முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலமுறை கொலை சதிகளில் இருந்து நாங்கள் தப்பினோம் ஷேக் ஹசீனா பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      உலகம்
Sheikh-Hasina 2024 08 13

Source: provided

டாக்கா: வங்காளதேசத்தில் பல்வேறு முறை படுகொலைக்கான சதி திட்டங்கள் தீட்டப்பட்டதாக தெரிவித்துள்ள ஷேக் ஹசீனா, 20-25 நிமிடங்களில் மரணத்தில் இருந்து நாங்கள் உயிர் தப்பினோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் கடந்த ஆண்டு ஜூலையில் வன்முறையாக வெடித்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராட்டத்திற்கு ஒரு மாதத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இதனால், நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது. தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். வங்காள தேசத்தின் டாக்கா நகரில் இருந்து, சகோதரியுடன் ராணுவ விமானத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா புறப்பட்டார். இந்தியாவில் அவர் தஞ்சமடைந்துள்ளார். அவரை வங்காளதேசத்திடம் திரும்ப ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது. இந்நிலையில், ஹசீனா பேசிய ஆடியோ உரை ஒன்று, வங்காளதேச அவாமி லீக் கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அவருடைய இளைய சகோதரி ஷேக் ரெஹானா மற்றும் ஹசீனா இருவரும் 20 முதல் 25 நிமிடங்களில் மரணம் நேரிடுவதில் இருந்து தப்பிய விவரங்களை கூறியுள்ளார். கடந்த காலங்களில் பல்வேறு முறை அவரை கொல்ல சதி திட்டங்கள் தீட்டப்பட்டன என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். அந்த பதிவில், ஆகஸ்டு 21-ந்தேதி படுகொலையில் இருந்து தப்பினேன் என்றே நான் உணர்கிறேன். கொதலிபாராவில் நடந்த பெரிய வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பினேன். 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதியும் படுகொலையில் இருந்து உயிர் தப்பி இந்த முறை நான் உயிர் பிழைத்து இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் என்னை கொல்ல எப்படி திட்டமிட்டனர் என்பது உங்களுக்கே பின்னர் தெரிந்திருக்கும். ஆனால், நான் ஏதேனும் செய்ய வேண்டும் என இறைவன் விரும்புகிறார். அதனாலேயே நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து