எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஞ்சி, ஜார்க்கண்ட் தலைநகரில் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் பயணிகள் மயக்கமடைந்தனர்.
கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ரயில் நிலையங்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
புது டில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 18 பேர் சனிக்கிழமை இரவு பலியாகினர். இந்த அசம்பாவிதம் நாடெங்கிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை ரயில்வே துறை எடுத்து வருகிறது.
இதனிடையே, ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜுக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை(பிப். 16) பயணிகள் அதிகமானோர் திரண்டிருந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக, பயணிகள் சிலர் மயக்கமடைந்து விழுந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கமடைந்த 5 பயணிகளுக்கும் மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் உடல்நிலை சீரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஞ்சியிலிருந்து டில்லிக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் செல்ல அதிகமான பயணிகள் ராஞ்சி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) மாலை திரண்டிருந்தனர். அப்போது ஜார்க்கண்ட் சுவர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் (12817) ரயில் அங்கு வந்தடைந்தது. அதில் ஏற்கெனவே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில், ராஞ்சி ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளும் அந்த ரயிலில் ஏற முற்பட்டபோது, டிக்கெட் எடுக்காமல் அந்த ரயிலில் ஏறிக்கொண்ட பயணிகள் சிலர் பெட்டிகளின் கதவுகளை மூடியதுடன் திறக்க முடியாதபடி பூட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்னொருபுறம், டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏற காத்திருந்த பயனிகளுக்கு இது பெரும் தலைவலியாக உருவெடுத்தது. அவர்களால் அந்த ரயில் பெட்டிகளில் ஏற முடியவில்லை. இந்த பரபரப்பான சூழலில், ஒருசில குடும்பங்களில், சிலர் ரயிலில் ஏறிவிட்டனர் எனினும், பிறர் ஏற முடியாமல் தவித்தனர். ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் ரயில் கதவுகளை திறக்க முயற்சிப்பதற்குள் ரயில் புறப்படத் தயாரானது. நல்வாய்ப்பாக எவ்வித உயிர்சேதமும் காயமோ யாருக்கும் ஏற்படவில்லை.
இதனையடுத்து, ரயிலில் ஏற்கெனவே உள்ள பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து டிக்கெட்டுகள் வழங்குமாறு ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


