எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது. அ.தி.மு.க. கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை பேச அனுமதிப்பது இல்லை, அவர்கள் பேசும்போது சபாநாயகர் அப்பாவு அடிக்கடி குறுக்கீடு செய்கிறார், ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் கூறுகிறார், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரலையில் ஒளிப்பரப்புவுது இல்லை, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கொண்டு வந்தார்.
ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆதரவு: சட்டப்பேரவை விதிகளின்படி, இந்த தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள 35 எம்.எல்.ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ செங்கோட்டையனும் எழுந்து நின்று தனது ஆதரவைத் தெரிவித்தார். அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்பாவு வெளியேறினார்...
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதைத் தெடர்ந்து, அவையிலிருந்து அப்பாவு வெளியேறினார். இதையடுத்து, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவையை வழிநடத்தினார்.
இ.பி.எஸ். குற்றச்சாட்டு:
இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசுகையில், “திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையில், ஆண்டுக்கு நூறு நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் 400 நாட்கள் சட்டப்பேரவை நடந்திருக்க வேண்டும். ஆனால் 116 நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்றம் நடைபெற்றுள்ளது. மேலும், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தின்போதும், எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளைக் கேட்பதில்லை. ஒரே நாளில் 4 துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடத்தப்படுகிறது” என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
தீர்மானம் தோல்வி:
தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நடத்தப்பட்டது. தீர்மானத்துக்கு தி.மு.க. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க. எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவாதத்தில், பாஜக, பாமக உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. குரல் வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
டிவிஷன் முறை எண்ணிக்கை...
எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது எண்ணிக்கை முறையிலான வாக்கெடுப்பு ஆகும். சட்டப்பேரவையில் மொத்தம் 6 டிவிஷன்கள் உள்ளன. டிவிஷன் வாரியாக இந்த தீர்மானத்தை எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்ற எண்ணிக்கை அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி சட்டப்பேரவை செயலர் முன்நின்று இந்த டிவிஷன் வாக்கெடுப்பை நடத்தினார். டிவிஷன் முறையிலும் சபாநாயகர் மீது அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. சபாநாயகர் மீது அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 63 பேர் ஆதரவளித்திருந்த நிலையில், 154 பேர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால், சட்டப்பேரவையில் அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதனால், சபாநாயகரை நீக்கக்கோரி அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் வந்தமர்ந்து, அடுத்த அலுவல்களை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். இனி தொடர்ந்து அவர் வழக்கம்போல் அவையை வழிநடத்துவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-07-2025.
19 Jul 2025 -
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
'மேக் இன் இந்தியா' வெறும் பேச்சாகவே இருக்கும்: ராகுல்
19 Jul 2025புதுடில்லி :.
-
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குல்: இந்தியர்கள் 2 பேர் உயிரிழப்பு
19 Jul 2025நியாமி, மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவ
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை: எலான்
19 Jul 2025நியூயார்க் : அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை ஆனால் வேறு வழியில்லாமல் கட்சித் தொடங்கினேன் என எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
நீதிபதி யஷ்வந்த் பதவி நீக்கத்துக்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு : மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தகவல்
19 Jul 2025புதுடில்லி : ''பண மூட்டை பிரச்னையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன'' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவி
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் நியமன காலியிடங்கள் அதிகரிப்பு அறிவிப்பு ரத்து: ஐகோர்ட்
19 Jul 2025சென்னை : இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் நியமனத்துக்கான தேர்வு நடைமுறைகள் முடிந்த பின், காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து மருத்துவ தேர்வு வாரியம் பிறப்
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 23-ம் தேதி பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் நரேந்திரமோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு
19 Jul 2025புதுடெல்லி, பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மெற்கொள்கிறார்.