எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னையில் புதிதாக மேலும் 2 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரையிலான வழித்தடம் 4-ன் நீட்டிப்பு மற்றும் தாம்பரம்–கிண்டி–வேளச்சேரி வழித்தடத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 2015 முதல் முதல்கட்ட மெட்ரோ ரயில் விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை 32 கி.மீட்டருக்கும், அதன் விரிவாக்கமான சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட்தாமஸ் மௌன்ட் வரை 9.34 கிலோ மீட்டருக்கும் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. முதல்கட்ட மெட்ரோ இயக்கமானது நீல நிறப்பாதை, பச்சை நிறப்பாதை என இரு வழிகளாக குறிக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் 41 நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சுமாா் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 108.9 கி.மீ. தொலைவுக்கு ரயில்களை இயக்கவும், 128 நிலையங்கள் அமைக்கவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, பூந்தமல்லி - போரூர் வரை 10 கி.மீ. முதல் 15 கி.மீ. தொலைவு பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணிகள் டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய மெட்ரோ வழித்தடம் மஞ்சள் குறியீட்டில் அமையும். சென்னை மாநகராட்சியில் இரு கட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால், தினமும் சுமார் 20 லட்சம் பேர் வரை பயணிக்கும் நிலை ஏற்படும் என்றும், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தை இருகட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கிடையே கோயம்பேடு - பட்டாபிராம் வெளிவட்டச்சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசிடம் சமா்ப்பித்தது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரையிலான வழித்தடம் 4-ன் நீட்டிப்பு மற்றும் தாம்பரம்–கிண்டி–வேளச்சேரி வழித்தடத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது, வழித்தடம் 4-ன் நீட்டிப்பு - கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை.
இந்த நீட்டிப்பு, மெரினா கடற்கரை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான மெட்ரோ இணைப்பை மேம்படுத்துவதற்கு தோராயமாக சுமார் 7 கிலோமீட்டர் நீளத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம், தினசரி பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளும் எளிதில் அணுகுவதற்கும், நகரப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும். தாம்பரம் முதல் வேளச்சேரி வரை சுமார் 21 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம், தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய புறநகர்ப் பகுதிகளை சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம்-1-இல் உள்ள கிண்டி மெட்ரோ நிலையத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடம், தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி மற்றும் கிண்டி பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வசதியுடன் உருவாக்கப்படும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை வழித்தடம் 4-ன் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிபதற்கு ரூ.38,20,000 மற்றும் தாம்பரம் முதல் வேளச்சேரி வரை ரூ.96,19,000/- மதிப்பாகும். இந்த விரிவான திட்ட அறிக்கைகள் சமர்பிப்பதற்கான காலம் 120 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளதால், போக்குவரத்து வெகுவாக குறைந்து, விரைவான பயணத்தை மக்கள் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்கு
13 Aug 2025சென்னை, தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-08-2025.
13 Aug 2025 -
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலையில் ஒருவர் கைது
13 Aug 2025தூத்துக்குடி, நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
-
உயிரிழந்ததாக கூறிய பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் ராகுல் சந்திப்பு
13 Aug 2025புதுடெல்லி, உயிரிழந்ததாக கூறிய பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
-
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்: வரிவிதிப்பு விவகாரத்தில் டிரம்ப்பை சந்திக்கிறார்
13 Aug 2025புதுடெல்லி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன.
-
கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
13 Aug 2025புதுடெல்லி : மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.
-
தமிழ்நாட்டில் வாக்காளர் திருத்தம் நியாயமாக நடைபெற வேண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
13 Aug 2025சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க.
-
வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார் அமித்ஷா
13 Aug 2025புதுடெல்லி : நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்
-
கூலி திரைப்படம் வெற்றிபெற ரஜினிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
13 Aug 2025சென்னை, கூலி திரைப்படம் வெற்றி பெற நடிகர் ரஜினி காந்த்துக்கு இ.பி.எஸ் வாழ்த்து தெரிவித்தார்.
-
சென்னையில் மேலும் 2 புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க ஆலோசனை
13 Aug 2025சென்னை : சென்னையில் புதிதாக மேலும் 2 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
-
தெருநாய்கள் தொடர்பான உத்தரவு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
13 Aug 2025டெல்லி : தெருநாய்கள் தொடர்பான உத்தரவு தொடர்பான வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
-
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் மைத்ரேயன்
13 Aug 2025சென்னை, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
ஜார்க்கண்ட்: மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
13 Aug 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்: அரசுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு
13 Aug 2025சென்னை, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
-
கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து: தி.மு.க. கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
13 Aug 2025சென்னை, நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.ல்.ஏ.க்களுக்கு மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
-
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிறை செல்வேன்: கர்நாடக எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
13 Aug 2025பெங்களூரு, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 2,800 நாய்களை கொன்று புதைத்துள்ளேன் அதற்காகவும் நான் சிறைக்கு செல்லவும் நான் தயார் என்று கர்நாடக எம்.எல்.ஏ.
-
சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
14 Aug 2025சென்னை : சுதந்திர நாள் விழா முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
14 Aug 2025சென்னை : சுதந்திர நாள் விழா முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
14 Aug 2025சென்னை : சுதந்திர நாள் விழா முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்கள் வைத்த கோரிக்கைகள்: மேயர் பிரியா பேட்டி
13 Aug 2025சென்னை, அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்கள் வைத்த கோரிக்கைகள் குறித்து மேயர் பிரியா விளக்கம்.
-
துணைவேந்தர்கள் தேர்வு விவகாரம்: கவர்னருக்கு அதிகாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட்
13 Aug 2025புதுடெல்லி, கேரள பல்கலைக்கழகங்களில் இடைக்கால துணைவேந்தர்களை நியமித்த கவர்னரின் முடிவுக்கு எதிராக அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
-
நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை அமைக்கப்படும் : பார்லி.யில் மத்திய அரசு தகவல்
13 Aug 2025டெல்லி : நடப்பு நிதியாண்டில் 10, 660 கி.மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
ஆபரேசன் சிந்தூரின் போது பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தப்பட்டதா..? அமெரிக்கா பதில் அளிக்க மறுப்பு
13 Aug 2025ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்ற கேள்விக்கு அமெரிக்க பதில் அளிக்க மறுத்து விட்டது.
-
நியூஸிலாந்தில் நிலநடுக்கம்
13 Aug 2025வெல்லிங்டன் : நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சற்றே குறைந்த தங்கம் விலை
13 Aug 2025சென்னை, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 6-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது.