எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கைது செய்து அழைத்துச் சென்றபோது வாகனத்தில் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் சென்னை கிண்டியில் நடந்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜா. இவரை மடிப்பாக்கம் காவல் நிலைய எஸ்.ஐ. தலைமையிலான தனிப்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர். அதிகாலை 2 மணியளவில் வேளச்சேரிக்கு அழைத்துவந்தனர். அங்கே அவரிடம் குற்றம் சம்பந்தமாக வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
பின்னர் வழக்கில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தை கைப்பற்ற வேண்டி கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு அந்த ரவுடியை அழைத்துச் சென்றனர். அப்போது அந்த ரவுடி கிண்டி காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்படையினரை தாக்கியுள்ளார். இதனால், தற்காப்புக்காக காவல் உதவி ஆய்வாளர் ரவுடியின் வலது கால் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். காயமடைந்து விழுந்த ரவுடியை போலீஸார் பிடித்தனர்.
பின்னர் அந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த நிகழ்வில் J7 வேளச்சேரி காவல் நிலைய ரோந்து வாகனத்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது. அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


