எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் கவுரவமான இடத்தை பிடிக்கும்.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது , தோனி நிரூபிப்பதற்கு எதுவுமே இல்லை. அவருக்கு என்ன செய்வது என்று தெரியும், அவர் இனி ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை . நான் உங்களை நேசிக்கிறேன் தோனி. நீங்கள் ஒரு சாம்பியன் என தெரிவித்துள்ளார்.
___________________________________________________________________________________
நான் சிறந்த பீல்டரா? நரேன்
டெல்லிக்கு எதிரான போட்டியின் ஆட்டநாயகன் விருது சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது. ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது வென்ற சுனில் நரேன் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது முழுமையாக அணியின் முயற்சி. நாங்கள் மிடில் ஓவர்களில் நன்றாக செயல்பட்டோம். ரகுவன்ஷி, ரிங்கு சிங் பேட்டிங்கில் அசத்தினார்கள். பின்னடைவைச் சந்தித்தாலும் அதிலிருந்து கம்பேக் கொடுத்து அணியின் வெற்றிகளில் பங்காற்ற எனக்கு நானே ஆதரவு கொடுக்கிறேன். நீங்கள் தடுமாறினாலும் நன்றாக முடிக்கக்கூடிய போட்டிகள் இருக்கும்.
நான் எடுத்த அனைத்து விக்கெட்டுகளையும் ரசித்தேன். நான் சிறந்த பீல்டர் கிடையாது. இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும் போது ரன் அவுட் செய்வது எப்போதும் நல்லது. அதற்கு முடிந்தளவுக்கு வேகமாக பந்தை சுழற்றி தூக்கி எறிய வேண்டும். அழுத்தமான சூழ்நிலையில் கேப்டன் உங்களை நம்பி பவுலிங் செய்யும் வாய்ப்பைக் கொடுப்பதற்கான நம்பிக்கையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட வீரராக நீங்கள் இருக்க வேண்டுமெனில் போட்டிகள் இல்லாத நேரத்திலும் கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
___________________________________________________________________________________
ஓய்வு அறிவித்தது ஏன்? அஸ்வின்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின்போது ஓய்வு அறிவித்தது ஏன் என்று அஸ்வின் மனம் திறந்துள்ளார். பிரிஸ்பனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது, இன்னும் 2 டெஸ்ட்கள் இருக்கும்போது எப்படி ரிட்டையர் ஆவார் என்ற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், ‘மைக் டெஸ்டிங் 1,2,3’ என்ற பாட்காஸ்ட்டில் மைக் ஹஸ்சியுடன் உரையாடிய அஸ்வின் மேலும் சில விஷயங்களைக் கூறினார். உள்ளபடியே கூற வேண்டுமெனில், 100-வது டெஸ்ட்டுடன் ஓய்வு அறிவிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் சரி, உள்நாட்டுத் தொடர் விளையாடுவோம் என்று முடிவெடுத்தேன். அதாவது நன்றாக ஆடுகிறோம், விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறோம் இன்னும் கொஞ்சம் ஆடலாமே என்று முடிவெடுத்தேன். கொஞ்சம் கூட விளையாடலாம் என்பது அர்த்தமுள்ள முடிவுதான். நான் கேளிக்கையுடன் தான் இதைச் செய்தேன். மீண்டும் மைதானத்துக்கு திரும்புவதற்காக நான் மேற்கொண்ட பயிற்சி, உடலுழைப்புகள், கடினமான அடியெடுப்புகள் அனைத்தும் என் குடும்ப நேரத்தை இரையாக்கின என்பதுதான் உண்மை என அஸ்வின் கூறியுள்ளார்.
___________________________________________________________________________________
ஆசிய போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட்
ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் இருக்குமென ஓசிஏ (ஒலிம்பிக் கவுன்சில் ஆஃப் ஏசியா) உறுதியளித்துள்ளது. ஆசிய போட்டிகள் ஜப்பானில் வரும் செப்.19 முதல் அக்.4ஆம் தேதிவரை நடைபெற இருக்கின்றன. நகோயா நகரத்தில் ஏஐஎன்ஏஜிஓசி அமைப்பின் கூட்டத்தில் கிரிக்கெட், மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் இரண்டும் சேர்க்கப்பட்டதாக ஓசிஏ தெரிவித்துள்ளது. இதில் கிரிக்கெட் போட்டிகள் டி20 வடிவில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் டி20 வடிவில் போட்டிகள் நடைபெற இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.போட்டி நடைபெறும் இடங்கள், அணிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி மாகாணத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட இடம் குறித்து தகவல் ஏதுவும் கூறப்படவில்லை. ஆசிய போட்டிகளில் நான்கு முறை கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் 2010, 2014, 2023இல் கிரிக்கெட் போட்டிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________________________________
திருப்பதி கோவிலில் ஆர்சிபி வீரர்கள்
ஆர்சிபி வீரர்கள் திருப்பதி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றனர். இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி ரஜத் படிதார் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 7இல் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே உடன் மே.3ஆம் தேதி தங்களது சொந்தத் திடலில் மோதவிருக்கிறது.
இந்நிலையில், ஆர்சிபி வீரர்கள் ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா திருப்பதி திருமலை கோவிலுக்குச் சென்று தரிசத்துள்ளார்கள். ஆர்சிபி வீரர்களுடன் ஆர்சிபி வீராங்கனை ஷ்ரேயங்கா பாடீலும் சென்றுள்ளார். இந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
___________________________________________________________________________________
பாக். செல்லும் வங்கதேச அணி!
வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கிறது. வருகிற மே மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேச அணி விளையாடவிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ஃபைசலாபாத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேசப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்பின் ஒருபகுதியாக கடந்தாண்டு பாகிஸ்தான் சென்றிருந்த வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முழுமையாக தொடரைக் கைப்பற்றியது.
இந்தத் தொடரில் முதலில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அடுத்தாண்டு வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு மொத்தமாக 5 டி20 போட்டிகளில் விளையாட இரண்டு அணி நிர்வாகத்தினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த 5 டி20 போட்டிகளும் மே 25 ஆம் தேதி தொடங்கி ஜூன் 3 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதுவரை 24 சர்வதேச டெஸ்ட் போட்டிகளை நடத்திய ஃபைசலாபாத் இக்பால் திடலில் 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் சர்வதேசப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
___________________________________________________________________________________
ஆலோசகராகும் டிம் சௌதி!
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியூசிலாந்து வீரர் டிம் சௌதி நியமிக்கப்படவுள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதியை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக நியமிக்க அந்த அணி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
36 வயதான டிம் சௌதி, கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஏற்கனவே, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அவரது அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டிம் சௌதியும் அவருடன் இணைந்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவுன்டி அணியான லங்காஷயருடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடுவதால், அவர் அணியில் இடம்பெறமாட்டர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடிய டிம் சௌதி, இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 391 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 days ago |
-
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
30 Apr 2025புதுடெல்லி, நாடு முழுவதும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2025
30 Apr 2025 -
கூட்டாட்சி மிக்க இந்தியாதான் உண்மையான தேசபக்தியாகும்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
30 Apr 2025சென்னை, தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல.
-
புகார் அளிக்க காவல்நிலையம் வருவோரை கண்ணியத்துடன் நடத்தப்பட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
30 Apr 2025புது டெல்லி, ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வரும் ஒவ்வொருவரும் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
தமிழகத்தல் 60,000 பேருக்கு வேலை வழங்கும் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை முதல்வர் வெளியிட்டார்
30 Apr 2025சென்னை, முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஏப். 30) மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை வெளியிட்டார்.
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்பு
30 Apr 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நேற்று பொறுப்பேற்றார்.
-
பஹல்காம் தாக்குதல்: பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை
30 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் தவறுதான்: கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
30 Apr 2025பெங்களூரு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகத்திற்கு சமம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல் விவகாரம்: இந்தியா, பாக்., அமைச்சர்களுடன் விரைவில் அமெரிக்கா ஆலோசனை
30 Apr 2025வாஷிங்டன் : இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தது.
-
ஆந்திராவில் கோவில் சுவர் இடிந்து உயிரிழந்த 9 பேர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
30 Apr 2025புதுடெல்லி, கோவில் சுவர் இடிந்து 9 பேர் பலியான விவகாரத்தில் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
நம்ம சென்னை நம்ம சந்தை அங்காடியில் பசுமை காய்கறி, பழங்கள் விற்பனை : தமிழக அரசு அறிவிப்பு
30 Apr 2025சென்னை : நம்ம சென்னை நம்ம சந்தை அங்காடியில் பசுமை காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Apr 2025சென்னை, வருமான வரித்துறை, புலனாய்வுத்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை என எதுவாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம்.
-
தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்: மத்திய அரசு
30 Apr 2025புதுடெல்லி : தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் மத்திய அரசு உத்தரவிட்டது.
-
இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
30 Apr 2025சென்னை, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குரிய ஹால் டிக்கெட்களை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது.
-
கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து: 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு
30 Apr 2025கொல்கத்தா : மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
-
ஜே.பி.நட்டா மே 3-ல் தமிழகம் வருகிறார்
30 Apr 2025சென்னை : பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வரும் மே 3ம் தேதி சென்னை வருகிறார். சென்னைக்கு வரும் அவர் மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
-
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி: என்.ஐ.ஏ. அதிர்ச்சி தகவல்
30 Apr 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி பரூக் அகமதுவின் வலையமைப்பு முக்கிய பங்கு வகித்ததாக என்.ஐ.ஏ.
-
தனியார் பள்ளியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாளாளர், உதவியாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
30 Apr 2025மதுரை : மதுரையில் தனியார் பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லை: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
30 Apr 2025நெல்லை : நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கார்மேகனார் தெருவை சேர்ந்த ரத்தினபாண்டி மகன்
-
மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு
30 Apr 2025நெல்லை, மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தொழிலாளர்களுக்க
-
பாக்.கில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
30 Apr 2025லாகூர் : பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
-
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் ரத்து
30 Apr 2025டெல்லி, பஹல்காம் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ரஷ்ய பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.
-
அட்சய திருதியை நாளில் தங்கம் விலையில் மாற்றமில்லை
30 Apr 2025சென்னை, அட்சய திருதியை தினமான நேற்று (ஏப்.30) சென்னையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும், பவுன் ரூ.71,840 ஆகவும் விற்பனையானது.
-
அடுத்த போப் ஆண்டவர் நான் தான்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நகைச்சுவை
30 Apr 2025வாஷிங்டன் : அடுத்த போப் ஆண்டவர் நான் தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
-
ஈரான் துறைமுக வெடி விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆனது
30 Apr 2025தெஹ்ரான் : ஈரான் நாட்டின் பாந்தர் அப்பாஸ் நகரில் துறைமுகம் உள்ளது. இது ஈரானின் மிகப்பெரிய வர்த்தக துறைமுகம் ஆகும்.