எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி: காலவரையின்றி மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 32 நாட்கள் அவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், ஆகஸ்டு 12-ந்தேதிக்கு பின்னர் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு 5 நாட்கள் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டது. இதன்பின்பு கடந்த 18-ந்தேதி அவை மீண்டும் தொடங்கியது.
இந்த கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தன. இதில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக சிறப்பு விவாதம் நடந்தது. இதற்கு பிரதமர் மோடி அவையில் பதிலளித்து பேசியதுடன் அது முடிவடைந்தது.
எனினும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி விவாதிக்க கோரி தொடர்ந்து அவை நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால், அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், நேற்று காலை 11 மணிக்கு மக்களவை தொடங்கியதும், உடனேயே ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அவை கூடியது. அப்போது பேசிய பிர்லா, ஒட்டுமொத்த கூட்டத்தொடரிலும் தொடர்ச்சியாக அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன என்றார்.
இந்த கூட்டத்தொடரில், 419 நட்சத்திர குறியிட்ட கேள்விகள் கேட்க அட்டவணைப்படுத்தப்பட்டு இருந்தன. ஆனால், தொடர்ந்து திட்டமிட்ட முறையில் நடந்த இடையூறுகளால், 55 கேள்விகள் மட்டுமே பதிலளிக்க எடுத்து கொள்ளப்பட்டன.
கூட்டத்தொடரின் தொடக்கத்தில் நாம் அனைவரும் 120 மணிநேரம் விவாதம் நடத்துவோம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு அலுவல் ஆலோசனை கமிட்டியும் ஒப்பு கொண்டது.
ஆனால், தொடர்ந்து முடக்கம் மற்றும் திட்டமிட்ட இடையூறுகள் ஆகியவற்றால், கூட்டத்தொடரில் 37 மணிநேரமே நாம் விவாதத்தில் ஈடுபட முடிந்தது என அவர் சுட்டி காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை நாடு முழுவதும் மக்கள் பார்த்தனர். நாம் பொதுமக்களுக்கான சிக்கல்கள் மற்றும் விவகாரங்கள், முக்கிய மசோதாக்கள் ஆகியவற்றில் நாடாளுமன்றத்திற்கான கண்ணியத்துடன் விரிவான பொதுநலனுடன் தீவிர மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் நம் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை வைத்திருக்கின்றனர் என்றார்.
இந்த தொடரில், பிரதமர், முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை நீக்கும் மசோதா உள்பட 14 அரசு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் முக்கிய மசோதா ஒன்றும் அடங்கும்.
ஜூலை 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான சிறப்பு விவாதம் நடந்தது. இதற்கு பிரதமர் மோடி அவையில் பதிலளித்து பேசியதுடன் அது நிறைவடைந்தது. ஆகஸ்டு 18-ந்தேதி, இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் சாதனைகள் பற்றிய ஒரு சிறப்பு விவாதம் தொடங்கியது. ஆனால், அது முடிவடையாமலேயே தொடர்ந்து உள்ளது.
இந்நிலையில் ஓம் பிர்லா தொடர்ந்து கூறும்போது, கோஷங்களை எழுப்புவது, கண்டன அட்டைகளை காட்டுவது மற்றும் அவையில் அல்லது நாடாளுமன்ற வளாகத்தில் திட்டமிட்டு முடக்கும் வகையில் செயல்படுவது என்பது நாடாளுமன்றத்தின் கண்ணியம் புண்படும் வகையிலானது.
இந்த கூட்டத்தொடரில் பேசிய விதம் மற்றும் செயல்கள் நாடாளுமன்ற கண்ணியத்துடன் ஒத்து போகாத ஒன்று. அவையில் ஆரோக்கியம் நிறைந்த மரபுகளை கட்டமைப்பதற்காக ஒத்துழைப்பது என்பது நம் அனைவரின் கடமையாகும்.
இந்த கண்ணியம் வாய்ந்த அவையில், கோஷங்களை மற்றும் இடையூறுகளை நாம் தவிர்க்க வேண்டும். தீவிர மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதன்பின் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என கூறி அவர் தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 17 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-08-2025.
21 Aug 2025 -
அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு: மத்திய அரசு
21 Aug 2025புதுடெல்லி, அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதம்
-
வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தல்
21 Aug 2025மாஸ்கோ: வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தப்பட்டது.
-
இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள்: பிரதமர் மோடி
21 Aug 2025டெல்லி, இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
21 Aug 2025நெல்லை: மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நயினார் நாகேந்திரன் பேச்சு
-
ரகுமான் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Aug 2025சென்னை, ரகுமான்கானின் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
சென்னையில் 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
21 Aug 2025சென்னை, சென்னையில் இன்று 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்படுகிறது.
-
தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
21 Aug 2025டெல்லி: தெரு நாய்கள் விவகாரம் குறித்து அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
-
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்
21 Aug 2025புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
-
புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் அ.தி.மு.க. தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்- எடப்பாடி
21 Aug 2025அரக்கோணம்: புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் அ.தி.மு.க. தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி
21 Aug 2025நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி கூறினார்.
-
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு
21 Aug 2025மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
-
த.வெ.க. மாநாட்டில் தொண்டர்களிடம் விஜய் சொன்ன குட்டி கதை
21 Aug 2025மதுரை: த.வெ.க.மாநாட்டில் விஜய் தனது வழக்கமான பாணியில் குட்டிக் கதை ஒன்றை கூறினார். விஜய் சொல்லிய குட்டிக்கதை வருமாறு: "ஒரு குட்டிக்கதை சொல்றேன்.
-
இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் த.வெ.க. கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சு
21 Aug 2025மதுரை: த.வெ.க. கூட்டத்தில் விஜய் இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் என்று பேசினார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைப்பு
21 Aug 2025தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலை திரும்பும் மும்பை
21 Aug 2025மும்பை: வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு மும்பை திரும்பி கொண்டு இருக்கிறது.
-
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்
21 Aug 2025வாஷிங்டன்: உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
-
அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு
21 Aug 2025டெல்லி: அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
-
நீதிபதி பிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார்
21 Aug 2025அமெரிக்கா: உலகின் மிகவும் கனிவான நீதிபதி என மக்களால் அறியப்பட்ட நீதிபதி பிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார்.
-
இலங்கை தமிழர்கள் விவகாரம்: ஐ.நா. அமைப்பு முக்கிய முடிவு
21 Aug 2025ஜெனீவா: இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை ஐ.நா. அமைப்பு நிறுத்தி வைத்தது.
-
தேசிய சீனியர் தடகள போட்டி: தமிழக அணிக்கு 7 பதக்கம்
21 Aug 2025சென்னை: தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணிக்கு 7 பதக்கம் வழங்கப்பட்டது.
-
காஷ்மீரில் நிலநடுக்கம்
21 Aug 2025காஷ்மீர்: காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் கூறியதாவது:-
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலை தள்ளுபடி செய்து ரஷ்ய அறிவிப்பு
21 Aug 2025மாஸ்கோ: அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்க
-
தாய்மார்கள், தம்பி தங்கைகள் உனது அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்- விஜய்க்கு தாய் வாழ்த்து
21 Aug 2025மதுரை: தாய்மார்கள், தம்பி தங்கைகள் உனது அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்- விஜய்க்கு தாய் வாழ்த்தினார்.
-
யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிப்பு
21 Aug 2025வாஷிங்டன்: யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிக்கப்பட்டது.