எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![TN 2025-01-11](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/01/11/TN_2025-01-11.jpg?itok=VbxfCDmh)
Source: provided
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹர் கோப்பை (4 நாள் ஆட்டம்) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாடு- குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்று முதலில் பேட் செய்த குஜராத் அணி முதல் இன்னிங்சில் 380 ரன்களும், தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 413 ரன்னும் எடுத்தன.
தொடர்ந்து 33 ரன் பிந்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய குஜராத் அணி 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி கடைசி நாளில் ஒரு விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டம் டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக வீரர் ஜெயந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
________________________________________________________________________________________________
ஸ்டீவ் சுமித் அதிரடி சதம்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹென்ரிக்ஸ் தலைமையிலான சிட்னி சிக்சர்ஸ், ஆஷ்டன் டர்னர் தலைமையிலான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெர்த் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு தொடக்க வீரரான ஸ்டீவ் சுமித் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். பெர்த் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹென்ரிக்ஸ் 46 ரன்களும், துவாரசுயிஸ் 7 பந்துகளில் 23 ரன்களும் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிட்னி சிக்சர்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் சுமித் 121 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெர்த் அணியும் அதிரடியாக விளையாடியது. இருப்பினும் இலக்கை நெருங்க முடிந்ததே தவிர வெற்றி பெற முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் பெர்த் அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் வெற்றி பெற்றது. பெர்த் தரப்பில் ஆஷ்டன் டர்னர் 66 ரன்கள் அடித்தார். சிட்னி தரப்பில் சீன் அபோட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டீவ் சுமித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
________________________________________________________________________________________________
பும்ராவுக்கு மில்ஸ் பாராட்டு
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா எந்த அணிக்கு கிடைத்தாலும் அந்த அணி மிகவும் அதிர்ஷ்டமான ஒரு அணி என்று இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தைமல் மில்ஸ் பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பும்ரா போன்ற ஒரு வீரர் எந்த அணிக்கு கிடைத்தாலும் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்தான். ஏனெனில் பும்ராவால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருடன் இணைந்து விளையாடியபோது அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். போட்டியின் எந்த சூழலிலும் சிறப்பாக பந்துவீசும் ஒரு பவுலர் என்றால் என்னை பொறுத்தவரை அது பும்ராதான். அந்த அளவிற்கு அவர் ஒரு மிகச்சிறப்பான பந்துவீச்சாளர். அவரைப்போன்ற ஒரு பந்துவீச்சாளர் எந்த அணிக்கு கிடைத்தாலும் அந்த அணிக்கு அவர் சொத்தாக மாறுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக பந்துவீசும் அவர் தலைசிறந்த பவுலர்களின் பட்டியலில் தற்போதே இணைந்து விட்டார்" என்று கூறினார்.
________________________________________________________________________________________________
மேடிசன் கீஸ் சாம்பியன்
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டவரான மேடிசன் கீஸ் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. இறுதியில் 3-வது செட்டை கீஸ் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கீஸ் இந்த ஆட்டத்தில் 6-3, 4-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
________________________________________________________________________________________________
டு பிளெஸ்ஸி பிட்னஸ் ரகசியம்
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரரும் ஜே.எஸ்.கே (ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்) அணியின் கேப்டனுமான பாப் டு பிளெஸ்ஸி 41 வயதை நெருங்கினாலும் பிட்டாக இருக்கிறார். உடல்நலத்தில் அதீத அக்கறை காட்டும் டு பிளெஸ்ஸி கூறியதாவது: நான் எனது உடலை நன்கு புரிந்து கொள்கிறேன். பொதுவாகவே நாம் உடல்நலத்துடன் இருக்க வேண்டுமென்றால் அதிகமாக செயல்பட வேண்டுமென்ற தவறான கருத்து நிலவி வருகிறது. நான் அப்படியாக நினைக்கவில்லை. நான் தொடர்சியாக உடற்பயிற்சி செய்கிறேனே தவிர அதிகமாக செய்வதில்லை. இது உங்களது நேரத்தை சரியாக பயன்படுத்துவதைப் பொறுத்தது. நீங்கள் இளமையாக இருக்கும்போது நேரடியாக சென்று எதையும் செய்யலாம். நீங்கள் எதையும் வார்ம்-அப் செய்ய வேண்டியதில்லை.
எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தற்போது, ஐஸ் பாத், ஊட்டச்சத்து அதிக அளவு மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. பின்தசை தொடை நார்கள் மிகவும் முக்கியமானது. நீங்கள் வித்தியாசமாக பயிற்சி செய்யும்போது அவை மிருகமாக மாறும். அடுத்து தூக்கம் மிகவும் முக்கியம். நான் இளமையாக இருக்கும்போது அதைச் செய்யவில்லை. அப்போது முயற்சித்தபோது அது சரியாகவும் வேலை செய்யவில்லை. நீங்கள் பரிணமிக்க வேண்டும். பிட்டாக இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது. கடந்த 3 வருடமாக பேட்டிங்கில் முன்னேறி இருக்கிறேன். பயிற்சியிலும் அதேதான். அது நாம் பழக்கப்பட்ட மாதிரி இல்லை. எனது பிட்னஸ் சிறந்த தடகள வீரருடனும் என்னைவிட இளவயது நபர்களுடனும் போட்டியிட உதவுகிறது என்றார்.
________________________________________________________________________________________________
இலங்கை தொடரில் லயன்
நாதன் லயன் கூறியதாவது., எனக்கு விளக்கம் கூற கடினமாக இருக்கிறது. மருத்துவ பெயர்கள் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது. எனது இடுப்பில் உடல் உறுப்புகளை இணைக்கும் திரவம் அதிகமாக இருப்பதால் எனக்கு வலி அதிகமாக இருக்கிறது. எனக்கு முதல் டெஸ்ட்டிலிருந்தே இது இருக்கிறது. ஆனாலும், அது என்னை பந்துவீசுவதில் இருந்து தடுக்கவில்லை. நான் பந்துவீசும்போது இடுப்பு வலிக்கிறது. தற்போது பரவாயில்லாமல் இருக்கிறது. போட்டி முடிந்த பிறகு ஸ்கேன் செய்தேன். எல்லாம் சரியாக சென்றுக்கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை முதல் உடற்பயிற்சி செய்து வருகிறேன்.
மற்ற எதையும் தொடர்பு கொள்ளவில்லை. இலங்கை தொடரில் நான் 100 சதவிகிதம் உடல்நலத்துடன் இருப்பேன். முதலில் அது சுழல்பந்துக்கான சாதகமான களமென நினைத்தேன். 2022இல் தினேஷ் சண்டிமல் 206 ரன்கள் எடுத்த ஆடுகளம்போல் இருந்தது. 5 சுழல்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவார்கள் என்பது சந்தேகமே என்றார். முதல் டெஸ்ட்டு ஜன.29- பிப்.2வரையும் பிப்.6 -பிப்.10.வரை இரண்டாவது டெஸ்ட்டும் காலே மைதானத்தில் விளையாடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 10 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 4 months 2 weeks ago |
-
இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் டெண்டுல்கர்..!
17 Jan 2025மும்பை : கிரிக்கெட்டின் கடவுள் என போற்றக்கூடிய சச்சின் டெண்டுல்கர் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 மவாட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jan 2025சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி
-
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
17 Jan 2025சென்னை: எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
-
யாருக்கும் ஆதரவும் இல்லை; ஈரோடு கிழக்கில் போட்டி இல்லை: த.வெ.க. அறிவிப்பு
17 Jan 2025சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை.. ஆதரவும் இல்லை என்று தவெக அறிவித்துள்ளது.
-
பரந்தூர் செல்ல த.வெ.க. தலைவர் விஜய் திட்டம்: ஏகனாபுரத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு
17 Jan 2025சென்னை : த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கான ஏற்பாடுகளை ஏகனாபுரத்தில் கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-01-2025.
17 Jan 2025 -
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்
17 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை வரும் பயணிகளுக்காக வரும் 19ம் தேதி ஞாயிறு மண்டபம் - சென்னை எழும்பூர் (06048), தூத்துக்குடி - தாம்பரம் (06168),மதுரை - சென்னை எழ
-
தலைசிறந்த தேசியவாதி: எம்.ஜி.ஆருக்கு அண்ணாமலை புகழாரம்
17 Jan 2025சென்னை : பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதி எம்.ஜி.ஆர். என அண்ணாமலை கூறியுள்ளார்.
-
இந்தியா வர்த்தக மைய கண்காட்சி; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
17 Jan 2025புதுடெல்லி: டெல்லியில் 6 நாட்கள் நடைபெறும் இந்தியா வர்த்தக மைய கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வியில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு: அமைச்சர் தகவல்
17 Jan 2025சென்னை : மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பரிசுடன் ரூ.2,000 வழங்க உத்தரவிட முடியாது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
17 Jan 2025சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பரிசு தொகுப்பு வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் உத்
-
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னை திரும்புவோர் பயண திட்டத்தை மாற்றி அமைக்குமாறு அரசு வேண்டுகோள்
17 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றிருப்பவர்கள், சென்னை திரும்புவதற்கான பயண திட்டத்தை மாற்றி அமைக்குமாறு போக்குவரத்துத் துறை வேண்டுகோள் விடுத்துள
-
ஈரோடு கிழக்கில் இருமுனை போட்டி
17 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க.
-
புனேவில் விபத்து - 9 பேர் பலி
17 Jan 2025புனே : புனேவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியதில் 9 பேர் பலியானார்கள்.
-
குமரி கல்லூரி மாணவர் கொலை வழக்கில் காதலி குற்றவாளி என தீர்ப்பு: தண்டனை இன்று அறிவிப்பு
17 Jan 2025திருவனந்தபுரம் : கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவரை காதலி கொலை செய்த வழக்கில் காதலி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
-
எய்ம்ஸ் மருத்துவமனையில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல்
17 Jan 2025புதுடில்லி : மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்டு, அங்கு சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளி
-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
17 Jan 2025சேலம் : நீர் வரத்தை விட வெளியேற்றம் அதிகம் காரணமாக , மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. &nbs
-
எளியவர்களின் விருப்பத்துக்குரியவர்: எம்.ஜி.ஆருக்கு கமல்ஹாசன் புகழாரம்
17 Jan 2025சென்னை : ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்
17 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சந்திரபாபு
17 Jan 2025புதுடெல்லி : ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து வாழ்த்தினார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட
-
தொடர்ந்து 3-வது ஆண்டாக சரியும் சீனா மக்கள் தொகை
17 Jan 2025பெய்ஜிங் : சீனாவில் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
-
தவறி விழுந்ததில் போப் பிரான்சிஸ் காயம்
17 Jan 2025ரோம் : போப் பிரான்சிஸ் கடந்த ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
-
மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்: எம்.ஜி.ஆருக்கு ஆந்திர துணை முதல்வர் புகழாரம்
17 Jan 2025சென்னை : தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் எம்.ஜி.ஆர்: என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் கார் பந்தயம்: தமிழக அரசுக்கு அஜித்குமார் பாராட்டு
17 Jan 2025சென்னை : சென்னை கார் பந்தயம் நடத்திய தமிழக அரசுக்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
108-வது பிறந்தநாள்: சென்னையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை
17 Jan 2025சென்னை: 108-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.