எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். நேற்று ஜெர்மனியில் முதல்வர் மு .க .ஸ்டாலின் தமிழ்நாடு ரைசிங் ஜெர்மனி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசினார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- 23 புரிந்துணர்வு ஒப்பந்தம்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு ரைசிங் ஜெர்மனி முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் 9,070 புதிய வே லைவாய்ப்புகளை உருவாக்கும். இதன்மூலம், முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையால் ஜெர்மனியில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கையெழுத்திடப்பட்ட மொத்த முதலீடுகள் ரூ.7020 கோடியாக உயர்ந்து, 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இதில் நார்-பிரெம்ஸ் (ரூ.2000 கோடி முதலீடு மற்றும் 3,500 நபர்களுக்கு வே லைவாய்ப்புக ள் ), நோர்டெக்ஸ் குழுமம் (ரூ.1000 கோடி முதலீடு மற்றும் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்), மற்றும் ஈபிஎம்-பாப்ஸ்ட் (ரூ.201 கோடி முதலீடு மற்றும் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்) முன்னர் கையெழுத்திடப்பட்ட மூன்று முக்கிய ஒப்பந்தங்களும் அடங்கும்.
முக்கியமாக, தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பல நிறுவனங்கள் மீண்டும் முதலீடுகள் செய்து விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள முன்வந்துள்ளன. இது தமிழ்நாட்டின் ஒப்பற்ற தொழில்துறை, சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத்திறன் மீதான நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன கூறுகள், தொழில்துறை உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் உலகளாவிய தலைவர்களை இந்த மாநாடு ஒன்றிணைத்தது. முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக வென்சிஸ் எனர்ஜி (ரூ.1068 கோடி முதலீடு மற்றும் 5,238 நபர்களுக்கு வே லைவாய்ப்புக ள் ), பி.ஏ.எஸ்.எப். (ரூ.300 கோடி முதலீடு மற்றும் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்), பெல்லா பிரீமியர் ஹேப்பி ஹைஜீன் (ரூ.300 கோடி முதலீடு மற்றும் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்), ஹெர்ரெனக்னெக்ட் இந்தியா (ரூ.250 கோடி முதலீடு மற்றும் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்), பல்ஸ் (ரூ.200 கோடி முதலீடு மற்றும் 500 நபர்களுக்கு வே லைவாய்ப்புக ள் ), விட்சென்மேன் இந்தியா (ரூ.200 கோடி முதலீடு மற்றும் 450 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்) மற்றும் மாஷ் எனர்ஜி (ரூ.200 கோடி முதலீடு மற்றும் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்) ஆகியவை அடங்கும்.
நவீன சுகாதாரம் சுகாதாரம் மற்றும் மருத்துவத் தயாரிப்புகளில் பெல்லா பிராண்டைத் தொடர்ந்து போலந்தை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிறுவனமான பெல்லா ஹைஜீன், திண்டுக்கல் மாவட்டத்தில் அதன் நவீன சுகாதாரப் பொருட்கள் உற்பத்தி வசதியை விரிவுபடுத்துகிறது. ஆ ட்டோமொபை ல் துறைக்கான நெகிழ்வான உலோக குழல்கள் மற்றும் விரிவாக்க இணைப்பான்களில் முன்னணியில் உள்ள ஜெர்மனி நிறுவனமான விட்சென்மேன் குழுமம், தமிழ்நாட்டில் ஆட்டோ மோடிவ் மற்றும் தொழில் துறை பயன்பாடுகளுக்கான உற்பத்தியை விரிவுபடுத்துகிறது.
சேவைகள் பி.ஏ.எஸ்.எப். சுற்றுச்சூழல் கேட்டலிஸ்ட் மற்றும் மெட்டல் சொல்யூஷன்ஸ் அதன் செங்கல்பட்டு உற்பத்தி ஆலையை விரிவுபடுத்துகிறது. இந்த நிறுவனம் வினையூக்கிகள், உறிஞ்சிகள், பேட்டரி பொருட்கள் மற்றும் விலை மதிப்பற்ற உலோக தீர்வுகளில் சேவைகளை அளித்துவருகிறது. கியர் இல்லாத நேரடி இயக்கி தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஜெர்மனி காற்றாலை உற்பத்தியாளரான வென்சிஸ் எனர்ஜி ஏஜி, தமிழ்நாட்டில் காற்றாலை பாகங்கள் உற்பத்தி ஆலையை அமைக்கிறது.
சுரங்கப்பாதை துளை யிடும் எந்திரங்களில் உலகளாவில் முன்னணி நிறுவனமான ஹெர்ரென்க்னெக்ட், அதன் சென்னை ஆலையை விரிவுபடுத்துகிறது. மும்பை கடற்கரை சாலை மற்றும் சென்னை மெட்ரோ போன்ற திட்டங்களை இந்நிறுவனம் அதன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் மூலம் செயல் படுத்தும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பி.எம்.டபிள்யூ. குழுமத்தின் மூத்த தலைவர்களுடன் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடினார். அப்போது ஆட்டோமோடிவ் மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாட்டின் சிறப்பினை எடுத்துரைத்து, பி.எம்.டபிள்யூ. நிறுவனம் அதன் செயல்பாட்டை தமிழ்நாட்டில் அதிகப்படுத்திட அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின்போது, பி.எம்.டபிள்யூ. குழும நிறுவனத்தின் மூத்த தலைவர் கள், தமிழ்நாட்டின் வலுவான மின்சார வாகன உட்கட்டமைப்பை மேற்கோள்காட்டியது, மாநிலத்தின் மீதான அந்நிறுவனத்தின் ஆர்வத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.
ஜெர்மனியின் இரட்டை தொழில் பயிற்சி மாதிரியை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக நெக்ஸ்ட் மிட்டல்ஸ்டாண்ட் (ஆஸ்பில்டங்) உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 120 மாணவர்களுடன் தொடங்கி அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரமாக அதிகரிக்கும் இந்த திட்டம், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே உலக ளாவிய திறன் தரத்தை உயர்த்தும்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஐரோப்பா பயணம் அடுத்த கட்டமாக இங்கிலாந்து நாட்டில் தொடரும், அங்கு மேலும் பல முதலீட்டாளர்கள் சந்திப்புகள் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்வுகளும் நடைபெறும். இ ந்நிகழ்வின்போ து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 days ago |
-
செங்கோட்டையன் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி பதில்
02 Sep 2025மதுரை : செங்கோட்டையன் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
-
இம்மாதம் வெளியாகும் மிராய்
02 Sep 2025தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் “மிராய்”.
-
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
02 Sep 2025சென்னை, ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 15,320 பேருக்க
-
2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை வரவேற்றார் துணை முதல்வர் உயதநிதி
02 Sep 2025சென்னை : 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் நேரில் வரவேற்றார்.
-
வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசார் மீது திடீர் கல்வீச்சு: 50-க்கும் அதிகமானோர் கைது
02 Sep 2025பொன்னேரி : வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசார் மீது கல்வீசியதை தொடர்ந்து 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 10 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம்
02 Sep 2025ராமேசுவரம், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகும்
02 Sep 2025புதுடெல்லி, ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தின் அகவிலைப்படி, தீபாவளிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
-
செப். 19 அன்று வெளியாகும் போலீஸ் போலீஸ்
02 Sep 2025ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதல் : விமானம் அவசரமாக தரையிறக்கம்
02 Sep 2025மும்பை : நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதியதால் அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கப்பட்டது.
-
தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்
02 Sep 2025கர்நாடகா, தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி நீக்க உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு
02 Sep 2025சென்னை : சென்னை தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்களையும், உசிலம்பட்டி நகராட்சி தலைவரையும் பதவி நீக்கம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட
-
நீலகிரி: வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் : வனத்துறை சோதனையில் அதிர்ச்சி
02 Sep 2025நீலகிரி : வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
02 Sep 2025சென்னை : காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளி பலியானதையொட்டி அரவது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
-
அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்
02 Sep 2025திருப்பூர் : அமெரிக்க வரி விதிப்பை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-09-2025.
02 Sep 2025 -
கனமழை காரணமாக டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி
02 Sep 2025புதுடெல்லி : டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
-
காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் - சசிகாந்த் எம்.பி.
02 Sep 2025திருவள்ளூர் : காங்கிரஸ் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் என்று சசிகாந்த் எம்.பி. கூறியுள்ளார்.
-
கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம் : இலங்கை அதிபர் திட்டவட்டம்
02 Sep 2025கொழும்பு : கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம் என்று இலங்கை அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
எனது தாயை அவமதித்து விட்டனர்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் குற்றச்சாட்டு
02 Sep 2025புதுடெல்லி : என் தாயை மட்டும் அவமதிக்கவில்லை, நாட்டின் தாய்மார்களை அவமதித்து விட்டனர் என்று பிரதமர் மோடி வேதனையுடன் கூறியுள்ளார்.
-
மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளை எலிகள் கடித்ததில் காயம்
02 Sep 2025இந்தூர் : மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளை எலிகள் கடித்ததில் காயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நாளை மறுநாள் வெளியாகும் பேட் கேள்
02 Sep 2025இளம் வயது பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேட் கேள்.
-
அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள்: கர்நாடகா முதல்வருக்கு ஜனாதிபதி முர்மு பதில்
02 Sep 2025பெங்களூரு : கன்னடம் உள்பட அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள் நான் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு கூறினார்.
-
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி
02 Sep 2025சென்னை, சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
-
சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
02 Sep 2025சென்னை : சென்னையில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க. அரசின் தடைகளைக் கடந்து 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
02 Sep 2025சென்னை, பா.ஜ.க.