எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்’ என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
7 மாநிலங்களை...
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் உள்பட 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்றக் கூட்டம் நிறைவடைந்தது.
விரிவாக விவாதிக்க...
பின்னர், திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்துப் பேசினார். அதன் விவரம்: மத்திய அரசு தொகுதி மறுவரையறை மேற்கொள்வதற்கு முன்னர், அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்பினரை உள்ளடக்கிய ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில், வெளிப்படைத் தன்மையுடன் விரிவாக விவாதிக்க வேண்டும். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்.
சட்டத்திருத்தத்தை...
மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள், மத்திய அரசின் தொகுதி மறுவரையறையால் தண்டிக்கப்படக் கூடாது. இதை உறுதி செய்ய தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு செய்ய வேண்டும். தொகுதி மறுவரையறை தொடர்பாக, மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ள, கூட்டு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மையக் குழு, பாராளுமன்ற உத்திகளை ஒருங்கிணைத்து செயல்படும்.
மாநில மக்களிடம்...
நடப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, பாராளுமன்றக் குழு பிரதமரைச் சந்தித்து, இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சமர்ப்பிக்கும். கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநிலங்கள், தொகுதி மறுவரையறைக்கு எதிராக அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு தெரிவிப்பர். கடந்த காலத்தில் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்த தொகுதி மறுவரையறை விவரங்கள் மற்றும் மத்திய அரசு தற்போது மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுவரையறை குறித்த விவரங்களை அந்தந்த மாநில மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை கூட்டு நடவடிக்கைக் குழு மேற்கொள்ளும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
பரவலாக வரவேற்பு...
மேலும் அவர், “இந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் வரமுடியாத சூழ்நிலை. அவர்கள் பங்கேற்கவில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடந்துள்ளது. கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்துக்கு பரவலாக வரவேற்பு கிடைத்துள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறைக்காக அனைவரும் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பியுள்ளார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள். கூட்டு நடவடிக்கைக் குழுவில் பிற மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக உறுதி அளித்துள்ளனர்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு...
பாராளுமன்றத்தில் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டபோது, தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான், மகளிர் மசோதா நடைமுறைக்கு வரும் என தெளிவாகக் கூறினா். ஜனநாயகத்தின் உச்சபட்ச அதிகாரம் பெற்றது பாராளுமன்றம். அங்கு, கட்டாயம் தொகுதி மறுவரையறை செய்யப்படும். அதன்பிறகு 33 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், அண்மையில் உள்துறை அமைச்சர் தமிழக வருகையின்போது, தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படாது என்று தெரிவித்திருக்கிறார்.
உரிமைகளை கேட்கிறோம்...
தொகுதி மறுவரையறை குறித்து எவ்வித தெளிவையும் ஏற்படுத்தாமல், குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பதால்தான், ஒரு தெளிவான பதிலை மத்திய அரசு தர வேண்டும் என்று வலியுறுத்துகிறார். நாங்கள் எங்களுக்கான உரிமைகளை கேட்கிறோம். இது எந்த மாநிலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. நான் என்னுடைய உரிமையைக் கேட்பது என்பது, உங்களுக்கு எதிராக பேசுகிறேன் என்று அர்த்தமில்லை. மத்திய அரசின் இந்த அநீதியால், ஒருசில மாநிலங்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, நாங்கள் சரியான தொகுதி மறுவரையைறைக் கோருகிறோம் என்று கனிமொழி தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்றோர்:
1) கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்.
2) தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
3) பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.
4) கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.
5) பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி. ராமாராவ்.
6) பிஜூ ஜனதா தளம் - சஞ்சய் குமார் தாஸ் பர்மா.
7) பிஜூ ஜனதா தள கட்சி - அமர் பட்நாயக்.
8) பஞ்சாப் சிரோன்மணி அகாலி தளம் - பல்வீந்தர் சிங்.
9) கேரள இ.கம்யூ. மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம்.
10) கேரள இ.யூ.மு.லீக் - மாநில பொதுச்செயலாளர் சலாம்.
11) கேரள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி - பிரேம சந்திரன்.
12) கேரள இ.தே.காங். மாநில தலைவர் கும்பக்குடி சுதாகரன்.
13) தெலங்கானா அகில இ.மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் - இம்தியாஸ் ஜலில்.
14) கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே. மணி.
15) தெலங்கானா இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட்.
160 கேரளா காங்கிரஸ் - பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ்.
நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்
1) மத்திய அரசு தொகுதி மறுவரையறை பணியையும் வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும்.
2) 1971 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும்.
3) மத்திய அரசு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
4) குறிப்பிட்ட மாநிலங்களின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இதுகுறித்த கருத்துகளை எடுத்துரைப்பர்.
5) மேலும் பிரதமர் மோடியிடம் இதுகுறித்து கூட்டாக எம்.பி.க்கள் வலியுறுத்துவார்கள்.
6) அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றத் தீர்மானங்களைக் கொண்டுவந்து மத்திய அரசுக்குத் தெரிவிப்பர்.
7) தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை மக்களிடையே எடுத்துரைப்போம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
08 May 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்ரீநகர் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களில் பாகிஸ்தான நடத்த இருந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா
08 May 2025புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர் உள்ளிட்ட இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
-
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் * 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்கள் * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 May 2025திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்க
-
பாராளுமன்றத்தை கூட்ட ராகுல் காந்தி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, பாராளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
சென்னை வெற்றியால் நெருக்கடி: பிளே ஆப்-க்கு முன்னேறுமா கொல்கத்தா?
08 May 2025கொல்கத்தா, சென்னை வெற்றியால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வெற்றி...
-
ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல்
08 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது
-
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காத பிரதமர் மோடி..!
08 May 2025டெல்லி, எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றம் தொடர்பாக நேற்று (மே 8) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: கிரண் ரிஜிஜு
08 May 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற வி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2025
09 May 2025 -
இந்தியா - பாக். இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் அமெரிக்க அதிபர் அறிவிப்பு
08 May 2025வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி
08 May 2025புதுடில்லி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
மனவலிமைதான் முக்கியம்: இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை
08 May 2025சென்னை, தொழில்நுட்ப ரீதியாக திறமை வாய்ந்தவர்கள் எப்போதும் ரன்களை குவிப்பதில்லை. மனவலிமை முக்கியம் என எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் - சச்சின் வரவேற்பு
08 May 2025ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுளள பதிவில் கூறியுள்ளதாவது: ஒற்றுமையில் நாம் அச்சமற்று இருக்கிறோம்.
-
ரூ.2 ஆயிரம் கோடி பத்திரங்கள் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு
08 May 2025சென்னை, தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2,000 கோடி மதிப்பில் 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி மற்றும் 15 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி ஏ
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அரியலூர் மாவட்டம் முதலிடம்
08 May 2025சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.
-
மாணவர்களுக்கு ஆளுமைமிக்க நாற்காலி காத்து கொண்டிக்கிறது அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு
08 May 2025சென்னை: மாணவச் செல்வங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
பதற்றத்தை ஏற்படுத்தவில்லை: பதிலடி மட்டுமே இந்தியா கொடுக்கிறது: மத்திய அரசு
08 May 2025புதுடெல்லி, இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, பதிலடி மட்டுமே கொடுக்கிறது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
சட்டப்பேரவை பேச்சை முழுமையாக வெளியிட்டால் தி.மு.க. ஆட்சி பாதாளத்துக்கு போய்விடும் - இ.பி.எஸ்
08 May 2025சேலம்: சட்டப்பேரவையில் நான் பேசுவதை முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்துக்கு போய்விடும்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
ஜெய்சங்கருடன் சவுதி அமைச்சர் திடீர் சந்திப்பு
08 May 2025புதுடெல்லி: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபை நேற்று (மே 8) இந
-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
08 May 2025சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடிக்கு ஆர்.எஸ் பாரதி பதில் அளித்துள்ளார்.
-
டெல்லியே திரும்பிப் பார்க்கும் அளவில் நம்முடைய மாதிரிப்பள்ளி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
08 May 2025திருச்சி: டெல்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதிய இலக்கை நோக்கிச்செல்லுங்கள்: மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
08 May 2025சென்னை: பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
-
போர்ப் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம்
08 May 2025அகமதாபாத், போர்ப் பதற்றம் எதிரொலியால் பஞ்சாப் - மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் திரைப்படங்கள்: ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, ஓ.டி.டி.
-
இந்தியாவில் இணையசேவை: எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ஒப்புதல்
08 May 2025டெல்லி, இந்தியாவில் சேவையைத் தொடங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.