எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சனும் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாட தனக்கு வாஷிங்டன் சுந்தர் ஊக்கமளித்தாக சாய் சுதர்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக சாய் சுதர்சன் பேசியதாவது: வாஷிங்டன் சுந்தருக்கு எதிராக சில போட்டிகளில் நான் விளையாடியுள்ளேன். அவருக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பானதாக இருக்கும். வாஷிங்டன் சுந்தர் ஐ.பி.எல். தொடரில் நன்றாக விளையாடினார். அதன் பின், அவர் இந்திய அணிக்காக விளையாடினார். சென்னையைச் சேர்ந்த ஒருவர் இந்திய அணிக்காக விளையாடுகிறார் என்பது மிகவும் ஊக்கமளித்தது. வாஷிங்டன் சுந்தரை எனக்கு இளம் வயதிலிருந்தே தெரியும். அதுவே அவரைப் போன்று நானும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. அவர் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பவராக உள்ளார் என்றார்.
________________________________________________________________________________________________________
திண்டுக்கல் அணி மீது புகார்
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடந்த 14-ந்தேதி சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனம் தடவப்பட்ட துண்டுகளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் புகார் அளித்து உள்ளது.
இதற்கிடையே டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்னாவுக்கு மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.ஒ.ஒ. எஸ்.மகேஷ் எழுதி உள்ள கடிதத்தில், எங்களுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஒரு தீவிரமான விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். போட்டிக்கு முன்பு நடுவர்கள் பலமுறை எச்சரிக்கை செய்த போதும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனங்கள் தடவப்பட்டதாக தோன்றும் துண்டுகளை பயன்படுத்தி பந்தை வெளிப்படையாக சேதப்படுத்தியது. இது ஆட்டத்தின் முடிவை பாதித்தது மட்டுமல்லாமல் எங்கள் இளம் அணியை மனசோர்வடைய செய்தது. நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
________________________________________________________________________________________________________
அணியுடன் இணைந்த காம்பீர்
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது. இந்நிலையில் மருத்துவ அவசரம் காரணமாக கடந்த வாரம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் அவசரமாக தாயகம் திரும்பினார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் காம்பீரின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் அணியுடன் இணைவார் என பி.சி.சி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மீண்டும் இந்திய அணியுடன் இன்று (ஜூன் 17) இணையவுள்ளதாக பி.சி.சி.ஐ. தகவறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீரின் தாயார் நலமாக உள்ளார். மீண்டும் இந்திய அணியுடன் இணைவதற்காக கௌதம் காம்பீர் நாளை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணி தோல்வி
9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ ஹாக்கி லீக் போட்டியின் ஐரோப்பிய சுற்று பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப்பில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.
இந்திய அணியில் சஞ்சய் மற்றும் தில்பிரீத்சிங் தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் டிம் பிராண்ட், பிளேக் கவர்ஸ் மற்றும் கூப்பர் பர்ன்ஸ் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த சுற்றில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும். இப்படி தொடர் தோல்விகளால் துவண்டுபோயுள்ள இந்திய அணி தனது அடுத்த லீக்கில் இதே இடத்தில் வருகிற 21-ந்தேதி பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.
________________________________________________________________________________________________________
கிரீஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரெபேகா மசரோவா 7-6 (7-1), 7-5 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பாடலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்
17 Jun 2025மதுரை : முருக பக்தர்கள் மாநாட்டு ஆன்மிக பாடலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.
-
முற்றும் இஸ்ரேல் - ஈரான் போர்: அமெரிக்க மீது சீனா குற்றச்சாட்டு
17 Jun 2025பெய்ஜிங் : இஸ்ரேல் - ஈரான் போர் வலுத்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
-
ஒரே நேரத்தில் உருவானது இரண்டு புயல் சின்னங்கள்: தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
17 Jun 2025சென்னை, ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னம் உருவான நிலையில் தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-06-2025.
17 Jun 2025 -
கீழடி விவகாரத்தில் மதுரை வீரகனூரில் மத்திய அரசுக்கு எதிராக இன்று தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: திரளாக பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
17 Jun 2025சென்னை, கீழடி விவகாரத்தில் இன்று மதுரை வீரகனூரில் தி.மு.க.
-
அகமதாபாத் விமான விபத்து: விமானி உடல் மும்பை கொண்டு வரப்பட்டது
17 Jun 2025மும்பை : கடந்த வாரம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.
-
ஆமதாபாத் விமான விபத்து: நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்
17 Jun 2025சென்னை : ''ரொம்ப வருத்தமான விஷயம்.
-
உண்மையை ஏற்க சில மனங்கள் மறுக்கின்றன: தங்கம் தென்னரசு
17 Jun 2025சென்னை : நம் மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம். ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
மோடியின் காலை தொட்டு வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
17 Jun 2025நிகோசியா : இந்திய பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்.
-
இருப்பை காண்பித்துக் கொள்ள ஏதாவது சொல்வார்கள்: அமைச்சர் கே.என்.நேரு
17 Jun 2025நெல்லை : இருப்பை காண்பித்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவரும், மற்ற எதிர்க்கட்சியினரும் ஏதாவது இதுபோல் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெர
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கோரிக்கை
17 Jun 2025சென்னை : தமிழக அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
அகமதாபாத் விமான விபத்து: 101 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
17 Jun 2025ஆமதாபாத் : அகமதாபாத்விமான விபத்தில் பலியான 101 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
தெஹ்ரானை விட்டு உடனே வெளியேறுங்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
17 Jun 2025புதுடெல்லி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அந்நகரை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-
ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு: ஆந்திர முதல்வரின் பயணம் ரத்து
17 Jun 2025திருப்பதி : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செல்லும் ஹெலிகாப்டர் திடீர் கோளாரால் பயணங்கள் ரத்து செய்யப்பட்டது.
-
குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்தார் அலி கொமேனி
17 Jun 2025டெஹ்ரான், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி (86) குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார்.
-
திருப்புவனம் தடுப்பணை கட்டுமான பணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
17 Jun 2025சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமான பணிகளை துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
-
கைதான ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் 20 மணி நேர விசாரணை நிறைவு
17 Jun 2025சென்னை : சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 20 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
-
சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள்: யுவராஜ், ரெய்னா, ஹர்பஜனிடம் அமலாக்கத்துறை விசாரணை
17 Jun 2025புதுடில்லி : சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கள் யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரண
-
ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் தரவரிசை: ஸ்மிருதி மந்தனா முதலிடம்
17 Jun 2025துபாய் : மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2019-க்குப் பிறகு முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்களை வீட்டிற்கு அழைத்து பேசினார் கோலி!
17 Jun 2025லண்டன் : தொடக்க ஆட்டத்திற்கு முன் இந்திய வீரர்களை லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு விராட் கோலி அழைத்துள்ளார்.
-
5 பந்துகளில் 5 விக்கெட்டுகள்
17 Jun 2025இந்த ஐ.பி.எல்.
-
ரோகித்-கோலி கலந்த கலவை சுப்மன் கில்: பட்லர் பாராட்டு
17 Jun 2025லண்டன் : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கலந்த கலவையாக சுப்மன் கில் உள்ளார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.
-
கோலிக்கு எதிராக பந்துவீசும் போது சிரமத்தை சந்தித்தேன்: ஆண்டர்சன்
17 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கரை விட விராட் கோலிக்கு எதிராக பந்துவீசும்போது சிரமத்தை சந்தித்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
-
சிறுவன் கடத்தல் சம்பவம்: திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தியிடம் தீவிர விசாரணை
17 Jun 2025திருத்தணி, சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்காக, நேற்று திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார்.
-
நிவாரணத்தொகை அதிகரிப்பு
17 Jun 2025சென்னை : பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.