எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அடுத்தடுத்து மாநில பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய - மாநில அரசுகளின் உறவுகளை மேம்படுத்திட உயர்மட்டக் குழுவை அமைத்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.15) முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு அவர் பேசியது: “இன்றைய காலகட்டத்தில் மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.
பரந்து விரிந்த இந்த இந்திய நாட்டை, மொழிவாரி உரிமைகளின் அடிப்படையில் உருவான மாநிலங்கள்தான் ஒற்றுமையாகக் காத்து வருகின்றன. இப்படி அமைக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும், இந்தியாவும் வலிமை பெறும். இதனை உணர்ந்து, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்கின்ற பரந்துபட்ட கொள்கை முழக்கத்தினை தமிழ்நாடு தொடர்ந்து உரக்க முழங்கி வருகிறது.
அடுத்தடுத்து மாநிலப் பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூக நீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வின்மை, ஒடுக்கப்பட்டோருக்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மாநில அரசின் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் தமிழக மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வண்ணம் இருந்து வந்த நமது கல்விக் கொள்கையினை நீர்த்துப் போகச் செய்து முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ‘நீட்’ எனும் ஒற்றைத் தேர்வின் வாயிலாக மட்டுமே மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது.
இந்த ‘நீட்’ தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்விதமாகவும் உள்ளது. இந்த நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களுடைய மருத்துவக் கனவுகள் சிதைந்து போயிருக்கின்றன. பல மாணவர்களுடைய விலை மதிப்பில்லா உயிர்களை இழந்து நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகவே, நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களை தொடர்ந்து உருவாக்கி வரும் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளை நோக்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி, பல உலக நாடுகளில் இருந்தும் உயர்தர சிகிச்சை பெற மக்கள் வருகை புரிந்தவண்ணம் இருக்கிறார்கள்.
நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களையும், உயர்தர மருத்துவமனைகளையும், முன்னணி மருத்துவக் கல்வி நிறுவனங்களையும் கொண்டுள்ள தமிழகத்தில், தரமான கல்வி கொடுக்கப் போகிறோம் என்ற பெயரில் நீட் தேர்வு மூலம் பொதுக்கல்வி முறையை சிதைப்பதையே நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இந்த ‘நீட்’ தேர்வால் ஏற்பட்டுள்ள இன்னல்களைக் களையும்விதமாக, இந்த சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு மத்திய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால், தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் மூலம் மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்க மத்திய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழியை மத்திய அரசு மறைமுகமாக தமிழ்நாட்டு மாணவர்களின் மீது திணிக்க முற்படுகிறது.
கல்விக் கொள்கையில் தமிழக மாணவர்களின் எதிர்கால நலனை மட்டுமே முதன்மையாகக் கருதும் திராவிட மாடல் அரசு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய சுமார் 2,500 கோடி ரூபாயை விடுவிக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை வஞ்சித்து வருகிறது.
இவ்வாறு தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிதியை வழங்காதது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவே தனது கடுமையான கண்டனங்களை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. எனவே, மொழி, இன, பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளை உறுதிசெய்யும் வண்ணம் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாததாகும்.
மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதியானது தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களின் பங்களிப்பிற்கு ஈடாக அல்லாமல் குறைவாகப் பகிரப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் அறிமுக நிலையிலேயே தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்த மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. எனினும், பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களின் கருத்துகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிக முக்கியமாக, மாநிலங்களின் வருவாயை ஈட்டக்கூடிய அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கி, மத்திய அரசின் வரி வருவாயில் பெரும் பங்களிப்பை தமிழ்நாடு தரும்போதிலும், நாம் பங்களிக்கக்கூடிய ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே நமக்கு நிதிப் பகிர்வாக அளிக்கப்படுகின்றது. இது மிகமிகக் குறைவு. இயற்கை சீற்றங்களினால் தமிழகம் பாதிக்கப்பட்ட போதெல்லாம்கூட, உரிய இழப்பீடுகள், தகுந்த ஆய்வு மற்றும் அளவீடுகள் செய்த பின்னரும், பல முறை வலியுறுத்தியும், வழங்கப்படவே இல்லை.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி மாநில அரசின் தீவிர மக்கள்தொகை கட்டுப்பாடு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பிறப்பு விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்ட நிலையில், அதனை தண்டிக்கும்விதமாக 2026-ம் ஆண்டு நடைமுறைப்படுத்த கருதியிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறையினால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கூட்டாட்சிக் கருத்தியலுக்கு எதிராக மத்திய அரசு நடந்துகொள்ளும் போதெல்லாம் அதற்கு எதிராக தமிழகம் தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகிறது. இந்தப் பிரச்சினைகள் குறித்து எல்லாம் மக்கள் மன்றத்தில் விரிவாக எடுத்துக் கூறி, தேவைப்பட்டால் சட்டமன்றத்தில் அதற்குரிய தீர்வை எட்டுவதற்கு உரிய சட்டங்களை இயற்றிடவும் நாம் என்றும் தயங்கியதே இல்லை.
இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் நாம் இயற்றிய சட்டமுன்வடிவுகள் மீது உரிய ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்திய தமிழக கவர்னருடைய செயலை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்கு தொடுத்து, சமீபத்தில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காக்கும் வகையில் கூட்டாட்சிக் கருத்தியலின் மகத்துவத்தை நாடெங்கும் பரப்பிடும் வகையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாம் பெற்றிருக்கிறோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
உயர் நிலைக் குழு விவரம்:
மாநில சுயாட்சி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.15) விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின் விவரம்: “மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் நிலைக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை வரும் ஜனவரி 2026-ல் சமர்ப்பிக்கப்படும். இறுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். இக்குழு மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்.
மாநில உரிமைகளுக்கான முதல் குரல், தமிழகத்தில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும். அந்த வகையில், மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும். அனைத்து மாநிலங்களின் நலன் கருதி இந்த உயர் மட்ட குழு அமைக்கப்படுகிறது. இதில் ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன், திட்டக்குழு முன்னாள் தலைவர் நாகநாதன் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
வைத்திலிங்கம் ராஜினாமா எதிரொலி: தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்வு
21 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக்கு அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வைத்திலிங்கம் ராஜினாமா: எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.
-
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே த.வெ.க.வுக்கு பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வாய்ப்பு
21 Jan 2026புதுடெல்லி, தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதால் கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரான்ஸ் அதிபர் பதவியில் இருந்து மேக்ரான் விரைவில் நீக்கப்படுவார்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு
21 Jan 2026வாஷிங்டன், அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி விதிப்போம் என்று பிரான்சுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் ஒரேநாளில் ரூ.4,120 அதிகரிப்பு
21 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டு விற்பனையானது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்
21 Jan 2026சென்னை, ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரன்-இ.பி.எஸ். சந்திப்பார்களா..?
21 Jan 2026சென்னை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணைந்திருப்பது அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
21 Jan 2026சென்னை, தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
-
தவறாக மந்திரம் புரோகிதர்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து அரசு விளக்கம்
21 Jan 2026சென்னை, கிளி ஜோசியர் புரோகிதம் ஓதியது போன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
சூர்யவன்ஷி சாதனை முறியடிப்பு
21 Jan 2026மெல்போர்ன்: இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸி., வீரர் மலாஜ்சுக் 51 பந்துகளில் அதிவேக சதத்தை பதிவு செய்து 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்
-
மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை மாநில காவல்துறையும் விசாரிக்கலாம்:
21 Jan 2026மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை இனி மாநில காவல்துறையும் விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
கூட்டணிக்கு வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி
21 Jan 2026சென்னை, கூட்டணிக்கு மனதார வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி வருகை எதிரொலி: செங்கல்பட்டில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
21 Jan 2026செங்கல்பட்டு, பிரதமர் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
21 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை, நிதின் நபீன் தலைவரானது குறித்து காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
-
தேர்தலில் யாருடன் கூட்டணி: ராமதாஸ் திடீர் ஆலோசனை
21 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
-
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது
21 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல்
21 Jan 2026ஜெருசலேம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
-
மீண்டும் கூட்டணிக்குள் டி.டி.வி.தினகரன்: மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய இ.பி.எஸ்.
21 Jan 2026சென்னை, தே.ஜ.கூட்டணியில் மீண்டும் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ள நிலைியல் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
-
கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா
21 Jan 2026வாஷிங்டன், கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
-
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன் தலைவர் உருலா தகவல்
21 Jan 2026டாவோஸ், இந்தியாவுடன் விரைவில் வர்த்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் உருலா வென் டர் லியன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் டி.டி.வி.தினகரன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளதாக மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
அசாமில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு-செல்போன், இணையதள சேவை துண்டிப்பு
21 Jan 2026கவுகாத்தி, அமாமில் மீண்டும் வன்முறை சம்பவம் நடைபெற்றதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கு செல்போன், இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
-
இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா பெரும் பங்கு வகிக்கிறது பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jan 2026புதுடெல்லி, இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா மாநிலம் பெரும் பங்கு வகிக்கிறது என்று அம்மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.&n
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரனுக்கு இ.பி.எஸ். வரவேற்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
21 Jan 2026டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்த யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு
21 Jan 2026நியூயார்க், 27 ஆண்டுகள் நாசாவில் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


