எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோபால்கஞ்ச், பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 33 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் ஆசிரியர் பணிக்கு புதிதாக 33 பேர் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த பணி நியமனம் முறைகேடாக நடந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்ததும் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரியான யோகேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, 2010-ம் ஆண்டுக்கு பின்னர் புதிதாக 33 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இதற்கு முன் அந்த பதவிகளை வகித்து வந்தவர்கள், பணி ஓய்வு பெறவோ அல்லது மரணம் அடையவோ இல்லை. அந்த பதவிகள் காலியாகி விட்டன என முறைப்படி அறிவிக்கப்படவும் இல்லை.
இந்த சூழலில், பணியிடங்கள் காலி என மாவட்ட மேல்முறையீட்டு ஆணையம் அறிவித்து, அவற்றில் 33 ஆசிரியர்களை பணியில் அமர்த்தியது. இந்த உத்தரவுக்கு எதிராக மாவட்ட கல்வி அதிகாரி சார்பில் மாநில மேல்முறையீட்டு ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீது நடந்த விசாரணையில், அந்த ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள தொகையை திரும்ப பெறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அந்த ஆசிரியர்கள் ஐகோர்ட்டுக்கு சென்றனர். எனினும், மாநில மேல்முறையீட்டு ஆணையத்துக்கு ஆதரவாக, ஆணையம் அளித்த உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்தது. இதன் தொடர்ச்சியாக, ஆசிரியர் பணியிடங்களில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட 33 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


