எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர்ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு காவல்துறை சார்பில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு காவல்துறையில் துணை கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் பிரத்யேக மண்டல அளவிலான சரித்திர பதிவேடு ரவுடிகள் கண்காணிப்பு குழுக்கள், வடக்கு, மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களிலும், மாநகர ஆணையரகங்களிலும் அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகின்றன.
மாநகரங்களில் துணை காவல் ஆணையர்கள் (தலைமையகம்) மற்றும் மாவட்டங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (தலைமையகம்) ஆகியோர் சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் நீதிமன்ற முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, விசாரணையை விரைவுப்படுத்தி தண்டனை பெற நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
விசாரணையின் முடிவுறும் தருவாயில் உள்ள நிலுவை வழக்குகள் மற்றும் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள வழக்குகள் அடையாளம் காணப்பட்டு, வழக்கு விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. 2025-ம் ஆண்டில், இதுபோன்று 376 வழக்குகள் அவற்றின் விசாரணையை கூர்ந்து கண்காணிக்க அடையாளம் காணப்பட்டுள்ளன.
2024-ம் ஆண்டில், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தண்டனை வழங்கப்பட்டு 150 சரித்திர பதிவேடு ரவுடிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர், இது கடந்த 12 ஆண்டுகளைவிட மிக அதிக அளவாகும். இதுவரை (ஏப்ரல், 2025 வரை) சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு எதிரான 29 முக்கிய வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன. மேற்கு மண்டலத்தில் திருப்பூர், தர்மபுரி, கோயம்புத்தூர் & கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் திருப்பூர் நகரம் ஆகியவற்றில் 5 வழக்குகள்; மத்திய மண்டலத்தில் பெரம்பலூர், மயிலாடுதுறை (3), திருவாரூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள் ஆகியவற்றில் 6 வழக்குகள்; தென் மண்டலத்தில் திருநெல்வேலி (5), தென்காசி, விருதுநகர் (3), தூத்துக்குடி (2), திண்டுக்கல் (2), ராமநாதபுரம் (3) கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் மதுரை நகரம் ஆகியவற்றில் 18 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன.
தென் மண்டலத்தில் சரித்திர பதிவேடு ரவுடி கொலைகளில் பொது விமர்சனங்களை ஏற்படுத்தும் வழக்குகளும் கருத்தில் கொள்ளப்பட்டன. இத்தகையை கொலை வழக்குகளை முறையாக கண்காணித்ததன் விளைவாக, 18 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன. நீதிமன்ற வழக்கு விசாரணையை கண்காணித்தல் மற்றும் தண்டனை பெறுவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம், கொலைகள், குறிப்பாக சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழி கொலைகள் குறைவதற்கு முக்கிய பங்களித்துள்ளது. சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் சமூக விரோத சக்திகளுக்கு எதிரான இந்த முறையான, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் பழிக்குப் பழி மற்றும் சரித்திர பதிவேடு ரவுடிகள் கொலைகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து நல்ல பலனைத் தந்துள்ளன. பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகள் போன்ற பிற வழக்குகளிலும் இதேபோன்ற நடவடிக்கை பின்பற்றப்படுகிறது.
மதுரை மாநகரில் 8.7.2021 அன்று B4 கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பவ இடத்தில் 28 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக முருகன் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கானது சொத்துக்களுடன் சேர்த்து 28 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம், ஒரு கார் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 31.12.21 அன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கொலை வழக்கு உட்பட 29 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மற்றும் மதுரை மாநகர், அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரித்திரபதிவேடு அவருக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையை திறம்பட கண்காணித்ததன் காரணமாக அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாநகர், திருநகர் காவல் நிலையத்தில் 12.10.2016 அன்று முன்விரோத வழக்கான பஷீத் அகமது (வயது 30) என்பவரது கொலை வழக்கு குற்றச்சாட்டில் தொடர்புடைய ராஜேஷ்(30) மற்றும் திரு. விஷ்வா(18) என்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்கன் மகன் பெருமாள் என்பவர், ராஜன் மகன் செல்வராஜ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். இதில் வைகுண்டம் என்பவர் குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜுக்கு எதிராக சாட்சியம் அளித்தார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்ற எட்டு குற்றவாளிகளுடன் சேர்ந்து வைகுண்டத்தைக் கொலை செய்தனர். இவ்வழக்கில் நீதிபதி 6.3.2025 அன்று செல்வராஜுக்கு மரண தண்டனையும், 4 கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்தார். மீதமுள்ள 3 குற்றவாளிகளுக்கு 2 மாத சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் காவல் நிலைய எல்லையில் சுப்பையா(38) மற்றும் 20 பேர் சேர்ந்து முன் விரோதம் காரணமாக ரத்தினவேல்பாண்டியன் என்பவரை கொலை செய்தனர். முன்விரோதம் காரணமாக அந்த காவல் நிலைய எல்லையில் பதிவான 5 கொலை வழக்குகளிலும், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 2021-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பட்டி காவல் நிலையத்தில், சரித்திர பதிவேடு ரவுடிகள் ராஜா, பிரகாஷ், சரத்குமார் ஆகிய 3 பேர் 2021-ம் ஆண்டு ராஜபாண்டி என்பவரை கொலை செய்தனர். இவ்வழக்கில் 5.4.2025 அன்று ராஜா மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிரகாஷ் என்பவருக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தார் காவல் நிலைய எல்லையில், முன்பகை காரணமாக காளிபாண்டி என்பவர் மாரியப்பன் என்பவரை கொலை செய்துள்ளார். இவ்வழக்கில் 16.4.2025 அன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
மஞ்சப்பை திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
05 Jun 2025சென்னை, அரசின் திட்டமாக இருந்தால்போதாது மஞ்சப்பை திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய
-
44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
05 Jun 2025சென்னை, சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நேற்று நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்
-
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
05 Jun 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 11-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.ஐ.டி.யில் இடம்பிடித்த பழங்குடியின மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்
05 Jun 2025சென்னை, சென்னை ஐ.ஐ.டி.யில் இடம்பிடித்த பழங்குடியின மாணவிக்கு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
-
பெங்களூரு வெற்றி கொண்டாட்டம்: ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? ஐகோர்ட் கேள்வி
05 Jun 2025பெங்களூரு, வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்?
-
தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது: கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தகவல் தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது: கூடுதல் டி.ஜி.பி. தகவல்
05 Jun 2025சென்னை: தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-06-2025.
05 Jun 2025 -
ராமதாசுடன் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்திப்பு: பின்னணி என்ன?
05 Jun 2025விழுப்புரம், ராமதாசுடன் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்தித்ததன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
செனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
05 Jun 2025புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) திறந்த
-
நார்வே செஸ் தொடர்: உலக சாம்பியனை வீழ்த்திய வைஷாலி
05 Jun 2025ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை தோற்கடித்தார்.
-
ஆப்கன், மியான்மர் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள்: அமெரிக்காவுக்குள் நுழைய தடை
05 Jun 2025நியூயார்க், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்
-
தொண்டர்கள் கைதுக்கு இ.பி.எஸ் கண்டனம்
05 Jun 2025சென்னை, ஆணவ அரசின் கொட்டத்தை மக்கள் நிச்சயம் அடக்குவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
காசாவில் 2 பிணை கைதிகளின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல்
05 Jun 2025காசா: காசாவில் 2 பிணை கைதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம் நிலவில் வெற்றிகர தரையிறக்கம்
05 Jun 2025டோக்கியோ: நிலவின் வடக்கு பகுதியில் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம் தரையிறங்கியது.
-
உலக சுற்றுச்சூழல் தினம்: 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார் பிரதமர் மோடி
05 Jun 2025புதுடில்லி, டில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார்.
-
தைலாபுரம் இல்லத்தில் ராமதாசை சந்தித்தார் அன்புமணி
05 Jun 2025விழுப்புரம், தைலாபுரம் இல்லத்தில் தந்தை ராமதாஸை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.
-
லைகா நிறுவனத்துக்கு ரூ. 21 கோடியை நடிகர் விஷால் வட்டியுடன் தர வேண்டும் சென்னை ஐகோர்ட் உத்தரவு
05 Jun 2025சென்னை: லைகா நிறுவனத்துக்கு 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என நடிகர் விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு துயரம்: இ.பி.எஸ். இரங்கல்
05 Jun 2025சென்னை, பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்ததற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க.
-
காயிதே மில்லத் பிறந்த நாள்: முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி
05 Jun 2025சென்னை, மறைந்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
05 Jun 2025நியூயார்க்: உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது
05 Jun 2025சென்னை, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக, தி.மு.க.
-
இறந்த உடல்களை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்கிறது: டி.கே.சிவகுமார் விமர்சனம்
05 Jun 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலை வைத்து பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்வதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமர்சித்துள்ளார்.
-
சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை
05 Jun 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்.
-
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538 கோடியில் ஒப்பந்தம்
05 Jun 2025சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ.
-
பெங்களூர் துயர சம்பவம் குறித்து தாமாக முன்வந்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விசாரணை
05 Jun 2025பெங்களூர்: கர்நாடாகவில் ஐ.பி.எல்.