எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஐதராபாத்: அபிஷேக் சர்மா அதிரடியால் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
பஞ்சாப் அதிரடி...
முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். பஞ்சாப் அணி 66 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. பிரியன்ஷ் ஆர்யா சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் 36 ரன்களில் (2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தல்...
அதன் பின், பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 23 பந்துகளில் 42 ரன்கள் (7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா 27 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 36 பந்துகளில் 82 ரன்கள் (6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள்) எடுத்து ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஸ்டாய்னிஸ் அதிரடி...
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 11 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். அதில், முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 4 ஓவர்கள் வீசிய முகமது ஷமி விக்கெட் ஏதும் எடுக்காமல் 75 ரன்களை வாரி வழங்கினார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், ஈசன் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ராக்கெட் வேகத்தில்...
பின்னர், 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ஆட்டம் தொடங்கியது முதலே பஞ்சாப் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். இருவரும் காட்டிய அதிரடியில் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் இருவரும் இணைந்து 83 ரன்களை சேர்த்தனர். அபிஷேக் சர்மா கொடுத்த பல கேட்ச் வாய்ப்புகளை பஞ்சாப் வீரர்கள் பிடிக்கத் தவறினர். இதனால், ரன் வேகமாக ஏறியது. 19 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா அசத்தினார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு கொடுத்த டிராவிஸ் ஹெட்டும் அரைசதம் விளாசினார்.
நங்கூரமிட்ட அபிஷேக்...
பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 8 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்ததும், ட்ராவிஸ் ஹெட் 66 ரன்களில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) பஞ்சாப் வீரர் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் வெளியேறினாலும், மற்றொரு முனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் விளையாடி பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த அபிஷேக் சர்மா 40 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
அபார வெற்றி...
ஐதராபாத் அணி 222 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் (14 பவுண்டரி, 10 சிக்ஸர்) எடுத்து அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவருக்குப் பின்னர் வந்த கிளாசன் 21 ரன்களும், இஷன் கிஷன் 9 ரன்களும் எடுத்து ஐதராபாத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். முடிவில், 18.3 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்ச சேஸிங்...
ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது அதிகபட்ச சேஸிங்காகவும் இது அமைந்தது. 6 போட்டிகளில் விளையாடிய ஐதராபாத் அணிக்கு இது 2வது வெற்றியாகும். 5-வது போட்டியில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.
அபிஷேக் சர்மா சாதனை...
இதற்கு முன்னதாக, ஐதராபாத் அணிக்கு அதிக ரன்கள் அடித்தவரான முன்னாள் கேப்டன் டேவிட் வார்னரின் (126 ரன்கள்) சாதனையையும், இந்தியர்களில் அதிக ரன் அடித்தவரான கேஎல். ராகுலின் (132 ரன்கள்) சாதனையையும் முறியடித்தார் அபிஷேக் சர்மா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
24 Apr 2025வாஷிங்டன், அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்றும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் செல்வதைத் தவிர்க்குமாறும் அமெரிக்கா ப
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அஞ்சலி
24 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 9 பேர் உயிரிழப்பு
24 Apr 2025கீவ், உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
24 Apr 2025சென்னை: தங்கம் நேற்று காலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 72,040-க்கும் ஒரு கிராம் ரூ. 9,005-க்கும் விற்பனையானது.
-
முடிவுக்கு வந்த 65 ஆண்டு கால ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா
24 Apr 2025புதுடெல்லி, முடிவுக்கு வந்தது 65 ஆண்டு கால சிந்து நதி நீர் ஒப்பந்தம். இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியுள்ளது இந்தியா.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஜம்மு-காஷ்மீரை விட்டு 6 மணி நேரத்தில் வெளியேறிய 3,337 சுற்றுலாப்பயணிகள்
24 Apr 2025பஹல்காம், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ள பலர் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2025
24 Apr 2025 -
29-ம் தேதி சாகை வார்த்தலுடன் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா தொடக்கம்
24 Apr 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா வருகிற 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியு
-
தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்
24 Apr 2025சென்னை: பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
வரும் நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
24 Apr 2025சென்னை, வருகின்ற நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் ரூ.40 கோடி செலவில் யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி மையம்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
24 Apr 2025சென்னை, சென்னை செனாய் நகர் பகுதியில், அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி மையம் 4
-
பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கு முடக்கம்
24 Apr 2025பஹல்காம்: பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தின் கணக்கை இந்திய பயனர்கள் காண முடியாதவாறு மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.
-
காஷ்மீரில் தாக்குதலில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த இதய நோயாளியான மனைவியிடம் தகவல் கொடுக்கவில்லை
24 Apr 2025காஷ்மீர், மத்திய கிழக்கு நாடுகளில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த ராமச்சந்திரன் (68) தனது மனைவியுடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் குடியேறி உள்ளார்.
-
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: நடுக்கடலில் மீட்புப் பணி ஒத்திகை
24 Apr 2025காஷ்மீர், காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக நடுக்கடலில் பாதுகாப்பு, மீட்புப் பணியினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்து நாடு திரும்பிய ராகுல்காந்தி
24 Apr 2025ஸ்ரீநகர், அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினார் ராகுல் காந்தி.
-
கடலூரில் 40 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்
24 Apr 2025கடலூர், கடலூரில் தனியார் சொகுசு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-
பாகிஸ்தானை தொடர்ந்து இந்தியா ஏவுகணை சோதனை
24 Apr 2025புதுடெல்லி, பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானை தொடர்ந்து கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனை நடத்தி
-
12,110 ஊராட்சிகளில் நூலகம்: அமைச்சர் பெரியசாமி தகவல்
24 Apr 2025சென்னை, தமிழகம் முழுவதும் 12, 110 ஊராட்சிகளில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது என்று சட்டசபைில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் உள்ள பாக். தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்
24 Apr 2025ஸ்ரீநகர், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையும் மூடப்பட்டுள்ள நிலையில் பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெ
-
குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு
24 Apr 2025சென்னை, கோடை விடுமுறையையொட்டி மே 1 முதல் 15 வரை குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்களுக்கு விடுமுறை என சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
-
வணிக வரி, பத்திரப்பதிவு துறை மூலம் அரசுக்கு ரூ.5.80 லட்சம் கோடி வருவாய்: சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி தகவல்
24 Apr 2025சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் 'வணிக வரி, பத்திரப்பதிவு துறை வாயிலாக அரசுக்கு ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
உண்மை அன்புக்கான சான்று: தாஜ்மகாலை புகழ்ந்த ஜே.டி.வான்ஸ்
24 Apr 2025லக்னோ, தாஜ்மகால் உண்மை அன்புக்கான சான்று என்று ஜே.டி.வான்ஸ் புகழாரம் சூட்டினார்.
-
இ.பி.எஸ்.க்கு செங்கோட்டையன் திடீர் புகழாரம்
24 Apr 2025சென்னை, சட்டசபையில் பேச்சை தொடங்கும்போது, எடப்பாடியாரை வணங்கி பேச்சை தொடங்குகிறேன் என செங்கோட்டையன் பேசினார்.
-
யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
24 Apr 2025சென்னை, யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் மயோனைஸ் உற்பத்தி, விற்பனைக்கு தடை: தமிழக அரசு உத்தரவு
24 Apr 2025சென்னை, தமிழகத்தில் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.