எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடர் 6 சுற்றுகள் மற்றும் இறுதிப்போட்டியை கொண்டது.
இதில் இந்திய வீராங்கனை தமிழகத்தை சேர்ந்த வைஷாலி 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கரிசா யிப் உடன் மோதினார். இதில் வைஷாலி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஹரிகா துரோனவள்ளி, கிரீசின் ஸ்டாவ்ரூலா சோலகிடோவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
__________________________________________________________________________________________
இங்கிலாந்து மன்னருடன் சந்திப்பு
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் (181 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் , வீராங்கனைகள் இங்கிலாந்து மன்னர் சார்லஸை கிளாரன்ஸ் மாளிகையில் நேற்று சந்தித்தனர் இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
__________________________________________________________________________________________
ஜடேஜாவுக்கு குவியும் வாழ்த்துகள்
இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி கடைசி நாளில் 12 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 193 ரன்கள் தேவையான நிலையில் அதை சேஸ் செய்ய முடியாவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா தனியாளாகப் போராடி 181 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்த ஒரு போட்டி மட்டுமல்ல, இதுமாதிரி பல போட்டிகளில் ஜடேஜா தனியாக நின்று விளையாடியுள்ளார். இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஜடேஜாவைப் போர்வீரன் எனப் பாராட்டி வருகிறார்கள். சி.எஸ்.கே. அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தளபதி ஜடேஜா எனக் கூறுவதற்கான காரணம் என அவர் அடித்த ரன்களை பட்டியலிட்டுள்ளது.
__________________________________________________________________________________________
சேஸிங்கில் சொதப்பும் இந்தியா
இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி கடைசி நாளில் 12 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 193 ரன்கள் தேவையான நிலையில் அதை சேஸ் செய்ய முடியாவில் ஆட்டமிழந்தது. ஜடேஜா தனியாளாகப் போராடினாலும் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
சச்சின் ஓய்வுக்குப் பிறகு, டாப் 8 அணிக்கு எதிராக 150-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்யாமல் இந்திய அணி 26 முறை தோல்வியும் 2 முறை வெற்றியும் 7 முறை சமனிலும் முடிந்துள்ளது. 2021-இல் பிரிஸ்பேனிலும் 2024-இல் ராஞ்சியில் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது. சச்சின் டெண்டுல்கர் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தப் புள்ளி விவரங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
__________________________________________________________________________________________
வரலாறு படைத்த போலண்ட்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆஸ்திரேலியாவின் எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் பந்தில் நடைபெற்றது. ஜமைக்காவில் நடந்த இந்தப் போட்டியில் ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 225க்கு ஆட்டமிழக்க, மே.இ.தீ. அணி 143க்கு ஆட்டமிழந்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 121க்கு ஆட்டமிழக்க, மே.இ.தீ. அணி வெற்றிபெற 210 ரன்கள் தேவையாக இருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மே.இ.தீ. அணி 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில்தான் ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியர்களில் டெஸ்ட்டில் ஹாட்ரிக் எடுத்தவர்களில் 11-ஆவது வீரராக போலண்ட் இணைந்துள்ளார். கடைசியாக 2010-11 தொடரில் பீட்டர் சிடில் எடுத்திருந்தார். உலக அளவில், பிங்க் பந்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார். பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த போலண்டுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
__________________________________________________________________________________________
இங்கி. வீரர் காயத்தால் விலகல்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 193 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து தவித்துக் கொண்டிருந்தது. அதன்பின்னர், ஜடேஜா - சிராஜ் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி அணியை மீட்கப் போராடினர். கடைசி கட்டத்தில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சோயிப் பஷீர் வீசிய பந்தில் சிராஜ் போல்டானர்.
போட்டியின் போதே சுண்டு விரல் காயத்தால் அவதிப்பட்டு வந்த 21 வயதான சோயிப் பஷீர், சிராஜ் விக்கெட்டை வீழ்த்தி இந்திய ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினர். இந்த நிலையில், சுண்டு விரலில் எலும்பு முறிவால் அவதிப்பட்டுவரும் அவருக்கு இந்த வார இறுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள விருப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால், அவர் இந்தத் தொடரில் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோயிப் பஷீருக்குப் பதிலாக ஜாக் லீச் அல்லது லியாம் டாஸன் இருவரில் ஒருவர் இடம்பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
__________________________________________________________________________________________
தரவரிசை: சின்னர் முதலிடம்
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நிறைவடைந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சினெரும் (இத்தாலி), மகளிர் பிரிவில் இகா ஸ்வியாடெக்கும் (போலந்து) சாம்பியன் பட்டம் வென்றனர். இதனையடுத்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் ஜானிக் சின்னர் மாற்றமின்றி முதலிடத்தில் தொடர்கிறார். அல்காரஸ் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஸ்வரெவ் 3-வது இடத்திலும், டெய்லர் பிரிட்ஸ் 4-வது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு), ஜாக் டிராபர் (ஒரு இடம் குறைந்து) 5-வது இடத்திலும் உள்ளனர். முன்னணி வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-வது இடத்தில் இருக்கிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் அரினா சபலென்காவும் (பெலாரஸ்), 2-வது இடத்தில் அமெரிக்காவின் கோகோ காப்பும் மாற்றமின்றி தொடருகிறார்கள். விம்பிள்டன் பட்டத்தை வசப்படுத்திய ஸ்வியாடெக் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் இறுதிசுற்றில் தோல்வி அடைந்த அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா 5 இடங்கள் எகிறி தனது சிறந்த தரநிலையாக 7-வது இடத்தை பெற்றுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்
15 Jul 2025சென்னை, கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு 2 பேர் பலியானதையடுத்து நீலகிரி மாவட்ட தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
2-வது அணியாக டெஸ்ட் வரலாற்றில் மே.இ.தீவுகள் அணி மோசமான சாதனை
15 Jul 2025சபினா பார்க் : ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த 2-வது அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்துள்ளது.
-
பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி வலைதளங்களில் வீடியோ வைரல்
15 Jul 2025துபாய், பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடிகளில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
4-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, ரிஷப் பண்ட் விலகல்? - கேப்டன் சுப்மன் கில் பதில்
15 Jul 2025லண்டன் : 4வது டெஸ்ட் போட்டி; பும்ரா, ரிஷப் பண்ட் விளையாடுவார்களா என்பது குறித்து சுப்மன் கில் பதிலளித்துள்ளார்.
தொடர் சமன்...