் லயன் கூறியதாவது., எனக்கு விளக்கம் கூற கடினமாக இருக்கிறது. மருத்துவ பெயர்கள் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது. எனது இடுப்பில் உடல் உறுப்புகளை இணைக்கும் திரவம் அதிகமாக இருப்பதால் எனக்கு வலி அதிகமாக இருக்கிறது. எனக்கு முதல் டெஸ்ட்டிலிருந்தே இது இருக்கிறது. ஆனாலும், அது என்னை பந்துவீசுவதில் இருந்து தடுக்கவில்லை. நான் பந்துவீசும்போது இடுப்பு வலிக்கிறது. தற்போது பரவாயில்லாமல் இருக்கிறது. போட்டி முடிந்த பிறகு ஸ்கேன் செய்தேன். எல்லாம் சரியாக சென்றுக்கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை முதல் உடற்பயிற்சி செய்து வருகிறேன்.
மற்ற எதையும் தொடர்பு கொள்ளவில்லை. இலங்கை தொடரில் நான் 100 சதவிகிதம் உடல்நலத்துடன் இருப்பேன். முதலில் அது சுழல்பந்துக்கான சாதகமான களமென நினைத்தேன். 2022இல் தினேஷ் சண்டிமல் 206 ரன்கள் எடுத்த ஆடுகளம்போல் இருந்தது. 5 சுழல்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவார்கள் என்பது சந்தேகமே என்றார். முதல் டெஸ்ட்டு ஜன.29- பிப்.2வரையும் பிப்.6 -பிப்.10.வரை இரண்டாவது டெஸ்ட்டும் காலே மைதானத்தில் விளையாடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 14 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் 375 பொருட்களின் விலை மேலும் குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
20 Sep 2025கோவில்பட்டி, ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி.
-
சாலை விபத்தில் ஆசிரியை பலி: குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
20 Sep 2025விழுப்புரம், விழுப்புரத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.