எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வரமான மு.க.ஸ்டாலின் தி.மு.க.-பா.ம.க. கூட்டணி வதந்தி தான் என விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்து உள்ள பேட்டி விவரம் வருமாறு:-
கே: பா.ம.க. உங்கள் கூட்டணிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்கும் செல்லலாம் என்று பேசப்படுகிறதே? அதனால் தான் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளிவருவது உண்மையா?
பதில்: நீங்களே முணு முணுப்புகள் என்று சொல்லி விட்டீர்கள். புறந்தள்ளுங்கள். தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. தோழமைக் கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன.
கே: பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி குறித்து உங்கள் பதில் என்ன? இந்த கூட்டணி உங்களுக்கு எதிரான வலிமையான கூட்டணி என நினைக்கிறீர்களா?
பதில்: இது தி.மு.க. அணி யால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான்! ஒரு முறை அல்ல, இரு முறை. 2024 பாராளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக் கால நிகழ்வுகள் இருந்தன. தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் பா.ஜ.க.வையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அ.தி.மு.க.வையும், மூன்றாவது முறையும் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிப்பார்கள்.
கே: நீங்கள் பிரிவினை மற்றும் வெறுப்பு அரசியலை மேற்கொள்கிறீர்கள் என்ற பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
பதில்: அரசியல்சட்டம் தந்த கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்க குரல் கொடுப்பதும், அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை வளர்க்கப் பாடுபடுவதும் எப்படி பிரிவினை அரசியலாக இருக்க முடியும்?
வெறுப்பையே அரசியல் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க., உருவாக்கிய மதக் கலவரங்கள், இனக கலவரங்கள் இன்னமும் இந்திய வரலாற்றின் கறை படிந்த பக்கங்களாக உள்ளன. மணிப்பூர் மாநிலம் இப்போதும் கலவரத்தின் பச்சை ரத்தம் காயாத பூமியாக உள்ளது.
நாடு போர்க்களத்தில் நின்ற ஒவ்வொரு நேரத்திலும் துணை நின்று, அதிக அளவில் நிதி தந்து இந்த நாட்டிற்கு உற்ற துணையாக இருந்த தமிழ் நாட்டைப் பார்த்து-தி.மு.க.வைப் பார்த்து, பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டுவது, மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போலத்தான் இருக்கிறது.
கே: உங்கள் கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு கட்சிகள் ஆட்சியின் சில அம்சங்களில் குறிப்பாக தமிழ்நாட்டின் மதுபான கொள்கையை பற்றி விமர்சிப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: தோழமைக் கட்சியினரின் ஆலோசனைகள் மட்டுமின்றி ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் கேட்டு, அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தோழமைக் கட்சியினரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.
கே: மார்ச் 31, 2026 நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன் ரூ.9.29 லட்சம் கோடியாக இருக்கும் என்று உங்கள் அரசு ஒப்புக்கொள்கிறது. அதில் இருந்து எப்படி மீள்வீர்கள்?
பதில்: தமிழ்நாட்டை கடனில் மூழ்கடித்து விட்டு காலி கஜானாவை விட்டுச் சென்ற ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி. அதன் பிறகு நிதி நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து திறம்பட்ட நிதி மேலாண்மை மூலம் நிர்ணயிக்கப்பட்ட கடன் வரம்புக்குள் உள்ள மாநிலம், தமிழ்நாடு. 10 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, பொருளாதாரச் சூழலை நாங்கள் முன்னேற்றியுள்ளோம்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்பது தமிழ்நாட்டின் அடையாளமாகியுள்ளது. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்குடன் முன்னேறுகிறோம். தேவைப்படும் அளவிற்கு கவனமாக பொறுப்புடன் அதனைப் பெற்று மாநில முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
கே: தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களிடையே போதைப் பொருட்களின் பயன்பாடு திடீரென அதிகரித்துள்ளதாக தெரிகிறது. உங்கள் பதில்?
பதில்: இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் நிலையையும் நீங்கள் அறிவீர்கள். நாடு முழுவதும் கவலையளிக்கக்கூடிய ஒன்றை, தமிழ்நாட்டிற்கு உரியதாக சுருக்கிப் பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது.
அ.தி.மு.க. ஆட்சியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறினார்கள். ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு-போதைப் பொருள் விற்போரின் வங்கி கணக்குகளை முடக்குவது, கடைகளை சீல் வைப்பது, அதிகபட்ச சிறை தண்டனை பெற்றுத்தருவது எனத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குட்கா போன்ற போதை பொருட்கள் கடந்தகால ஆட்சியில் எந்தளவுக்குப் புழங்கின என்பதும், அன்றைய அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் வரை அதில் தொடர்பு டையவர்களாக இருந்ததையும் தமிழ்நாடு அறியும்.
தற்போது வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் நார்க்கோடிக் வகைகள், இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருந்து துறைமுகங்கள் வாயிலாக உள்ளே நுழைந்து, இந்தியாவின் அனைத்து திசைகளிலும் உள்ள மாநிலங்களுக்குள் ஊடுருவுகிறது என்பதைப் பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. நுழைவாயிலின் காவல் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது.
கே: ஜனவரியில், சிந்து சமவெளி நாகரீக இடங்களில் காணப்படும் கல்வெட்டுகளை புரிந்து கொள்வதற்காக நீங்கள் ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகை அறிவித்து இருக்கிறீர்கள். இது திராவிட-ஆரியப் போராட்டத்தின் நீட்சியா?
பதில்: 3000 ஆண்டுகள் பழமையான சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கருதுகோளை வெளியிட்டவர் பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறைத் தலைவரான சர் ஜான் மார்ஷல். அந்த ஆய்வு முடிவுகள் வெளியான நூற்றாண்டில், சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த எழுத்து வடிவங்களை புரிந்து கொள்ள வழிவகை செய்தால் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை என அறிவிக்கப்பட்டது. இது ஆரிய-திராவிட போராட்டத்தின் நீட்சியல்ல.
ஆரியத்துக்கு முந்தைய இந்த மண்ணின் பண பாடான திராவிடத்தை ஆய்வுப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் நிலைநாட்டும் முயற்சி. எழுத்து வடிவம் குறித்த வெற்றிகரமான முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கி றேன்.
கே: துணை முதல்-அமைச்சர் உதயநிதியின் செயல்பாட்டை எப்படி மதிப்பிடுவீர்கள்?
பதில்: துணை முதல்-அமைச்சர் எனக்கும் துணையாக இருந்து பணியாற்றுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கும் துணையாக இருந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்.
கே: நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி நிறுத்தி வைத்ததை ஒரு எதேச்சதிகார செயல் என்றும் கூட்டாட்சி வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாசம் என்று நீங்கள் கூறி இருந்தீர்கள். ஆனால் நீட் செயல்படுத்தப்பட்டபோது தி.மு.க. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததே?
பதில்: தி.மு.க பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இந்திய மருத்துவக் கவுன்சில் நீட் தேர்வைப் பரிந்துரைத்தபோதே அதனை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையை ஏற்கவில்லை. மாநிலங்களின் விருப்ப உரிமையாக அது அமைந்தது. தி.மு.க தொடர்ந்த வழக்கிலும் சாதகமான தீர்ப்பு கிடைத்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலேயே "நீட் தேர்வு செல்லாது" என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளிவந்து விட்டது. தி.மு.க ஆட்சியில் இருந்த காலம்வரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. ஏன், அம்மையார் ஜெயலலிதா இருந்தவரைகூட நீட் தேர்வு நடக்கவில்லை. நீட் தேர்வு செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பா.ஜ.க. ஆட்சி காலத்தில் தான் திரும்ப பெறப்பட்டது. பா.ஜ.க.விடம் தங்களை அடகுவைத்துவிட்ட அ.தி.மு.க. தலைவர்கள், பதவியில் நீடிப்பதற்காக-பா.ஜ.க. விருப்பப்படி தமிழ்நாட்டில் நீட் தேர்வைத் திணித்தார்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு விண்ணப்பம் தமிழக அரசாணை வெளியீடு
05 Nov 2025சென்னை: கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிட்டது.
-
பியூஷ் கோயல் நியூசிலாந்து பயணம்
05 Nov 2025வெலிங்டன்: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை நியூசிலாந்து சென்றார்.
-
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கம்
05 Nov 2025புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.
-
முதல் மனைவி சம்மதம் இல்லாமல் இஸ்லாமிய ஆண்கள் 2-வது திருமணம் செய்ய முடியாது கேரள உயர் நீதிமன்றம் கருத்து
05 Nov 2025திருவனந்தபுரம்: இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.;
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதில்
05 Nov 2025புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
கோவாவில் பாக்., ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
05 Nov 2025பனாஜி: கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோகித் விளையாட வாய்ப்பில்லை
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா: சரக்கு விமானம் விழுந்து விபத்து - 3 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
-
ஏலம் போகாத தாவூத் இப்ராஹிம் சொத்துகள்
05 Nov 2025மும்பை: கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சொத்துகள் குறைந்தவிலையில் ஏலம் விடப்பட்டும் கூட, ஏலம் எடுக்க ஒருவர்கூட முன்வராதது பேசுபொருளா
-
ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதாவுக்கு தலா ரூ.2.25 கோடி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Nov 2025மும்பை: மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அ
-
சத்தீஷ்கார் ரயில் விபத்து: பலி 11 ஆக அதிகரிப்பு
05 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் செயலால் சர்ச்சை
05 Nov 2025மகளிர் ஒரு நாள் உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்காற்றிய தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவலுக்கு பதக்கம் வழங்காத சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.


