எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, நாட்டின் அரியலமைப்பின் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருப்பவர். சித்தாந்த ரீதியாக இணையான பார்வையை கொண்டிருப்பவர்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று அவரை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "நாட்டில் நேற்று அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கும் அதை பாதுகாப்பவர்களுக்கும் இடையே போர், சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி பல ஆண்டு காலம் நீதித்துறை மற்றும் சட்ட அனுபவம் கொண்டவர். அரசியலமைப்பின் விழுமியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு பிரபலமானவர்.
தெலங்கானாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதிலும் தெலங்கானாவில் சமூக நீதிக்கான பார்வையை உருவாக்குவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். நான் தற்செயலாக பார்த்தபோது அவரது சட்டைப் பையில் இந்திய அரசியலமைப்பின் நகல் இருந்தது. 52 ஆண்டுகளாக அதைத்தான் தன்னுடனேயே வைத்திருப்பதாக அவர் என்னிடம் கூறினார். அதற்கான காரணம் குறித்து கேட்டபோது, அனைத்து சட்ட விவாதங்களுக்குமான பதிலை அளிப்பது அரசியலமைப்புதான் என அவர் பதிலளித்தார். அவர் பரந்த அனுபவமும், புத்திசாலித்தனமும் கொண்டவர் என்பதோடு, சித்தாந்த ரீதியாகவும் நம்மோடு இணைந்து இருப்பவர்.
நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா குறித்த சத்தம் அதிகம் கேட்கிறது. மன்னர் தனது விருப்பப்படி, தனக்குப் பிடிக்காதவர்களை வெளியேற்ற திட்டமிடுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை, 30 நாட்கள் சிறையில் அடைத்து அவரது பதவியையும் பறிக்க திட்டமிடுகிறார். நாம் மீண்டும் பழங்காலத்துக்கு திரும்புவதைப் போன்றது இது.
தற்போது ஏன் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது? குடியரசு துணைத் தலைவராக இருந்த அந்த நபர் எங்கே போனார்? அவர் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறார்? மக்களவையில் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக உரத்த குரலில் பேசிய அவர் திடீரென மவுனமானது ஏன்? ஒரே ஒரு வார்த்தைகூட அவரிடமிருந்து வரவில்லையே ஏன்? பிஹாரில் வாக்காளர் உரிமை பயணம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் அங்கு தீயைப் போல பற்றி எரிகிறது. சிறுவர்கள்கூட தற்போது இதுபற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள். உண்மையில் இந்த நாட்டின் ஆன்மா எதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்கிறது.
பல மாநிலங்களில் வாக்குகள் திருடப்பட்டு தற்போது பிஹாரிலும் அதற்கான முயற்சி நடப்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தின் ஆழத்தை நேரில் காண, மூத்த தலைவர்கள் பிஹாருக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். இந்தியா குறித்த மாற்றுப் பார்வையை, மாற்றுக் கருத்தை வழங்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு பெரிய பொறுப்பு. 10-15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்ற ஒரு பொறுப்பு அல்ல இது. அப்போது இருந்த அமைப்பு நடைமுறை தற்போது இல்லை.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், ஒவ்வொரு மொழியில் இருந்தும், ஒவ்வொரு கலாச்சாரத்தில் இருந்தும் நம்மிடம் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இத்தகைய தலைமைப் பண்புகள் உள்ளவர்களை பெற்றிருப்பதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் சுதர்சன் ரெட்டியை நாம் ஆதரிக்கிறோம். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நாம் அவரை ஆதரிக்கிறோம். ஒருமனதமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது முக்கியமானது. அவர் உறுதியுடன் இந்த தேர்தலை எதிர்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இதன்மூலம், நாம் வழங்கும் செய்தியை நாடு அறியும்" என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-08-2025.
20 Aug 2025 -
தங்கம் விலை குறைப்பு
20 Aug 2025சென்னை, இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
தனது திருமண நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை
20 Aug 2025சென்னை : எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என தனது 50-வது திருமண நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூற
-
ஒண்டிவீரன் நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
20 Aug 2025சென்னை : ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியானது- கவாஸ்கர்
20 Aug 2025புதுடெல்லி, கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியானது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
இன்று த.வெ.க. மாநில மாநாடு: மதுரையில் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
20 Aug 2025மதுரை : தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுவதால் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
இடைத்தரகரை அணுக வேண்டாம்: பக்தர்களுக்கு திருப்பதி கோவில் தேவஸ்தானம் வேண்டுகோள்
20 Aug 2025திருமலை : இடைத்தரகரை அணுக வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
தேசிய சீனியர் தடகள போட்டி: 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம்
20 Aug 2025சென்னை, தேசிய சீனியர் தடகள 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம் பெற்றார்.
-
ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத ரேஷன் அட்டைதாரர் பெயர்கள் நீக்கம்
20 Aug 2025ராஞ்சி, ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத ரேஷன் அட்டைதாரர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது.
-
இயல்பு நிலைக்கு திரும்புகிறது மும்பை
20 Aug 2025மும்பை, இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது மும்பை.
-
துணை கேப்டன் பதவியில் இருந்து படேல் நீக்கம்; விளக்கம் கோரும் முன்னாள் வீரர்
20 Aug 2025மும்பை, துணை கேப்டன் பதவியில் இருந்து அக்சர் படேல் நீக்கத்திற்கு விளக்கம் வேண்டும்- முன்னாள் வீரர் காட்டமாக தெரிவித்தனர்.
-
பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை நீக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்
20 Aug 2025புதுடெல்லி : பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை நீக்கும் மசோதாக்களை மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார்.
-
பா.ஜ.க., என்.ஆர்.காங். மட்டுமின்றி எதிரிகள் பலர் உள்ளனர்: நாராயணசாமி பரபரப்பு பேச்சு
20 Aug 2025புதுச்சேரி, பா.ஜ.க., என்.ஆர்.காங். மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளதாக நாராயணசாமி பேசினார்.
-
மதுரை த.வெ.க. மாநாடு: 100 அடி கொடிக்கம்பம் கீழே விழுந்ததால் திடீர் பரபரப்பு
20 Aug 2025மதுரை : மதுரை த.வெ.க. மாநாட்டில் நடப்பட முயன்ற 100 அடி கொடிக்கம்பம் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா: அமித் ஷாவுக்கு முதல்வர் கண்டனம்
20 Aug 2025சென்னை, அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்த அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
-
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு ஏன்..? அமெரிக்கா புது விளக்கம்
20 Aug 2025நியூயார்க் : உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
-
பட்டியல் சமூகத்துக்கான இடஒதுக்கீடு: கர்நாடக அமைச்சரவை முக்கிய முடிவு
20 Aug 2025பெங்களூரு : பட்டியல் சமூகத்துக்கான இடஒதுக்கீட்டை பிரிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஆசிய கோப்பை தொடர்: ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுப்பு: கொந்தளித்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த்
20 Aug 2025டெல்லி, ஆசிய கோப்பையில் ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக்: மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை வீழ்த்திய ட்ரெண்ட் ராக்கெட்ஸ்
20 Aug 2025லண்டன், இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது.
-
பஞ்சுக்கு இறக்குமதி வரி விலக்கு: தமிழக ஜவுளி தொழில் துறை வரவேற்பு
20 Aug 2025கோவை : பஞ்சுக்கு 11 சதவீதம் இறக்குமதி வரி விலக்கு அளித்ததை தொடர்ந்து தமிழக ஜவுளி தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.
-
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
20 Aug 2025வாஷிங்டன் : போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர்.
-
மக்கள் குறைதீர் முகாமில் டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் : ராஜ்கோட்டை சேர்ந்தவர் கைது
20 Aug 2025புதுடெல்லி : டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால்
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம் வென்றார் மணிகா
20 Aug 2025ஜெய்ப்பூர் : ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை மணிகா விஸ்வகர்மா வென்றுள்ளார்.
-
ஷ்ரேயாஸ் ஐய்யரை எடுக்காதது நியாயமற்ற முடிவு- அஸ்வின்
20 Aug 2025டெல்லி, ஷ்ரேயாஸ் ஐய்யரை எடுக்காதது நியாயமற்ற முடிவு என்று அஸ்வின் கூறினார்.
-
மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிப்பு: இருளில் மூழ்கியது ஊட்டி
20 Aug 2025ஊட்டி : மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஊட்டி நகர் முழுவதும் இருளில் மூழ்கியது