எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அடுத்தடுத்து மாநில பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய - மாநில அரசுகளின் உறவுகளை மேம்படுத்திட உயர்மட்டக் குழுவை அமைத்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.15) முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு அவர் பேசியது: “இன்றைய காலகட்டத்தில் மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.
பரந்து விரிந்த இந்த இந்திய நாட்டை, மொழிவாரி உரிமைகளின் அடிப்படையில் உருவான மாநிலங்கள்தான் ஒற்றுமையாகக் காத்து வருகின்றன. இப்படி அமைக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும், இந்தியாவும் வலிமை பெறும். இதனை உணர்ந்து, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்கின்ற பரந்துபட்ட கொள்கை முழக்கத்தினை தமிழ்நாடு தொடர்ந்து உரக்க முழங்கி வருகிறது.
அடுத்தடுத்து மாநிலப் பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூக நீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வின்மை, ஒடுக்கப்பட்டோருக்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மாநில அரசின் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் தமிழக மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வண்ணம் இருந்து வந்த நமது கல்விக் கொள்கையினை நீர்த்துப் போகச் செய்து முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ‘நீட்’ எனும் ஒற்றைத் தேர்வின் வாயிலாக மட்டுமே மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது.
இந்த ‘நீட்’ தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்விதமாகவும் உள்ளது. இந்த நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களுடைய மருத்துவக் கனவுகள் சிதைந்து போயிருக்கின்றன. பல மாணவர்களுடைய விலை மதிப்பில்லா உயிர்களை இழந்து நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகவே, நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களை தொடர்ந்து உருவாக்கி வரும் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளை நோக்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி, பல உலக நாடுகளில் இருந்தும் உயர்தர சிகிச்சை பெற மக்கள் வருகை புரிந்தவண்ணம் இருக்கிறார்கள்.
நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களையும், உயர்தர மருத்துவமனைகளையும், முன்னணி மருத்துவக் கல்வி நிறுவனங்களையும் கொண்டுள்ள தமிழகத்தில், தரமான கல்வி கொடுக்கப் போகிறோம் என்ற பெயரில் நீட் தேர்வு மூலம் பொதுக்கல்வி முறையை சிதைப்பதையே நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இந்த ‘நீட்’ தேர்வால் ஏற்பட்டுள்ள இன்னல்களைக் களையும்விதமாக, இந்த சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு மத்திய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால், தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் மூலம் மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்க மத்திய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழியை மத்திய அரசு மறைமுகமாக தமிழ்நாட்டு மாணவர்களின் மீது திணிக்க முற்படுகிறது.
கல்விக் கொள்கையில் தமிழக மாணவர்களின் எதிர்கால நலனை மட்டுமே முதன்மையாகக் கருதும் திராவிட மாடல் அரசு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய சுமார் 2,500 கோடி ரூபாயை விடுவிக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை வஞ்சித்து வருகிறது.
இவ்வாறு தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிதியை வழங்காதது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவே தனது கடுமையான கண்டனங்களை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. எனவே, மொழி, இன, பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளை உறுதிசெய்யும் வண்ணம் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாததாகும்.
மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதியானது தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களின் பங்களிப்பிற்கு ஈடாக அல்லாமல் குறைவாகப் பகிரப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் அறிமுக நிலையிலேயே தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்த மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. எனினும், பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களின் கருத்துகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிக முக்கியமாக, மாநிலங்களின் வருவாயை ஈட்டக்கூடிய அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கி, மத்திய அரசின் வரி வருவாயில் பெரும் பங்களிப்பை தமிழ்நாடு தரும்போதிலும், நாம் பங்களிக்கக்கூடிய ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே நமக்கு நிதிப் பகிர்வாக அளிக்கப்படுகின்றது. இது மிகமிகக் குறைவு. இயற்கை சீற்றங்களினால் தமிழகம் பாதிக்கப்பட்ட போதெல்லாம்கூட, உரிய இழப்பீடுகள், தகுந்த ஆய்வு மற்றும் அளவீடுகள் செய்த பின்னரும், பல முறை வலியுறுத்தியும், வழங்கப்படவே இல்லை.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி மாநில அரசின் தீவிர மக்கள்தொகை கட்டுப்பாடு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பிறப்பு விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்ட நிலையில், அதனை தண்டிக்கும்விதமாக 2026-ம் ஆண்டு நடைமுறைப்படுத்த கருதியிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறையினால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கூட்டாட்சிக் கருத்தியலுக்கு எதிராக மத்திய அரசு நடந்துகொள்ளும் போதெல்லாம் அதற்கு எதிராக தமிழகம் தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகிறது. இந்தப் பிரச்சினைகள் குறித்து எல்லாம் மக்கள் மன்றத்தில் விரிவாக எடுத்துக் கூறி, தேவைப்பட்டால் சட்டமன்றத்தில் அதற்குரிய தீர்வை எட்டுவதற்கு உரிய சட்டங்களை இயற்றிடவும் நாம் என்றும் தயங்கியதே இல்லை.
இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் நாம் இயற்றிய சட்டமுன்வடிவுகள் மீது உரிய ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்திய தமிழக கவர்னருடைய செயலை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்கு தொடுத்து, சமீபத்தில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காக்கும் வகையில் கூட்டாட்சிக் கருத்தியலின் மகத்துவத்தை நாடெங்கும் பரப்பிடும் வகையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாம் பெற்றிருக்கிறோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
உயர் நிலைக் குழு விவரம்:
மாநில சுயாட்சி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.15) விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின் விவரம்: “மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் நிலைக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை வரும் ஜனவரி 2026-ல் சமர்ப்பிக்கப்படும். இறுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். இக்குழு மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்.
மாநில உரிமைகளுக்கான முதல் குரல், தமிழகத்தில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும். அந்த வகையில், மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும். அனைத்து மாநிலங்களின் நலன் கருதி இந்த உயர் மட்ட குழு அமைக்கப்படுகிறது. இதில் ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன், திட்டக்குழு முன்னாள் தலைவர் நாகநாதன் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இன்று ஈஸ்டர் பண்டிகை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
19 Apr 2025சென்னை : உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மதத்தினரால் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
-
ஈக்வடார் நாட்டில் பயங்கரம்: சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி
19 Apr 2025ஈக்வடார் : ஈக்வடார் நாட்டில் சேவல் சண்டையின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர்.
-
வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் படுகொலை: இந்தியா கடும் கண்டனம்
19 Apr 2025புதுடெல்லி, வங்கதேசத்தில் பபேஷ் சந்திர ராய் என்ற இந்து தலைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2025
19 Apr 2025 -
கனடாவில் துப்பாக்கி சூடு: இந்திய மாணவி பலி
19 Apr 2025ஒட்டாவா : கனடாவில் துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவி உயிரிழந்தார்.
-
இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயார்: சீனா அறிவிப்பு
19 Apr 2025பெய்ஜிங் : சமீபத்தில் இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் சீனா கெடுபிடிகளை தளர்த்தியிருந்த நிலையில், இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயாராகவுள்ளதாக சீனா
-
நீங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்: த.வெ.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகளுடன் காணொளியில் விஜய் கலந்துரையாடல்
19 Apr 2025சென்னை : தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளிடம் காணொளி வாயிலாக அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாடினார்.
-
நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
19 Apr 2025ஊட்டி : புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
-
மேல்பாதி திரௌபதியம்மன் கோவிலில் 3-வது நாளாக மக்கள் தரிசனம் செய்ய வரவில்லை
19 Apr 2025விழுப்புரம், மேல்பாதி திரௌபதியம்மன் திருக்கோவில் வழிபாட்டுக்காக மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.
-
சென்னையில் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடங்கியது : குறைந்தபட்ச கட்டண் ரூ.35-ஆக நிர்ணயம்
19 Apr 2025சென்னை : சென்னையில் முதன்முறையாக ‘ஏசி’ மின்சார ரயில் நேற்று (ஏப்.19) முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.குறைந்தபட்சமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட
-
80 ஆயிரம் ஆப்கானியர்களை வெளியேற்றிய பாகிஸ்தான்..!
19 Apr 2025இஸ்லாமாபாத் : ஏப்ரல் 30 காலக்கெடுவுக்கு முன்பாக 80,000 ஆப்கானியர்களை பாகிஸ்தான் நாட்டைவிட்டு வெளியேற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ம.தி.மு.க முதன்மை செயலாளர் பொறுப்பு: துரை வைகோ திடீர் விலகல்
19 Apr 2025சென்னை : ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
19 Apr 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 90-க்கும் மேற்பட்டோர் பலி
19 Apr 2025டெய்ர் அல்-பலா (காசா பகுதி) : இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் காசாவில் இரண்டே நாட்களில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; 74 பேர் உயிரிழப்பு
19 Apr 2025சனா : ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வெள்ளியங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து பலி
19 Apr 2025கோவை : வெள்ளயங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
-
ஆன்மிக, சுற்றுலா பயணிகளை குறிவைக்கும் மோசடி கும்பல் : மத்திய சைபர் ஒருங்கிணைப்பு மையம் எச்சரிக்கை
19 Apr 2025புதுடெல்லி : ஆன்மிகம் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்படும் ஆன்லைன் மோசடி குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், இந்தியாவின் சைபர் குற்றங்
-
டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு
19 Apr 2025புதுடெல்லி : தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நேற்று (ஏப்.19) அதிகாலை நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. சுமார் 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
-
மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: மாணவர்களுக்கு மதுபானம் வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
19 Apr 2025போபால் : மத்திய பிரதேசத்தில் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு
19 Apr 2025சென்னை, பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார்.
-
இந்து மத தலைவர் கடத்தி, படுகொலை
19 Apr 2025டாக்கா : வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.
-
தொடர்ந்து 9-வது முறையாக பிஜு ஜனதா தளத்தின் தலைவராக நவீன் பட்நாயக் போட்டியின்றி தேர்வு
19 Apr 2025புவனேஸ்வர் : பிஜு ஜனதா தளத்தின் தலைவராக நவீன் பட்நாயக் தொடர்ந்து 9-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு: உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வருமா? ம.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பு
19 Apr 2025சென்னை, ம.தி.மு.க.வின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
-
குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி
19 Apr 2025சென்னை : குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
-
1.74 லட்சம் பட்டதாரிகள் எழுதிய சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
19 Apr 2025சென்னை, சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வெழுதிய 1.74 லட்சம் பட்டதாரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.