எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெறச்செய்ய அக்கட்சியின் விவசாயிகள் பிரிவின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட மாநில நிர்வாகிகள் அனைவரும் பச்சைத்துண்டுகள் அணிந்து கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. விவசாய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விவசாயப்பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. விவசாய பிரிவுத்தலைவர் டி. ஆர்.அன்பழகன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் சி.பொன்னையன், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் எம்.பி. நா.பாலகங்கா, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்டச்செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், தாடி மா.ராசு காந்தி, காஞ்சி பன்னிர்செல்வம் முன்னாள் எம்.பி. சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் விவசாயப்பிரிவு துணை செயலாளர் செல்வன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை வரும் 24 ம்தேதி சிறப்பாக கொண்டாடுவது என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெறச்செய்து இ.பி.எஸ்.ஸை மீண்டும் முதல்வராக்குவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


