முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையால் 10 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

செவ்வாய்க்கிழமை, 23 டிசம்பர் 2025      தமிழகம்
Fisher-Boat 2025-10-09

ராமேஸ்வரம், எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது. இதனால், வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும், இந்த விவகாரத்தில் உரிய தீர்வுகள் இன்னும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தனர். மீனவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து