எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஒரே வீரருக்கு 2 விருதுகள்
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் யார் யார் என்னென்ன பரிசுகள் பெற்றார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. 2024-25 சீசனுக்கான இந்தியன் சூப்பர் லீக் போட்டிகள் நேற்று முன்தினம் (ஏப்.12) உடன் முடிவடைந்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மோகன் பகான் அணி 2-1 என பெங்களூருவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. தொடர்ச்சியாக 2-ஆவது முறையாக மோகன் பகான் அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்தவருக்கு தங்கக் காலணி விருது வழங்கப்படுகிறது. சிறந்த வீரருக்கு தங்கப் பந்து விருதும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு விருதுகளும் இந்தமுறை நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர் அலாயெதீன் அஜாருக்கு வழங்கப்பட்டுள்ளன. மொராக்காவைச் சேர்ந்த இவர் நார்த் ஈஸ்ட் அணிக்காக பார்வேட் வீரராக விளையாடுகிறார்.
கம்பேக் தருவேன்: தீபக் சஹார்
முன்னாள் சி.எஸ்.கே. வீரரான 32 வயதாகும் தீபக் சஹார் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். 86 ஐ.பி.எல். போட்டிகளில் 81 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ப்ந்தினை ஸ்விங் செய்வதால் பவர்பிளேவில் அதிகமான விக்கெட்டுகளை எடுப்பதில் சிறந்தவராக இருக்கிறார். இந்நிலையில் தீபக் சஹார் பேசியதாவது: எனக்கு கடந்த 3 ஆண்டுகளாக காயம் ஏற்பட்டன. காயம் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இது நடந்திருக்கிறது. என்னுடைய மனநிலை வித்தியாசமானது. நான் காயத்திலிருக்கும்போது வேறு ஒரு வீரர் விளையாடுவார். அதனால் நான் கம்பேக் கொடுக்க முடியாது என நம்பமாட்டேன்.
உங்களால் மீண்டும் திரும்ப வரமுடியாது என நினைத்தால் அதுதான் உங்களது மிகப்பெரிய பிரச்னை. நான் என்னைச் சந்தேகப்பட்டதே கிடையாது. இந்திய அணியில் எனது திறமை நன்றாக வெளிப்பட்டுள்ளது. நான் விளையாடும்போது எப்போதும் நல்ல நிலைமையிலேயே இருக்கிறேன். தொடர்ச்சியாக விளையாடும்போது நன்றாக விளையாடினால் மீண்டும் இந்திய அணியில் தேர்வாகுவேன். மனநிலைதான் மிகவும் முக்கியம். எனது திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. அதனால் மீண்டும் நான் இந்திய அணியில் கம்பேக் தருவேன் என்றார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் மோதல்
நேற்று முன்தினம் இரவு (ஏப்.12) ஹைதராபாத் திடலில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 245 ரன்களை 18.3 ஓவர்களில் 247/2 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் வீசிய 9ஆவது ஓவரில் 3,4-ஆவது பந்துகளில் டிராவிஸ் ஹெட் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்கள் அடித்தார். அடுத்த பந்தில் மேக்ஸ்வெல் சிறப்பாக வீசியதால் டிராவிஸ் ஹெட் பந்துவீச்சாளரிடமே அடித்துவிடுவார். பந்தினைப் பிடித்த மேக்ஸ்வெல் வேண்டுமென்றே டிராவிஸ் ஹெட்டினை தாண்டி கீப்பரிடம் வேகமாக பந்தினை வீசுவார்.
இதனால் கோபமடைந்த டிராவிஸ் ஹெட் மேக்ஸ்வெல்லிடம் ஏதோ பேசுவார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 9ஆவது ஓவர் முடிவில் இருவரும் பேசும்போது பஞ்சாப் கிங்ஸின் மற்றுமொரு ஆஸி. வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் மேக்ஸ்வெல்லுக்கு ஆதரவாக டிராவிஸ் ஹெட்டிடம் வந்து பேசினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆஸி. வீரர்கள் ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக இப்படி நடந்துகொண்டது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டிராவிஸ் ஹெட் 66 ரன்களில் சஹால் ஓவரில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஷமி மோசமான பந்துவீச்சு
ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் இறுதியில் 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் கொடுத்தார். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 2வது வீரர் என்ற மோசமான சாதனையை ஷமி படைத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
பயங்கரவாதி மசூத்அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்?
30 Jun 2025காபூல், இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத்அசார் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஆப்கானிஸ்தானி
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தான்சானியாவில் பயங்கரம்: 2 பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் கருகி பலி
30 Jun 2025டொடோமா : தான்சானியாவில் இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில், 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
-
மர்ம நபர்களால் மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025இம்பால் : மர்ம நபர்களால் மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் 120 மின்சார பஸ்கள் சேவை தொடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
30 Jun 2025சென்னை : சி.சி.டி.வி. கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய 120 மின்சார பஸ்கள் சேவையை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
30 Jun 2025சென்னை, தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2024-25 நிதியாண்டில் ஜி.எஸ்.டி. ரூ. 22.08 லட்சம் கோடி வசூல்
30 Jun 2025புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) ஒட்டுமொத்த வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ. 22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
-
யு.பி.ஐ. பணப்பரிமாற்றத்தில் ஜூலை 15 முதல் மாற்றங்கள்
30 Jun 2025புதுடெல்லி : யு.பி.ஐ. பணப்பரிமாற்றத்தில் பல புதிய மாற்றங்கள் ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வருகின்றன.
-
புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை: இ.பி.எஸ். குற்றச்சாட்டு
30 Jun 2025சென்னை, தி.மு.க., அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.
-
19-வது தேசிய புள்ளியியல் தின விழா: வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு
30 Jun 2025சென்னை, 19 வது தேசிய புள்ளியியல் தின விழாவில் சிறப்பு ஆய்வறிக்கை தயார் செய்யும் போட்டியில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டால
-
பீகாரில் விநோதம்: ரூ.100 கோடியில் போடப்பட்ட சாலையின் நடுவே மரங்கள்
30 Jun 2025பீகார் : பீகார் மாநிலத்தில் 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலையில், பெரிய பெரிய மரங்கள் அச்சுறுத்தும் வகையில் கம்பீரமாக மிரட்டும் தோணியில் நிற்பதால், வாகன ஓட்ட
-
கஞ்சா - புகையிலை விற்பனை: திருப்பூரில் துப்பாக்கிகளுடன் பீகாரை சேர்ந்தவர்கள் கைது
30 Jun 2025திருப்பூர், கஞ்சா-புகையிலை விற்பனை செய்த பீகாரை சேர்ந்த இருவர் திருப்பூரில் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர்.
-
எல்லை நிர்ணய விவகாரங்களில் இந்தியாவுடன் பேச தயார்: சீனா
01 Jul 2025பெய்ஜிங் : இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
-
இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
01 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.