எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அமலாக்கத் துறை உள்நோக்கத்தோடு, ஆதாரங்கள் ஏதுமின்றிவெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதாகவும் உரிய சட்டநடவடிக்கை எடுப்பேன் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்.வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
சென்னை அமலாக்க இயக்குநரகம் கடந்த 6-ம்தேதி சென்னை தமிழ்நாடுமாநில வாணிபக் கழக தலைமை அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறுஇடங்களில் சோதனை நடத்தியது.அதில் மார்ச் 13 ம்தேதி மாலை சோதனை தொடர்பாக வெளியிட்ட செய்திகுறிப்பில் பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள், பல்வேறு பிரிவுகளில்பதியப்பட்டதாக குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த முதல் தகவல் அறிக்கை எந்தஆண்டில் பதிவு செய்யப்பட்டது என்ற விவரங்கள் குறிப்பிட்டுதெரிவிக்கப்படவில்லை. கடைப்பணியாளர் களின் பணியிட மாறுதல் உத்தரவுகள், அவர்களின் குடும்பசூழ்நிலை, மருத்துவ காரணங்கள், பணியில் தவறு செய்யும் பணியாளர்களைவிடுவித்து அப்பணியிடங்களுக்கு மாற்றுப் பணியாளர்களை நியமித்தல்,மனமொத்த மாறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பணியிடமாறுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மூடப்பட்ட கடைகளில்பணியாற்றிய 2,157 கடைப்பணியாளர்களுக்கு 2023 ஆம் ஆண்டு கலந்தாய்வுமூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சரியானமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி பிப்ரவரி 2023-இல் கோரப்பட்டு, பெறப்பட்டஒப்பந்தப்புள்ளிகளில் குறைவான தொகை கோரிய ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம்இறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டது. கே.ஒய்.சி. விவரங்கள், வங்கி வரைவோலைகள் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களின் அனைத்துவிவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்பே ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்நிறுவனத்திற்கும் மற்றும் அரசிற்கும் வரவேண்டிய வருவாய் கணக்கிடப்பட்டுஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சில போக்குவரத்து ஒப்பந்தம்தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ளன. எனவே இதில் முறைகேடுகள் எதுவுமில்லை. கடந்த காலங்களில் நடைபெற்ற மதுக்கூட ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள்அனைத்தும் ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.ஒவ்வொரு பாரிலும் குறுமத் தொகை முறையாகநிர்ணயிக்கப்பட்டு குறுமத் தொகைக்கு மேல் கூடுதலாக கேட்கப்படுபவர்களுக்கு பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே, 2020-2021 ஆம் ஆண்டுநடைபெற்ற பார் ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் நடைபெற்றன. 2023 டிசம்பர் மாதம் மாவட்ட மேலாளரால் பார் ஒப்பந்தங்கள் ஆன்லன் மூலமாக வரவேற்கப்பட்டு, அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் நேர்முக உதவியாளர் (பொது), உதவிஆணையர் (கலால்) மற்றும் மாவட்ட மேலாளர், தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் ஆகியோர் அடங்கிய மாவட்ட கலைக்டரால் அமைக்கப்பட்டகூராய்வுக் குழுவால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு கலைக்டர் மற்றும் விண்ணப்பதாரர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் திறக்கப்பட்டு இறுதிசெய்யப்பட்டன.
இதுவரை ஆன்லைன் மூலமாக பார் ஒப்பந்தநடவடிக்கைகள் மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளன. சட்ட விதிகளுக்குஉட்பட்டே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்தமுறை மூலம் டாஸ்மாக்நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஒரு வணிக நிறுவனம். வணிகநோக்கில்மதுபான நிறுவனங்களிடமிருந்து உயரதிகாரிகளுக்குப் பல கோரிக்கைகள்வைக்கப்பட்டாலும், அக்கோரிக்கைகள் சட்ட, திட்ட விதிமுறைக்களுக்குட்பட்டேபரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாநிலவாணிபக் கழகம் எவ்வித பாரபட்சமும் இன்றி உரிய வழிமுறையின் அடிப்படையில் ஒவ்வொரு மதுபான வகையின் மூன்று மாத விற்பனை அளவினைகணக்கிட்டும், அவற்றுடன் கடைசி மாத விற்பனை அளவினை கணக்கிட்டும்,அதனடிப்படையிலான கொள்முதல் வெளிபடையானஆன்லைனில்உரிய வழிமுறையில் மட்டுமே வழங்கப்படுகிறது. மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபுட்டிகள் தயாரிப்புநிறுவனங்களுக்கிடையே பணபரிமாற்றங்கள்நடைபெற்றதாக தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் அந்த இரு நிறுவனங்களுக்கு இடையேயானது எனினும், இந்த பணப்பரிமாற்றங்களைப் பயன்படுத்தி தமிழ்நாடுமாநில வாணிப நிறுவனத்திடம் இருந்து கூடுதல் கொள்முதலைப்பெற்றதாக தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. மேலும், இதில் ரூபாய் 1000 கோடிமுறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு எவ்வித முகாந்திரமும்இல்லை. இவ்வாறு உள்நோக்கத்தோடு ஆதாரங்கள் ஏதுமின்றிமுன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதோடு,இதுதொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறி்யுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


