எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஷ்மீர், ஆபரேஷன் சிந்தூர்’ முழுவதையும் இந்திய ராணுவம் ஆவணப்படுத்தி வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த தாக்குதல் நடந்து 11 நாட்களுக்கு பிறகு உரி சர்ஜிக்கல் தாக்குதலை இந்தியா நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் சுமார் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். ஜெய்ஷ் இமுகம்மது இயக்கத்தின் தற்கொலைப் படை இந்த தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடியாக 13 நாட்கள் கழித்து இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் மிராஜ் 2000 போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் கைபர் பகதுன்க்வா மாகாணத்தில் உள்ள பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்களில் இருந்த தீவிரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தியதை மத்திய அரசு அறிவித்த போது, முக்கிய எதிர்க்கட்சிகள் அதற்கு ஆதாரங்களை கேட்டன. ராணுவத்தின் நடவடிக்கையை குறைத்து மதிப்பிடும் வகையில் ஆதாரம் கேட்டவர்களுக்கு பலதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் முழுவதையும் இந்திய ராணுவம் ஆவணப்படுத்தி வருகிறது. முன்னதாக தீவிரவாதத்துக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும் முழு ஆதரவு அளிப்பதாக மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. எனினும், சிந்தூர் தாக்குதல் குறித்து வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த இந்திய ராணுவம் வீடியோவாகவும் ஆவணங்களாகவும் சேகரித்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


