எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர். இதுதொடர்பாக பெரா என்ற வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, பொதுத்தேர்தல் துறையின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 4-ம் தேதியில் இருந்து எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ஆளும் கட்சியான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எஸ்.ஐ.ஆருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், அதிக பணி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர். இதுதொடர்பாக பெரா என்ற வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, பொதுத்தேர்தல் துறையின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எஸ்.ஐ.ஆர். பணியில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. இரவு நேரங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள்களிலும், தொடர்ச்சியாக பணிபுரிய வேண்டுமென மாவட்ட கலெக்டர்களால் கடுமையான பணி நெருக்கடி ஏற்படுத்தப்படுகிறது. அதை களைய வேண்டும். இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து விரிவான முறையீடு அளிக்கப்பட்டது. ஆய்வுக் கூட்டங்கள் என்ற பெயரில் அலுவலர்ளை வாட்டி வதைக்கும் கலெக்டர்களின் தன்னிச்சையான மனிதாபிமானமற்ற செயல்பாடுகளை கைவிட அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த வாட்டி வதைப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த பணியில் ஈடுபட்டுள்ள பல ஊழியர்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த கடுமையான குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. எனவே கூட்டமைப்பின் அவசர மாநில உயர்மட்டக் குழு கூட்டம் 16-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டப் பணிகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் கூட்டமைப்பின் சார்பில் பெருந்திரள் முறையீடு அளிக்கப்படும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை நேற்று முதல் எஸ்.ஐ.ஆர். தொடர்பான படிவங்கள் பெறுதல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட வாக்காளர் பட்டியல் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் முற்றாக புறக்கணிக்கப்படும்.
விண்ணப்பங்களை வாக்காளர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று தேர்தல் பிரிவில் ஒப்படைக்க 30 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதால் அவசர கதியில் இப்பணியை முடிக்க கால நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்படுவதை கைவிட வேண்டும். 30 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் அவசர கதியில் இப்பணியை முடித்திடுமாறு மாவட்ட கலெக்டர்கள் கடுமையான நிர்ப்பந்தம் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். தினமும் 3 வேளைகளில் நள்ளிரவு வரை கூகுள் மீட் என்ற ஆய்வுக்கூட்டம் நடத்தி அலுவலர்களை வாட்டி வதைப்பதை நிறுத்த வேண்டும். சனி, ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் இப்பணிகளை மேற்கொள்ள கலெக்டர்கள் கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இப்பணிகளை செம்மையாகவும், பிழையின்றியும் மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் மற்றும் புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். எஸ்.ஐ.ஆர். பணிகளில் இரவு-பகலாக ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும். பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். இந்தப் பணிகளால் வருவாய்த்துறை அலுவலர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் உடல் நிலை, வயது, பணி மூப்பு ஆகிய எதையும் கருத்தில் கொள்ளாமல் எந்திரத்தனமாக நடத்திடும் செயல்பாடுகளால் அதிருப்தியுற்று, அலுவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கான மனநிலையை இத்திட்டம் ஏற்படுத்தியுள்ளது. எனவே அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கி சுமூகமான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
09 Mar 2026சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்து விற்பனையானது.
-
மீண்டும் தள்ளிப்போகிறதா? 'ஜனநாயகன்' திரைப்படம் மறு ஆய்வு ஒத்திவைப்பு
09 Mar 2026சென்னை, விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான மறு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு
09 Mar 2026தெஹ்ரான், ஈரானின் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது.
-
மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
09 Mar 2026சென்னை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
09 Mar 2026சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர், அ.தி.மு.க.
-
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விஜய் வாழ்த்து
09 Mar 2026சென்னை, டி-20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழக சட்டசபை தேர்தல் தேதி வரும் 15ம் தேதி வெளியாகிறது
09 Mar 2026சென்னை, வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
3 கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. தலைமையில் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026சென்னை, விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வழியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதி த,வெ,க, சா
-
சட்டசபை தேர்தல் நடைபெறும் 3 மாநிலங்களில் பா.ஜ.க. மத்திய பார்வையாளர்கள் நியமனம்
09 Mar 2026டெல்லி, மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூன்று மாநிலங்களுக்கு மத்திய பார்வையாளர்களை பா.ஜ.க. தலைவர் நிதின் நவீன் நியமித்தார்.
-
மேற்கு ஆசிய போர் பதற்றம்: பாராளுமன்ற விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026புதுடெல்லி, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் குறித்தும், அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி எத
-
சவுதியில் இந்தியர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை: இந்திய தூதரக அதிகாரி தகவல்
09 Mar 2026ரியாத், ஈரான் போர் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 'ஏவுகணை தாக்குதலில்' ஒரு இந்தியர் இறந்ததாக வெளியான செய்திகளை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்தது.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து: ராகுல் மீதான அவதூறு வழக்கு: வருகிற 12-ம் தேதி விசாரணை
09 Mar 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.
-
வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் ராமதாஸ் இல்லை: நீதிமன்றத்தில் அன்புமணி தரப்பில் மனு தாக்கல்
09 Mar 2026சென்னை, 87 வயதாகும் ராமதாஸ் மருத்துவ காரணங்களால் பா.ம.க.வின் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் : திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேச்சு
09 Mar 2026தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேசினார்.
-
ஈரான் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பார்லி.யில் ஜெய்சங்கர் விளக்கம்
09 Mar 2026புதுடெல்லி, ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் விவகாரத்தில், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே சரியான தீர்வைத் தரும் என்று பாராளுமன்றத்தில் மத்திய வ
-
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மை வெற்றி: பிரதமராக பொறுப்பேற்கிறார் பாலேந்திர ஷா
09 Mar 2026காத்மண்டு, ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
-
பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
09 Mar 2026புதுடெல்லி, குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதாக
-
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் ரூ. 5.08 கோடியில் அமைக்கப்பட்ட அகத்தியர் நகர் விளையாட்டு திடல்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
09 Mar 2026சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 5.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கொச்சியில் நாளை நடைபெறவுள்ள என்.டி.ஏ. தேர்தல் பிரச்சார கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
09 Mar 2026கொச்சி, கொச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: காங்., வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் சிறப்பு குழு நாளை ஆலோசனை
09 Mar 2026சென்னை, காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் கொண்ட சிறப்பு குழு நாளை சென்னையில் ஆலோசனை நடத்துகிறது.
-
கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டல்: அமெரிக்காவில் தென்கொரியா 29 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
09 Mar 2026சியோல், தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்ப
-
கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: விலைவாசி உயர்வை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கை: பார்லி.யில் நிர்மலா சீதாராமன் பதில்
09 Mar 2026புதுடெல்லி, கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது.
-
திருப்புவனமம் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது மதுரை நீதிமன்றம்
09 Mar 2026சிவகங்கை, மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைப்பதாக மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் சம்மன்
09 Mar 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் இன்று (மார்ச் 10) டெல்லி சி.பி.ஐ.
-
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
09 Mar 2026அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.33 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.


