எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு மே 7-ம் நாள் முதல்வராக பொறுப்பேற்றார். அப்பொழுது கொரோனா தொற்று தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்தது. உயிர்ப்பலிகள் வாங்கியது. கொரோனா தொற்று ஏற்படும்போது அச்சத்தில் ஒருவருடன் ஒருவர் சந்திப்பதைக்கூடத் தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அச்சம் சிறிதுமின்றி, கரோனா ஒழிப்பில் ஈடுபட்டு மக்களைப் பாதுகாத்த மகத்தான பணிகளை பத்திரிகைகள் பாராட்டின.
தொழில் ஒப்பந்தங்கள்:
முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாகத் தொடங்கப்பட, நம் நாட்டிற்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று செய்து கொள்ளப்பட்ட 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஈர்த்துள்ள ரூ.10,27,547 கோடி புதிய முதலீடுகள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 32.23 லட்சம் வேலைவாய்ப்புகள் காரணமாகத் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் எனப் புகழப்படுகிறது. முதல்வரின் இத்தகைய சிறப்பான நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவில் வேறு எந்த மாநிலமும் அடையாத வளர்ச்சியாக 9.69% வளர்ச்சி கண்டு இந்தியாவில் முதல் மாநிலம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.
ஏற்றுமதியில் இருமடங்கு சாதனை:
திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் 2020-2021-ல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி 2024-2025-ல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருமடங்கு உயர்ந்து சாதனை படைத்தது.
மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்:
மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் மராட்டியம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநிலங்களைவிட அதிகமாக 14.65 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணுப் பொருள்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது தமிழ்நாடு.
வேலைவாய்ப்புகள் வழங்குவதில் சாதனை:
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசுத்துறைகள் மூலமாகவும், தனியார் துறையிலும், வேலைவாய்ப்புகளை வழங்குவதில் திராவிட மாடல் அரசு தனிக்கவனம் செலுத்தியது. அதனால், 2020-2021-இல் 2.9 கோடியாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை 2024-2025-இல் 3.87 கோடியாக உயர்ந்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
சமூக அளவீடுகளில் முன்னணி மாநிலம்:
திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், கலைஞர் கனவு இல்லம், முதலான புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு அபரிமிதமான வளர்ச்சிகளைக் கண்டு இந்திய மாநிலங்களில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது.
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடம்:
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 26 சதவிகிதமாக இருப்பது 2023-2024-ல் 51.3 சதவிகிதமாக உயர்ந்து தமிழ்நாட்டின் மகத்தான சாதனையை வெளிப்படுத்துகிறது.
சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு:
முதல்வரின் சீரிய நிர்வாகத் திறன்களால் மாநிலம் எங்கும் பெரிய அளவில் சாதி மோதல்களோ, தொழிற்சாலைகளில் பிரச்சினைகளோ இல்லாமல் கடந்த நான்கு ஆண்டு காலமும் தமிழ்நாட்டில் அமைதி நிலவுவது மாநிலத்தில் நிலையான வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. 2022 ஆகஸ்ட் முதல் இதுவரை காவல் நிலைய மரணங்கள் எதுவும் நிகழவில்லை என்பது பாராட்டுக்குரியது. மேலும், பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் 1,00,000 மக்கள் தொகையில் இந்தியாவில் 66.4; ஆனால் தமிழ்நாட்டில் 24 என வெகுவாகக் குறைந்து மகளிர் நலன் பாதுகாக்கப்படுகிறது. வேலைக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பு: 2023-2024-ஆம் ஆண்டுக்கான அவ்தார் நிறுவன ஆய்வில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் உகந்த பாதுகாப்பான நகரம் சென்னை எனப் பாராட்டப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதம். இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம், ஏற்றுமதி தயார் நிலையில் தமிழ்நாடு முதலிடம், தோல் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், புத்தாக்கத் தொழில்கள் தரவரிசைப் பட்டியலில் 2018-இல் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு, 2022 திராவிட மாடல் ஆட்சியில் முதலிடம், பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம், இந்திய அளவில் காலணிகள் மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பில் தமிழ்நாடு 38 சதவிகிதம் - முதலிடம், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம், அதிக எண்ணிக்கையில் சதுப்பு நிலங்கள் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு,வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழிற்சாலைகளில் தமிழ்நாடு முதலிடம், இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம், தொழிற்சாலைகளில் பணிபுரியும் அதிக பெண் தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம், அதிகத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம். உலகளாவிய திறன் மையங்களில் மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூரூ முதலான நகரங்களைவிட சென்னை 24.5 சதவிகித வளர்ச்சியுடன் 94,121 திறன் மையங்கள் கொண்டு இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் மேலும் உயரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
21 Jun 2025சென்னை : சென்னை மற்றும் பல பகுதிகளில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
21 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 21) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.73,880-க்கு விற்பனை ஆகிறது.
-
ஈரானின் முக்கிய தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு
21 Jun 2025தெஹ்ரான், ஈரானின் புரட்சிகர காவல்படை ட்ரோன் படைப் பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
-
நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேட்டி
21 Jun 2025மதுரை, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது.
-
புதுப்பொலிவு கண்ட வள்ளுவர் கோட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
21 Jun 2025சென்னை, வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங்
21 Jun 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்றும் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் ராஜ்நாத்
-
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
21 Jun 2025சென்னை : ஒவ்வொரு அமைப்பும், அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில், தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள்.
-
அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
21 Jun 2025ஜெனீவா : இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
21 Jun 2025சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை சார்பில் சர்வதேச யோகா
-
அகமதாபாத் விமான விபத்து எதிரொலி: 3 முக்கிய அதிகாரிகளை நீக்க ஏர் இந்தியாவுக்கு அறிவுறுத்தல்
21 Jun 2025புதுடெல்லி, அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வரும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), விமானக் குழுவினரை திட்டமிடுவது, இயக்குவது
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் புதிய சாதனை
21 Jun 2025லண்டன் : தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
-
உலகத்தை இணைத்த யோகா: விசாகப்பட்டினம் யோகா தினம் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு
21 Jun 2025விசாகப்பட்டினம், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் மாபெரும் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
-
சிற்றுந்துகள் திட்டத்தால் 1 கோடி மக்கள் பயணம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
21 Jun 2025சென்னை, மினி பேருந்து திட்டத்தால் இதுவரை பஸ் வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள
-
வால்பாறை அருகே பயங்கரம்: சிறுத்தை தூக்கி சென்ற சிறுமி சடலமாக மீட்பு
21 Jun 2025வால்பாறை : வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாய் கண் முன்னே, சிறுத்தை வெள்ளிக்கிழமை மாலை கவ்விச் சென்ற நிலையில், நேற்று சிறுமி சடலமாக மீட்கப
-
இங்கி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி 471 ரன்கள் குவிப்பு - 3 பேர் சதம்
21 Jun 2025லீட்ஸ் ந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது.
-
யோகா, உலகிற்கு பாரதம் அளித்த கொடை; 51 தண்டால் எடுத்து அசத்திய கவர்னர் ரவி
21 Jun 2025மதுரை : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரையில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட கவர்னர் ரவி, 51 தண்டால் எடுத்து பார்வையாளர்களை அசத்தினார். கவர்னருக்கு வயது 73.
-
பீகாரில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,100 ஆக உயர்வு: நிதிஷ்
21 Jun 2025பீகார், பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1
-
ட்ரம்ப் நினைத்தால் போரை முடிவுக்கு கொண்டுவரலாம்: ஈரான் அதிபரின் ஆலோசகர் கருத்து
21 Jun 2025தெஹ்ரான், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நினைத்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலை நிறுத்த முடியும் என ஈரான் தெர
-
சமையலின் ஆஸ்கார் விருது: தமிழருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு
21 Jun 2025சென்னை : சிறந்த சமையல் கலைஞருக்கான விருதைத் தமிழ்நாட்டை சேர்ந்த செப் விஜயகுமார் வென்றுள்ள நிலையில் அவருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
டெஸ்ட் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை
21 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
-
போர் நடைபெறும் ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களையும் வெளியேற்ற இந்திய அரசு முடிவு
21 Jun 2025புதுடெல்லி, நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில் அந்நாடுகளின் குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவி
-
போர் பதற்றம் சூழ்ந்த ஈரானிலிருந்து இந்தியர்கள் 1000 பேரை அழைத்து வர ஏற்பாடு
21 Jun 2025புதுடெல்லி : போர் பதற்றம் சூழ்ந்த ஈரானிலிருந்து மேலும் 1000 இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
21 Jun 2025மேட்டூர் : கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்து வருகிறது.
-
இந்தியா - பாக். போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்காது: ட்ரம்ப் ஆதங்கம்
21 Jun 2025வாஷிங்டன் : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
-
திருப்பதியில் வார விடுமுறையை முன்னிட்டு அலைமோதும் கூட்டம்
21 Jun 2025திருப்பதி : திருப்பதியில் வார விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் தரிசனம் நேரம் 24 மணி நேரமாக அதிகரித்துள்ளது.