முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      விளையாட்டு
Modi 2024-11-25

Source: provided

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் சீனா 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தனதாக்கியது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நமது அணியின் அற்புதமான செயல்திறனுக்காக இந்தியா பெருமை கொள்கிறது. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும் உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

____________________________________________________________________________________________________________________________________

ராஜீவ் சுக்லா பி.சி.சி.ஐ. தலைவர் 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவரான ரோஜர் பின்னியின் பதவிக்காலம் முடிவடைய வுள்ளதையொட்டி, அவருக்குப் பதிலாக பி.சி.சி.ஐ.யில் புதிய இடைக்காலத் தலைவராக துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பதவியேற்கவுள்ளதாக பி.சி.சி.ஐ.யில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். வருகிற ஜூலை மாதத்தில் பொறுப்பேற்கவுள்ள ராஜீவ் சுக்லா மூன்று மாதங்கள் பதவி வகிப்பார் என்றும், செப்டம்பரில் நடைபெறும் வருடாந்திர பொதுக்கூட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலிக்குப் பிறகு புதிய தலைவராக ரோஜர் பின்னி 2022 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய தேர்தலின் போது 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ரோஜர் பின்னி மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்தார். வருகிற ஜூலை 19 ஆம் தேதியன்று ரோஜர் பின்னி 70 வயதை எட்டுகிறார். பி.சி.சி.ஐ. தலைவருக்கான வயது வரம்பு 70. அதனாலேயே புதிய தலைவருக்கான தேர்வு நடைபெற்றுள்ளது.  

____________________________________________________________________________________________________________________________________

தென்னாப்பிரிக்கா வீரர் ஓய்வு

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டராக விளையாடி வரும் கிளாசன், இதுவரை 60 சர்வதேச ஒருநாள், 58 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2,141 ரன்களும், டி20 போட்டிகளில் 1,000 ரன்களும் குவித்துள்ளார். மேலும், ஐ.பி.எல். தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிளாசன், 48 போட்டிகளில் 2 சதங்கள், 7 அரைசதங்கள் உள்பட 1,480 ரன்கள் எடுத்துள்ளார்.

ஓய்வு தொடர்பாக கிளாசன் வெளியிட்ட அறிவிப்பில், ” இது உண்மையிலேயே மிகவும் கடினமான முடிவு, ஆனால், முழு மனதுடன் எடுத்துள்ளேன். எனக்கு கிடைத்த சிறந்த நட்புகளையும் உறவுகளையும் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகக் கருதுகிறேன். என் வாழ்க்கையில், என்னை நம்பிய சில பயிற்சியாளர்கள் இருக்கின்றனர், அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

____________________________________________________________________________________________________________________________________

கோலியின் உணவகத்துக்கு அபராதம்

நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒன் 8 கம்யூன் என்ற பிரபல மதுபான விடுதி மற்றும் உணவகத்தை விராட் கோலி நடத்தி வருகிறார். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மதுபான விடுதியின் உணவகப் பகுதியில் ‘புகைப்பிடிக்க அனுமதியில்லை’ என்ற அறிவிப்பு பலகை வைக்காததால் பெங்களூரு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ஏற்கெனவே, ஒன் 8 கம்யூன் மதுபான விடுதியின் மீது இரண்டு முறை நடவடிக்கை எடுக்கப்பட்டு சர்ச்சையானது.

முதலில், கடந்தாண்டு ஜூன் மாதம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து மதுபான விடுதியை நடத்துவதாக பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம், தீயணைப்புத் துறையிடம் முறையான அனுமதி பெறாத குற்றச்சாட்டுக்காக பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________________________________________________________

 “ஐ.பி.எல். 2025-ன் மிகச் சிறந்த ஷாட்!” - ஸ்ரேயஸ் அய்யருக்கு டிவில்லியர்ஸ் புகழாரம்

ஐ.பி.எல். 2025-ன் நேற்று முன்தினம்  204 ரன்களை இலக்காகக் கொண்டு இறங்கும்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கடைசி 3 ஓவர்களில் 31 ரன்கள் தேவை. பும்ராவிடம் ஓவரைக் கொடுத்தார் ஹர்திக் பாண்டியா.  பும்ரா 140+ கி.மீ. வேக யார்க்கரை ஸ்டம்பை நோக்கி இறக்கினார். மிடில் ஸ்டம்பின் அடிப்பகுதி நொறுங்கியிருக்கும் அப்படிப்பட்ட யார்க்கர் அது. மட்டையை கடைசி நொடியில் இறக்கினார் அய்யர், பந்து தேர்ட்மேன் திசையில் பவுண்டரிக்குப் பறந்தது. திகைப்பூட்டும் ஷாட். “இது ஷாட் ஆப் த ஐ.பி.எல்., என்னைப் பொறுத்தவரை இந்த ஐ.பி.எல். தொடரின் ஆகச் சிறந்த ஷாட். பந்து நேராக மிடில் ஸ்டம்பைத் தாக்க வந்தது. துல்லிய யார்க்கர். மட்டையின் அடிப்பகுதியையே உடைக்கக் கூடிய யார்க்கர். அதை ஆடவே முடியாது. அதைப் போய் பவுண்டரிக்கு விரட்டினார் ஸ்ரேயஸ் அய்யர். 

மும்பை இந்தியன்ஸிடமிருந்து ஆட்டத்தைப் பறித்த ஷாட் அது. அதுவும் உலகின் தலை சிறந்த பவுலருக்கு எதிராக. நிச்சயம் நம்ப முடியாத பேட்டிங் அது. தூய ஆற்றல் மற்றும் உந்தம், என்ன ஒரு ஃபண்டாஸ்டிக் பிளேயர். இந்த உலகத்தில் இல்லாத இன்னிங்ஸ் இது. இந்த இன்னிங்ஸுக்காக வரும் அனைத்துப் பாராட்டுகளுக்கும் அய்யர் தகுதியானவர். வாழ்வா சாவா போட்டியில் மிகவும் நிதானமாக அமைதியாக வெற்றி பெற்றுத் தந்தார் என்று கூறினார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து