எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வார ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: Sunday, December 21, 2025 to Saturday, December 27, 2025
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்– பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி -- இந்த வாரம் பெண்களால் சந்தோஷம் இருக்கும். விருந்துகளிலும், கேளிக்கை நிகழ்ச்சிகள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். நண்பர்கள், மற்றும் உறவுகளிடம் சுமூகமாக நடந்து கொண்டால் கருத்து பேதங்கள் தவிர்க்கலாம். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது. தீய குணமுள்ள நண்பர்களைத் தவிர்த்தால், உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களை கொண்டதாக அமையும். புதிய தொழில் தொடர்புகள், அரசு வகை ஆதாயங்களும் தொழில் மேன்மையும் உண்டு. நீங்கள் விரும்பிய பொருட்கள் எல்லாம் கிடைத்துவிடும்.
பரணி -- இந்த வாரம் விருந்து, கேளிக்கைகளில் என மகிழ்ச்சியின் உச்சிக்குச் செல்வீர்கள். நண்பர்களிடம் வேண்டாத விவாதங்களை தவிர்த்து எப்போதும் போல் ஜாலியாக பொழுது போக்குவது நல்லது. பெரியவர்கள் நல்வார்த்தைகள் கேட்டு, அதன்படி நடந்தால் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் எதிர்பார்க்கலாம். வாகனப் பயணங்களின் போது தேவையான ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். நிலையற்ற வியாபாரத்தில் வருமானம் குறையும் நிலை ஏற்படலாம். பெண்களின் ஆடம்பர த்தினால் ஏற்படும் கட்டுக்கடங்காத செலவுகள் காரணமாக கடன் வாங்க நேரும். அரசுப் பணியாளர்களின் அயராத உழைப்பை கண்டு உயர் அதிகாரிகளின் பாராட்டால் மனம் மகிழும்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் மகான்களின் சந்திப்பால் மனதில் அமைதி நிலவும். நேர்த்தியாக உடையணிந்து, விருந்தினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். இன்பப் பயணங்களால் சந்தோஷம் பெருகும். முழு முயற்சியின் காரணமாக காரியங்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். சிலருக்குப் போதுமான வருமானம் இன்றி, பணத் தட்டுப்பாட்டால் பிரச்சனைகள் அதிகம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். சமையல் செய்யும் போது பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது சிலருக்கு பணி காரணமாக தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். அரசு ஆதாயங்களால் தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசீரிஷம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் புதிய தொழில் தொடர்புகள் மூலம் அதிக இலாபங்களை பெறுவீர்கள். வியாபாரத்திலும் புதுப்புதுப் பொருட்களின் வருகை காரணமாக இலாபங்கள் எதிர்பார்ப்புக்கு மேல் இருக்கும். இல்லற வாழ்க்கையில் துணையின் உதவியோடு முன்னேற்றம் மற்றும் சுகானுபவங்கள் காண்பீர்கள். இளைஞர்களுக்குத் தங்கள் படிப்பு கேற்றபடி உயர்வான சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். சிலர் பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க நேரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு, அரசு வழி ஆதாயங்கள் ஏற்படலாம். குழந்தைகளின் முன்னேற்றங்கண்டு பெற்றோர் மகிழ்வர். குடும்பத்தில் வீண்வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
ரோகிணி – இந்த வாரம் பெண்களின் மூலம் எதிர்பாராத தன வரவுகள் ஏற்படும். தெய்வீக ஈடுபாட்டால், காதுக்கு இனிய பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். புதிய வியாபார விரிவாக்கத் திட்டங்களுக்கான வங்கிக் கடன்கள் கூடிய விரைவில் கிடைக்கும். திறமைமிக்க ஊழியர்களின் ஒத்துழைப்பு மூலம் உற்பத்தி அதிகரித்து, இலாபமும் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்கள் தங்கள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு, பதவி உயர்வுக்கான பரிந்துரைகள், சிபாரிசுகளை பெற்று மகிழ்வர். சிலருக்குப் பாசம் மிக்க உறவுகளைப் பிரிந்து வாழ நேரிடலாம். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம்.
மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் உங்கள் முழு முயற்சியின் காரணமாக வேலையில் ஏற்படும் சுணக்கம் நிலைகளை சீர்படுத்தி, சிக்கல்களில் இருந்து முன்னேறுவீர்கள். வள்ளுவன் வாக்கை மறக்காமல் ஏறி வந்த ஏணியை மறந்து விடாமல் இருப்பது முன்னேற்றம் தரும். சிலருக்கு மேல் மட்டத்தில் உள்ள முக்கிய நபர்களின் உதவியால், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். புதிய வியாபார தொடர்புகள் மூலம் இலாபத்தின் சதவிகிதம் அதிகரித்து, வங்கி கையிருப்பு களும் கூடும். சிலருக்கு அரசுவகையில் தொல்லைகள் ஏற்படலாம். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மனக் குழப்பங்கள் ஏற்பட்டு மதிப்புக் குறையலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள் இந்த வாரம் நீங்கள் திட்டமிட்டுச் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையேயான உறவு பலப்படும். குடும்பத்தார், நண்பர்களிடம் பிறரிடம் கோபத்தால், துர்வார்த்தைகளை பேசாதிருப்பது நல்லது, சகோதர்களிடம் விரோதம் ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்லுங்கள். வேலை விஷயமாக அரசிடம் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் விரைவில் வந்து சேரும். வியாபாரத்தில் திட்டமிட்டபடி புதிய விரிவாக்கங்கள் செய்து முடிப்பீர்கள். அதன் காரணமாக வருவாய் ஓரளவு அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்களுக்கு தங்கள் வாக்கு வன்மையால் வருமானம் அதிகரிக்கும். பெண்களால் ஆதாயம் ஏற்படும் என்றாலும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
திருவாதிரை --- இந்த வாரம் தம்பதிகளுக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாகி, இணைந்து பேரின்பம் அடைவது உறுதி. புதிதாக திட்டமிட்ட காரியங்களில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து இறங்குவது நல்லது. விடுமுறைக் காலம் ஆதலால் குழந்தைகளின் சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளை கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆயினும், அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்து சமாளிப்பது கஷ்டமாகும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுவது உறுதி. உறவுகளுக்குள் ஒற்றுமை ஓங்கும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளைக கடைப்பிடிப்பீர்கள். அரசுவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள் இந்த வாரம் பாசம் மிக்க பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் சுகம் ஏற்படும். உறவுகளின் உல்லாசப் பொழுது போக்குகளும், மற்றும் விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். அரசுப் பணியாளர்களே உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். பதவி உயர்வுக்கும் அனுகூலமாக இருக்கும். தொழிலில் ஏற்படும் முழுமையான ஈடுபாடு காரணமாக தாராளமான பணவரவு இருக்கும். சிலருக்கு வெயில் காரணமாக அசதி, தலைவலி, காய்ச்சல், உஷ்ண சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படலாம். அதன் காரணமாக மருத்துவச் செலவுகள் கூடும்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் பெரிய மகான்களின் தரிசனம் ஏற்பட்டு மனதில் அமைதி நிலவும். பெரியவர்கள் நல்வார்த்தைகள் கேட்டு, ஞானம் பெறுவீர்கள். அரசுப் பணியில் இருப்பவர்கள் எதிர்பார்த்த அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பயணங்களில் வணிகர்களுக்கு பல பிரச்சனைகளால் தொழிலில் தடைகள் ஏற்படலாம். அதன் காரணமாக வருமானம் குறையும் நிலை ஏற்படலாம். குழந்தைகள் தரும் தொல்லைகளால் மனவருத்தம் ஏற்படும். அவர்கள் வழியாக சென்று அவர்களை திருத்துவது நல்லது. புதிய வியாபார முயற்சிகளால் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும்.
அஸ்தம் – இந்த வாரம் ஸ்த்ரீ சுகம் கூடும். கேளிக்கை ஈடுபாட்டால் மகிழ்ச்சியும், நெருங்கிய உறவுகள் வருகையால் உற்சாகம் பிறக்கும். அரசாங்கப் பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைப்பது தள்ளிப் போகலாம். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். கூட்டாளிகளால் பண விஷயம் பிரச்சனைகள் தலைதூக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவு, காவல்துறையினர் மூலம் அச்சம் ஆகியவை ஏற்படலாம். திட்டமிடப்பட்ட பயணங்களில் முன்பதிவு கிடைக்காமல் தடைகள் ஏற்படலாம்.
சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாக கழியும். பிறரின் உயர்வு கண்டு ஏற்படும் பொறாமை மற்றும் கோபங்களை தவிர்ப்பது நல்லது. கோபம் வரும் போது மனதில் தெய்வ சிந்தனை ஏற்பட்டால் அமைதி கிடைக்கும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து விடுவார்கள். அரசு சம்பந்தமான வேலைகள் தாமதப்படலாம்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் --- இந்த வாரம் பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தன லாபம் அதிகரிக்கும். புதிய விரிவாக்கங்கள் செய்வதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிவுடன் நடக்கும் பணியாளர்களுக்கு, அதிகாரிகள் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும். சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும். புதிய கொள்முதல் களால் வியாபாரம் பெருகி இலாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும்.
திருவோணம்- இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான உயரக வாகன வசதி அமையும். கணவன், மனைவி இடையே மிகுந்த ஒற்றுமை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். அலங்காரப் பொருட்கள் மற்றும் வாசனை திரவிய வியாபாரங்களில் அதிக இலாபம் காணலாம். நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் அதிக இழப்பைத் தவிர்க்கலாம். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கு உரிய முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும். தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்களால் தேகசுகம் குறையும்.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். கடமை உணர்வு மிக்க அரசு ஊழியர்களுக்கு பிறருக்கு கட்டளைகளை இடும் அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பொழுது போக்குச் செலவுகள் அதிகமாகும். பணியாளர்கள் கடினமாக உழைத்தாலும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது. பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். மொத்தத்தில் வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களிலிருந்து போதுமான அளவு பணவரவு ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். நண்பர்கள், உறவுகள் மூலமாகவும் பணவுதவி கள் கிடைக்கும். புதிதாக தொடங்கப்படும் தொழிலில் எச்சரிக்கையுடன் இருந்தால் வருமான வாய்ப்புகள் பெருகும். தேவையற்ற கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தாய்வழி உறவுகளால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். நல்லவர்கள் தொடர்பால் நன்மைகள் பல ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளிக்கும்.
பூசம் -- இந்த வாரம் நல்லோர் சேர்க்கையால், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். உயர் வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். தாயின் சொல் கேட்டு, வீட்டில் மனைவியிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். புதிய தொழிலாளர் சேர்க்கை காரணமாக தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் உற்பத்தி பெருகும். சிலருக்குக் கூட்டு வியாபாரத்தில் இலாபம் ஏற்படும். திடீரெனக் காணாமல் போன பொருட்கள் சேதாரமின்றி கைக்கு வந்து சேரும். சிலருக்குக் காரியத் தடைகள் ஏற்படலாம். அரசுப் பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்.
ஆயில்யம் – இந்த வாரம் வீடு, மனை ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். . பூரண சயன சுகம் ஏற்படும். மனதிற்கினிய பெண்கள் சல்லாபம், முயற்சிகளில் வெற்றி போன்றவற்றால் மனம் மகிழும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். முழு மூச்சுடன் ஈடுபடும் வேலைகளில் புதிய சாதனைகளை படைப்பீர்கள். பெரியவர்கள் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவு மற்றும் புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். தங்கம், வெள்ளி, துணி, ஆயத்த ஆடைகள், புத்தகங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் ஆகிய வியாபாரத்தில் நல்ல ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். அரசுப் பணியில் எதிர்பார்த்தபடி நல்ல இடமாற்றங்கள் ஏற்படலாம்.
சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள், பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் – இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிறைவேறி மகிழ்வு தரும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த படி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்கள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சோம்பல் காரணமாகச் சுறுசுறுப்பற்ற நிலை ஏற்பட்டு ஆதாயம் குறையும். அதன் காரணமாக முக்கிய செலவுகளுக்கு கூட பிறரின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படும்.
பூரம் – இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை ஆன்மிக காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். இல்லத்தில் கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் என மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் அமைதியை நிலை நாட்ட வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்து சிக்கனமாக இருந்தால், பணமுடைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது. வியாபாரம் மற்றும் தொழில் வழி புதுப்புது மாற்றங்களால் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் நெளிவு சுளிவுடன் நடக்கும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும்.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் சுப காரியங்களுக்கு வீடே விழாக்கோலம் காணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். மனதுக்குப் பிடித்த படி அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கேளிக்கை ஈடுபாட்டால் மகிழ்ச்சி ஏற்படும். உறவுகளின் வரவு மூலம் உற்சாகம் பொங்கும். உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், எவ்விதத் தடையின்றி வெற்றி பெறும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். அத்துடன் நல்ல பாராட்டு பெறுவீர்கள். புதிய வியாபார முயற்சிகளால் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும்.
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கி மகிழ்வீர்கள்.. சுகமும், ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். குடும்பத்தினரிடையே ஓரளவே ஒற்றுமை நிலவும். அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களில் இடையூறுகள் ஏற்படலாம். புதிய தொழில் முயற்சிகளுக்காக எதிர்பார்க்கப்படும் வங்கிக் கடன் உதவிகள் தாமதத்திற்கு பின்னர் கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். அக்னி பயம், திடீர் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்தக் காரியத்தையும் முழுத் திறமையையும் காட்டித் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும்.
சுவாதி – இந்த வாரம் உங்கள் திறமை, முழு முயற்சி ஆகியவற்றின் காரணமாக உங்கள் பணி இலக்கை எளிதாக அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். பொருளாதார நிலை உயர்வால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். சிலருக்குப் பிள்ளைப் பேறு ஏற்படலாம். தொழிலில் புதிய வாய்ப்புகள் மற்றும் லாட்டரி யோகம் ஆகியவை ஏற்படலாம். குடும்பத்தில் உறவுகளிடையே பாசம் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளை அனுசரித்து சென்றால் தொழில் அல்லது வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்கலாம்.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சுற்று வட்டாரத்தில் நல்ல புகழ் மற்றும், கௌரவம் உண்டாகும். உங்கள் அபரிமிதமான அறிவுத் திறனால் கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் ஆகியவை கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க தக்க சமயத்தில் பணவரவு ஏற்படும். சிலருக்குப் புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன்களுக்கான முயற்சிகள் வெற்றி பெறும். அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். அதைத் தக்க வைத்துக் கொள்ள கடின உழைப்பு தேவை. சிலருக்குச் சில நேரங்களில் சுறுசுறுப்பான நிலை நிலவும்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் பலவழிகளிலும் பணவரவு ஏற்படும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும் எதையும் சாதிக்கும் திறன் அதிகரிக்கும். பிராயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும். அரசு உதவிகள் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மதிப்பு உயரும். அதிகாரம் மிக்க பதவிகளை அலங்கரிக்கும் நிலைக்கு நீங்கள் உயர்வீர்கள். தொழில் புரிபவர்கள் புதிய எந்திரங்களை வரவழைத்து உற்பத்தியை பெருக்கி ஆதாயம் காண்பர்.
உத்திரட்டாதி- இந்த வாரம் உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். மதிப்பு மிக்க பெரியவர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தங்கள் திறமைக்கு ஏற்றபடி புகழ், கௌரவம் கூடும். தேவையான நேரத்தில் நண்பர்களின் உதவி கண்டிப்பாகக் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். தொழிலில் முழு வெற்றி அடைய அதிக முயற்சிகள் தேவைப்படும். அனைத்து வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் தர்க்கம் செய்யாதிருப்பது நல்லது. அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரும்.
ரேவதி- இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். பணியில் முழுக் கவனம் செலுத்துங்கள். ஏனெனில், நீங்கள் உயிரைக் கொடுத்து உழைத்தாலும், மேலதிகாரி அதில் ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பார். ஆயினும் சகப் பணியாளர்கள் உதவியால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்குச் சுறுசுறுப்பற்ற நிலையாலும், மந்த புத்தியாலும் காரியத் தடைகள் ஏற்படலாம்.
தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் – இந்த வாரம் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிவர். பிள்ளைகளின் முன்னேற்றங்கண்டு பெருமை கொள்வீர்கள். இல்லத்துக்கு தேவையான நவீன வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி அனுபவிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பின் சிறப்பு பாராட்டுப் பெறுவதோடு, பதவி உயர்வுக்கு கை கொடுக்கும். வண்டி, வாகனங்களில் செல்கையில் அபராதம் செலுத்தாமல் இருக்க அனைத்து ஆவணங்களையும் மறவாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள். பொருளாதார நிலையை பொறுத்தவரை சீராக இருக்கும். தெய்வீக கைங்கர்யங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு தான தர்மங்கள் செய்ய முற்படுவார்கள்.
பூராடம் – இந்த வாரம் அனைத்து வசதிகளும் இன்பமும் ஏற்படும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பால் உயர்வு ஏற்படும். அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீர்கள். நீண்ட நாட்களாக தீட்டிய திட்டங்களின்படி வட இந்திய யாத்திரை செல்லும் நிலை ஏற்படலாம். செய்தொழில், வியாபாரம் எதுவானாலும் புதிய திட்டங்கள் மூலம் அதிக இலாபங்களை அடைவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகள் கெடுபிடிகளும் அதிகமாகும். தன வருமானம் அதிகரித்தால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக இருக்கும். அதற்கேற்ப செலவினங்களும் கூடும். தொழிலில் மிகப் பெரிய சாதனைகளை புரிவீர்கள்.
உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தங்கள் தனித் திறமைக்கு ஏற்ப பெயரும் புகழும் கிடைக்கும். புதிய கடன்களை அடைக்க, சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். பங்குச் சந்தையில் ஆலோசித்து இறங்குவது நல்லது. பதறாத காரியம் சிதறாது முடியும் என்பதால், எந்த ஒரு காரியத்தையும் பதட்டமின்றி பொறுமையாக செய்தால் வெற்றி நிச்சயம். பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துவது நல்லது. சிலருக்குப் பணி அல்லது வீடு ஆகிய இடமாற்றங்கள் ஏற்படலாம்.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் சிலர் வேலை பார்க்கும் இடத்தில் காதல் வயப்பட்டு, எதிர்ப்புகளுக்கு இடையே, கல்யாணத்தில் முடியும். நெருங்கிய கூட்டாளிகள் ஏமாற்றப்படுவதை தவிர்க்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மனைவியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் இல்லத்தில் இன்பம் பொங்குவதோடு, முன்னேற்றங்களும் தேடிவரும்.. உத்தியோக முயற்சியில் இருப்பவர்களுக்குப் போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். பெண்களால் இலாபம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும். வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர்.
அனுஷம் – இந்த வாரம் சிலருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பலவழிகளிலும் பணவரவுகள் அதிகம் கிடைக்கும். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் அவர்களின் பேச்சுத் திறனால் அதிகரிக்கும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாகத் தொழில் புரியும் வாய்ப்புகள் ஏற்படும். திரைத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இதுநாள் வரையில் இழுபறியாக இருந்த வழக்குகள் பைசலாகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர் பார்க்கலாம்.
கேட்டை – இந்த வாரம் பெரியவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்ல முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். தாயாரின் அனுகூலமான வார்த்தைகள் உற்சாகம் அளிக்கும். அனைத்து பணிகளுக்கும் மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். மேல்மட்ட அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது சிறப்பு. பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் உயர் வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். உதவிகரமான புதிய, நல்ல நண்பர்கள் கிடைப்பது. இனிய பயணங்கள் மற்றும் புண்ணியத் தல யாத்திரைகள் பலன் அளிக்கும். எழுத்துத் தொழிலில் வேலையில் காட்டப்படும் சிரத்தை மற்றும் கடின உழைப்பால் கல்லாக் கட்டுவீர்கள். தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். உறவுகளிடையே ஒற்றுமைக் குறைவு உறவில் விரிசல்கள் ஏற்படும். பதட்டப்படாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் சமாதானமாகப் போவது நல்லது. விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சலுக்கு தக்க ஆதாயம் ஏற்படும்.
சதயம்- இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். ஆக்கமும், ஊக்கமும் பெருக சுயமாக சம்பாதிக்கும் வழிமுறைகளை கண்டறிவீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் இல்லத்தரசியின் உதவிகள் கை கொடுக்கும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் சொல் கேட்டு நடந்தால் உன்னத நிலை அடைவர். சிலருக்கு அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் மதிப்பு, கௌரவம் உயரும். பருவநிலை காரணமாக சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். அதன் காரணமாக குடும்ப முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் நடவடிக்கைகள் சந்தோஷத்தைத் தரும். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும். சிறப்பான பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்ப உளவுகளின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ வைப்பீர்கள். நல்லதொரு வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். மிகக் கடினமான நண்பர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-12-2025.
24 Dec 2025 -
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம்: எம்.ஜி.ஆருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் என்று புகழஞ்சல
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: சிறுபான்மையினருக்கு காவலனாக இருப்போம் என உறுதி
24 Dec 2025சென்னை, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.
-
விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம்: ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு: செய்து அரசாணை வெளியீடு
24 Dec 2025சென்னை, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்தற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
-
த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
24 Dec 2025சென்னை, த.வெ.க.
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். படத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
-
அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
24 Dec 2025சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க.
-
தன்மானம் காக்க, தன்னையே தந்தவர்: பெரியாரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் என்று அவரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
விஜய் ஹசாரே கோப்பை: 50 ஓவர்களில் 574 ரன்களை எடுத்து பீகார் அணி சாதனை
24 Dec 2025பாட்னா, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் முதல்முறையாக இஸ்ரோ புதிய சாதனை
24 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, அமெரிக்காவின் ஏ.எஸ்.டி.
-
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன பேருந்துகளின் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Dec 2025சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
நாட்டில் புதிதாக மேலும் 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி
24 Dec 2025புதுடெல்லி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை மேலும் பலப்படுத்தும் விதமாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
எம்.ஜி.ஆர். பாதையில் பயணித்திட உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்
24 Dec 2025கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
24 Dec 2025புதுடெல்லி, டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி
24 Dec 2025கடலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இலங்கைக்கு இந்தியா உதவி செய்வது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
24 Dec 2025கொழும்பு, புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி செய்து வருவது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
நாகையில் அதிர்ச்சி சம்பவம்: மதுபோதையில் மனைவி கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்..!
24 Dec 2025நாகை, நாகையில் மதுபோதையில் மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


