எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : முதல் போட்டியில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் விளையாடியது ஒரு டிரைலர் தான் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
18வது சீசன்...
ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
பலமான அணி...
இந்த தொடரில் தற்போது வரை 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே முடிந்துள்ளன. இந்தமுறை பல முன்னணி வீரர்கள் அணி மாறியுள்ளதால், எந்த அணி பலமான அணியாக இருக்கும்? எந்தெந்த வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடுவார்கள்? எந்த அணி அதிக வெற்றிகளை குவிக்கும்? என்பது போன்ற பல்வேறு விவாதங்களும் தற்போது சமூக வலைதளத்தில் நடைபெற்று வருகின்றன.
200+ ரன்கள்...
கடந்த ஐ.பி.எல் தொடரில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஐதராபாத் அணி மிக எளிதாக ஒரு இன்னிங்சில் 200+ ரன்களை குவித்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அவர்களது தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா தான். அபிஷேக் மற்றும் ஹெட் ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அந்த அணி மிக எளிதாக ரன்கள் குவிக்கிறது.
ஆபத்தான ஜோடி...
இதன் காரணமாக அந்த அணி வீரர்களுக்கு பந்துவீச எதிரணி வீரர்கள் தடுமாறுகிறார்கள். அபிஷேக்-ஹெட் இணை எதிரணிக்கு மிக ஆபத்தான தொடக்க வீரர்களாக திகழ்கிறார்கள். இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் தொடருக்கான ஆபத்தான தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஜோடிதான் திகழ்வார்கள் என சி.எஸ்.கே முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
டிரைலர் தான்...
முதல் போட்டியில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் விளையாடியது ஒரு டிரைலர் தான். இனிமேல் அவர்கள் இன்னும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இப்படியே சென்றால் இந்த தொடரின் மிகவும் ஆபத்தான (டேஞ்சரான) தொடக்க ஜோடி இவர்களாகத்தான் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


