எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பவர்ஸ்டாருக்கென்று தனி பாடி லாங்குவேஜே இருக்கு” சிவா கலாட்டா
பவர்ஸ்டாருக்கென்று தனி பாடி லாங்குவேஜே இருக்கு” சிவா கலாட்டா
ஹிட் காம்பினேஷன் என சொல்லப்படுகிற சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்து, மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.. ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த நைனா சர்வார் என்பவர் நடித்துள்ளார். இவர்களுடன் சென்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா என பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
பவர்ஸ்டார் சீனிவாசன்
இதில் பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, “இங்கே என்னுடைய பொக்கிஷம் என்று சொல்லக்கூடிய தம்பி சிவா வந்திருக்கார்.. இல்லை...இல்லை.. பொக்கிஷம்னு சொல்லக்கூடது.. ஏற்கனவே ஒருத்தர் ‘நீங்கதாண்ணே எங்க பொக்கிஷம்னு என்கிட்டே சொல்லிட்டே இருப்பார். இப்ப அவர் எங்க இருக்கார்னே தெரியல.. அந்தமாதிரி சிவா பாசமான தம்பி.. என்னை எங்க பார்த்தாலும் கட்டிப்பிடிப்பார்.. முந்தி சிம்பு இப்படித்தான் கட்டிப்பிடிச்சார்.. இப்ப சிவா தம்பி அதேமாதிரி பாசத்தை வெளிப்படுத்துறார். கடைசிவரை இந்த பாசம் நிலைக்கனும்னு நான் நினைக்கிறேன்..இந்தப்படத்தோட தயாரிப்பாளர்கிட்டே கேட்டேன்.. ஏண்ணே நீங்க என்ன பிசினஸ் பண்றீங்கன்னு.. அதுக்கு அவரு கப்பல் விட்ருக்கேன்னு சொன்னார். படத்துல அவர் பணத்தை தண்ணீரா செலவு பண்ணியிருக்கிறதை பார்க்கும்போது அது உண்மையா இருக்கும்னுதான் தோணுது. இந்தப்படத்தோட டைரக்டர் திரைவண்ணன் நம்மகிட்ட வேலை வாங்குறது தெரியாத மாதிரியே நடிக்க வச்சுருவார். ஆனா மானிட்டர்ல பார்த்த சூப்பரா வந்திருக்கும். ரொம்ப திறமையானவர்.. அதனால வருங்காலத்துல அவருக்கு நானே ஒரு படம் கொடுக்கலாம்னு இருக்கேன்.
இந்தப்படத்துல நான் ஒரு கருவா இருக்கணும்னு நினைச்சவர் இந்த படத்தோட தயாரிப்பாளர்.. அவர்தான் என் ஆபீஸ் தேடிவந்து அண்ணே இந்தப்படத்துல நடிக்கிறீங்கன்னு சொன்னார்.. அப்படியா படத்தோட பேரு என்னன்னு கேட்டேன்.. ‘சிம்மக்கல் சேகர்’னு சொன்னார். ஏன் தம்பி ‘சிம்மக்கல் சீனு’ன்னு வைங்களேன்னு சொன்னேன்.. சரிண்ணே அப்படியே வச்சுருவோம்னு சொன்னாரு. ஆனா அப்படியே பேர் மாறி, இப்ப ‘அட்ரா மச்சான் விசிலு’ன்னு வச்சுட்டாங்க.. இந்தப்படத்தோட பாடலை கிட்டத்தட்ட பத்து தடவை போடச்சொல்லி தொடர்ந்து கேட்ருக்கேன்.. அந்த அளவுக்கு ரகுநந்தன் நல்லா மியூசிக் போட்டிருக்கார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துல திகட்ட திகட்ட லட்டு தின்னதுக்கு அப்புறமா இந்தப்படம் வந்துச்சு.. நான் நடிச்ச படங்கள்ல இந்தப்படத்துலதான் நிறைய சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடந்திருக்கு. இந்தப்படம் வந்தால் எனக்கு ஒரு கிரேடு கூடும்னு நினைக்கிறேன்.
இதுல சுவாரஸ்யமான விஷயம் ஒன்னை சொல்றேன்.. இந்தப்படம் ஆரம்பிச்சப்ப பேப்பர்ல பெரிய சைஸ்ல விளம்பரம் கொடுத்தாங்க.. என் படத்தை பெரிசா போட்டு, தம்பி சிவா படத்தை சின்னதா போட்ருந்தாங்க.. ஒருநாள் தயாரிப்பாளர் கோபி போன்ல கூப்பிட்டு, அண்ணே நமக்கு இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல இருந்து லெட்டர் வந்திருக்கு.. இத்தனை கோடி கட்டணும்னு சொன்னார். அய்யய்யோ.. என்ன தம்பி நீங்கதான தயாரிப்பாளர்னு பதறிட்டேன்.. அதாவது இந்தப்படத்தை நான்தான் தயாரிக்கிறேன்னு இன்கம்டாக்ஸ்ல நினைச்சுட்டாங்க.
அதுல இருந்து என் போட்டோ பேப்பர்ல வர்றது இல்ல.. ஏன் வரலைன்னு எனக்கும் தெரியல.. இந்தப்படம்னு இல்ல, நான் எந்தப்படத்துல நடிச்சாலும் அதை நான்தான் தயாரிக்கிறேன்னு நினைச்சுக்கிறாங்க.. அது உண்மை இல்ல. ஆனா நான் ஜனவரிக்கு மேல படம் எடுக்கத்தான் போறேன்.. மத்தபடி இந்தப்படம் முழுக்க காமெடி படமா வந்தருக்கு. என்ஜாய் பண்ணி பாருங்க” என்று கூறினார்..
சிவா
அவரை தொடர்ந்து பேசிய சிவா, “பவர்ஸ்டாரோட பெர்பார்மன்ஸ் பத்தி சொல்லனும்னா, ஒரு காட்சியில் நடிக்கும்போது எப்படியெல்லாம் ரியாக்சன் கொடுக்கலாம்னு தெரியும்.. ஆனால் இப்படியெல்லாம் கூட ரியாக்சன் கொடுக்க முடியுமாங்கிறதை பவர்ஸ்டாரை பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அந்த அளவுக்கு புதுசு புதுசா ரியாக்சன் கொடுப்பாரு. யாரவது ஒருத்தர் ஒரு காட்சில பீல் பண்ணி பேசும்போது நாம சாதாரணமா ஒரு ரியாக்சன் கொடுத்தா, அவரு மட்டும் சாட்டைல அடிச்சமாதிரி ஒரு ரியாக்சன் கொடுப்பார் பாருங்க... சான்சே இல்லை.. அவருக்குன்னு தனியா ஒரு பாடி லாங்குவேஜ் வச்சிருக்கிறாரு.
படத்துல என்னோட பேரு சிம்மக்கல் சேகர்.. பவர்ஸ்டாரோட தீவிரமான ரசிகனா நடிக்கிறேன். படத்துல பவர்ஸ்டாருக்கு 22வது பிறந்தநாள் கொண்டாடுற மாதிரி ஒரு பாடல் இருக்கு.. ஆனா இப்ப நேர்ல பார்க்கிறப்ப ஒரு வயசு குறைஞ்ச மாதிரி தெரியுறாரு.. காதல் தேசம் டைம்ல வந்திருந்தாருன்னா அப்பாஸுக்கு செம டப் கொடுத்திருப்பாரு. அந்தப்படத்தை இப்ப ரீமேக் பண்ணினா பவர் ஸ்டார் அப்பாஸாகவும் நான் வினீத் கேரக்டர்லயும் நடிக்க ரெடியா இருக்கேன்...
இந்தப்படத்துல வெறும் காமெடி மட்டும் இல்ல.. ஒரு நடிகரோட ரசிகர்கள் எந்த அளவுக்கு இருக்கணும்னு ஒரு மெசேஜ் சொல்லிருக்கோம்.. இந்தப்படத்துல நான் மதுரைக்காரனா நடிச்சிருக்கேன். நமக்கு சென்னை பாஷைன்னா பட்டையை கிளப்பிருவேன். ஆனா மற்ற ஊரு பாஷை பேசுறதுக்கு இங்கேயே ஹோம் ஒர்க்லாம் பண்ணமாட்டேன்.. மதுரை பாஷை பேசணும்னா அங்க போய் இறங்குனதும் அந்த ஊரு பையன்கள் பேசுறத பார்த்து, அத அப்படியே பாலோ பண்ணி, டப்பிங்ல வச்சு கரெக்ட் பண்ணிக்குவேன்” என்றார் சிவா.
இயக்குனர் திரைவண்ணன்
இயக்குனர் திரைவண்ணன் பேசும்போது, “கச்சேரி ஆரம்பம் படத்துக்குப்பிறகு ஐந்து வருடம் கழித்து இந்தப்படத்தை இயக்கிருக்கேன். இந்தப்படத்துக்கு கதாநாயகி தேடிப்பார்த்து, இங்கே எதுவும் அமையாம, கடைசியா பெங்களூர்ல கிடைச்ச தேவதைதான் இந்த நைனா சர்வார்.. கதை சொல்லியெல்லாம் அவங்களை ஒப்பந்தம் செய்யல.. வந்தபிறகுதான் கதை கேட்டாங்க.. மதுரை பொண்ணு கேரக்டரை சரியா புரிஞ்சு நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு தமிழ் தெரியாது. எனக்கு ஆங்கிலம் தெரியாது.. ஷூட்டிங் ஸ்பாட்ல எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மொழிபெயர்ப்பு பண்றதுல சிவா தான் ஒரு உதவி இயக்குனர் மாதிரி செயல்பட்டார்.
இந்தப்படத்துல ராஜ்கபூர், செல்வபாரதி, ஜெகன், டி.பி.கஜேந்திரன்னு நான் உள்பட மொத்தம் ஆறேழு இயக்குனர்களை நடிக்க வச்சிருக்கேன். குறிப்பா சொல்லணும்னா நான் யார்கிட்ட எல்லாம் வாய்ப்பு கேட்டு போனேனோ, யாருகிட்ட வேலை பார்த்தேனோ அந்த டைரக்டர்களை எல்லாம் இதுல நடிக்க வச்சுருக்கேன்.. இந்தப்படத்தோட கதையை வெறும் 20 நிமிடம் மட்டும் கேட்ட தயாரிப்பாளர் கோபி இதை உடனே தயாரிக்கலாம் என கிரீன் சிக்னல் கொடுத்துட்டார்.
கச்சேரி ஆரம்பம்னு சொன்னாலே அடுத்து அட்ரா மச்சான் விசிலுன்னு தான் சொல்வாங்க... ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கச்சேரிய ஆரம்பிச்சு வச்ச எனக்கு இப்பத்தான் அட்ரா மச்சான் விசிலுன்னு சொல்ல நேரம் வந்திருக்கு. இந்தப்படத்துல நானும் மூணு பாட்டு எழுதியிருக்கேன்.. அதுக்கு காரணம் இசையமைப்பாளர் ரகுநந்தன் தான். அதேமாதிரி இந்தப்படத்தோட ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா என்கிட்டே வந்து நடிக்க சான்ஸ் கொடுங்க சார்னு கேட்டார். நான் நடிக்க சான்ஸ் கொடுத்து, ஒளிப்பதிவும் பண்ண வச்சிருக்கேன்.. என கூறினார்..
மேலும் நாயகி நைனா சர்வார். சென்ராயன் ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா, இசையமைப்பாளர் ரகுநந்தன், எடிட்டர் சுஜித், தயாரிப்பாளர் கோபி உட்பட படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள்.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இயக்குனர் திரைவண்ணன், “எப்படி ஒரு டாக்டர், ஒரு வக்கீல், ஒரு போலீஸ் இவங்கள்ல ஒருத்தரை வில்லனா காட்டுறோமோ, அதேபோலத்தான் ஒரு நடிகனை வில்லனா காட்டியிருக்கோம்.. அவ்வளவுதான்.. பவர்ஸ்டார் தான் வில்லத்தனம் பண்ணிருக்கார். இது எந்த நடிகரையும் குறிப்பிட்டு பண்ணலை.. ரஜினி சாரை கிண்டல் பண்ற மாதிரி எந்த காட்சியும் இல்ல.. நாங்க அவ்வளவு பெரிய ஆளுமில்ல.. அவரு இமயமலை.. நாங்க வெறும் பரங்கிமலை” என இந்தப்படம் குறித்த சர்ச்சைக்கு விளக்கமும் கொடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி தங்கம் விலை புதிய உச்சம்
22 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.100560-க்கும் விற்பனையானது.
-
10 அம்ச கோரிக்கை தொடர்பாக அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் மூன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
22 Dec 2025சென்னை, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம
-
தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்கள் நீக்கம்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி
22 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்
22 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து தி.மு.க.
-
பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
22 Dec 2025சென்னை, மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39 ஆயிரம் விண்ணப்பங்கள் தற்போது வரை வந்துள்ளன: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
22 Dec 2025சென்னை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 39 ஆயிரத்து 821 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும், 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் அளிக்கப்பட்டுள்ளதா
-
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நியூசி., பிரதமர் லக்சன் பேச்சு
22 Dec 2025புதுடெல்லி, இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வா
-
கிரிக்கெட்டையே விட நினைத்தேன்: 2023 உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்தார் ரோகித்
22 Dec 2025மும்பை, ஐ.சி.சி.
-
2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
22 Dec 2025வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
575 ரன் குவிப்பு....
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-12-2025.
23 Dec 2025 -
தங்க நகைகள் மீதான கடன்களில் எச்சரிக்கையாக இருக்க நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
23 Dec 2025சென்னை, நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி
-
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக தேர்தலை எதிர்கொள்வோம்: பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேட்டி
23 Dec 2025சென்னை, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதிர்கொள்வோம் என்று தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்தித்து பேச்சு: அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை
23 Dec 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் சந்தித்து பேச
-
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குகிறது இந்தியா
23 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
-
இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் வங்காள தேச தூதரகத்தின் முன் இந்து அமைப்பினர் போராட்டம்
23 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன் விஸ்வ இந்து பரிஷத் போராட்டம் நடத்தினர்.
-
பீகாரில் வாகன பேரணி நடத்தி பா.ஜ.க. வலிமையை காட்டிய நிதின் நபீன்
23 Dec 2025பாட்னா, பீகாரில் வாகன பேரணி நடத்தி பா.ஜ.க.வின் செயல் தலைவர் நிதின் நபீன் பா.ஜ.க. வலிமையை காட்டியுள்ளார்.
-
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை நாளை முதல் வழங்கும் இண்டிகோ
23 Dec 2025மும்பை, விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன
-
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து நிச்சயம் வேண்டும்: அதிபர் ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை
23 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
-
நெதர்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்: கூட்டத்தின் மீது கார் மோதி 9 பேர் காயம்
23 Dec 2025ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணுவகுப்பு காண கூடியிருந்தவர்கள் மீது மோதிய கார் ; 9 பேர் காயம்
-
அமெரிக்கா: சிறிய ரக விமானம் கடலில் விழுந்ததில் 5 பேர் பலி
23 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கெல்வெஸ்டான் நகர் அருகே கடற்பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளான
-
இலங்கை கடற்படையால் 10 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
23 Dec 2025ராமேஸ்வரம், எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
-
சேலத்தில் டிச. 29-ம் தேதி நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல: அன்புமணி தரப்பு விளக்கம்
23 Dec 2025சென்னை, சேலத்தில் 29-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல.
-
உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள்: தேசிய விவசாயிகள் தினத்தில் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
23 Dec 2025சென்னை, உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள் என்று தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளஆர்.
-
எப்ஸ்டீன் ஆவணங்களில் நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் படங்கள் மீண்டும் சேர்ப்பு
23 Dec 2025வாஷிங்டன், எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப்பின் புகைப்படங்களை அந்நாட்டு நீதித்துறை மீண்டும் சேர்த்துள்ளது.


