எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வார ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: Monday, September 22, 2025 to Sunday, September 28, 2025
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி -- இந்த வாரம் புதிய முயற்சிகள் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத தன வரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். வாடிக்கையாளரிடம், நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். பிரபலமானவர்களின் அன்பும், நட்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும்.
பரணி -- இந்த வாரம் அரசு பதவியில் உள்ளவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, தங்கள் பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கு நல்லது. தொழிலில் உற்பத்தி பாதிப்புகள் ஏற்படலாம். ஆயினும், எதிர்பார்த்த இனங்களில் நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீடு, கடை வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் லாபம் தரும். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவம் உண்டாகும். சிலருக்கு ஆடம்பரச் செலவுகள் மூலம் பண முடை ஏற்படலாம். அச் சமயங்களில், உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும். அரசுப் பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மைகள் ஏற்படும். அவர்களின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் தடைகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும். சிலருக்கு எதிரிகள் பணமும் வந்து சேரும். தொழிலில் எதிர்பார்த்தபடி ஆதாயங்கள் ஏற்பட்டு பொருளாதார உயர்வில் முன்னேற்றம் ஏற்படும். பூஜை வழிபாடுகள் மூலம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பயணத்தின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.
ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசீரிஷம்-1,2 பாதங்கள்)
கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் நல்ல மனிதர்களின் தொடர்புகள் மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். வாழ்க்கையில் உங்கள் திறமையால் நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தீட்டி இலாபத்தை அதிகரிக்க முயல்வீர்கள். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். அடிக்கடி கோபப்படுவது குறைந்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தாய்வழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். எதிரிகளை சுலபமாக வெல்லும் திறன் ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டு.
ரோகிணி – இந்த வாரம் விருந்தினர் வருகையால் வீட்டில் சந்தோஷம் பெருகும். சினிமா, பொழுது போக்குதல் எனச் செலவுகளுக்கும் குறைவிருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். குழந்தைகளுக்குச் செலுத்த வேண்டிய கல்லூரிக் கட்டணங்களுக்கான வங்கி உதவிகளுக்கு முயற்சித்தால் தேவையான கடன் உதவிகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் எப்போதும் பணம் விஷய சிந்தனையுடன் இருப்பார்கள். கோபத்தை அடக்கிக் குடும்பத்துடன் அனுசரித்துப் போவது நல்லது. அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில விஷயங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுவது உறுதி.
மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய சாதனைகள் புரிந்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவார்கள். தன வருமானம் கூடும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சம்பந்தமான நற்செய்திகள் வரும். விற்பனைத் திறமைகளைக் காட்டி தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். அரசு அதிகாரிகள் சந்திப்பு அனுகூலமாக இருக்கும். புதிய பெண்களின் நட்பு மனக் களிப்புத் தரும். மனைவியிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சிலருக்கு மன சஞ்சலங்கள், அலைச்சல்களும் ஏற்படலாம். திடீர் செலவுகள் அதிகரிக்கும். வாரக் கடைசியில் புதிய முயற்சிகள் மூலம் தனவரவு அதிகரித்து எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
மிதுனம்
(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் உங்களுக்கு எதிர்பார்ப்புக்கு மேல் தாராளமான பணவரவு அதிகரித்து மனமகிழ்ச்சி கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். பணிபுரியும் நண்பர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சாதுக்களின் தரிசனம் மற்றும் புண்ணிய கதைகள் கேட்டல் என பொழுது பக்தி மயமாக கழியும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். சிலருக்கு வியாபாரப் போட்டிகள் காரணமாக வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் தனித்திறமைகள் மூலம் புதிய இலக்குகளை எட்டி அதிக இன்சென்டிவ் மற்றும் பாராட்டு பெறுவர்.
திருவாதிரை – இந்த வாரம் இறை தரிசனத்தால் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் அடைவீர்கள். உங்களுக்குப் பணம் சம்பாதிப்பதில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊக்கம் ஏற்படும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலமான நடவடிக்கைகளால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்க தாமதம் ஏற்படும். சிலருக்கு பூமி, வீடு என அசையாச் சொத்துக்கள் சேரும். காவல்துறை மற்றும் இராணுவப் பணியாளர்கள் பல சாகசங்களை நிகழ்த்துவர். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் மனக் கசப்புக்களை தவிர்க்கலாம். அரசு பணிபுரியும் பெண்கள் அதிகாரிகளிடம் அனுசரித்துச் சென்றால் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும். வேலையில் சுறுசுறுப்பு குறைந்து, சோம்பல் அதிகரிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். பிறந்த நாள் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு அரசு வகைத் தொல்லைகள் ஏற்படும்.
கன்னி
(உத்திரம் – 2, 3, 4- பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் யாவும் வெற்றிகரமாக முடியும். அரசு பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் தங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை சுலபமாக அடைவீர்கள்.
அஸ்தம் – இந்த வாரம் உங்களுக்கு தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். அதன் காரணமாக சுபச்செலவுகள் கூடி, அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்கள் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரும். அரசு பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சில நேரங்களில் சுறுசுறுப்பான நிலையும், மனோபயம் நிலவும்.
சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகள் நன்மைகளும் ஏற்படும். ஞான தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பரிபூர்ண ஒத்துழைப்பு கிடைக்கும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத் தானதர்மங்கள் செய்வார்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். நல்ல பல கருத்துக்களை கேட்பதின் மூலம் புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரும். சுபகாரிய செலவுகள் ஏற்படும்.
மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள்)
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் --- இந்த வாரம் சீரான பொருளாதார உயர்வால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நெருங்கிய உறவுகள், அன்பு நண்பர்கள் அனுசரித்து சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத் தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கோடை விடுமுறைக்கு கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசத்திற்குச் சென்று மனம் மகிழ்வார். வேலையில் சிரத்தையும், கடின உழைப்பு தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள் செல்வ நிலையும் உயரும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும்.
திருவோணம்- இந்த வாரம் அன்னையின் அன்பும் அரவணைப்பும் உற்சாகத்தைத் தரும். சிலர் கோடைக் கொண்டாட்டமா குடும்பத்துடன் இன்பச் சுற்றுலாக்கள் சென்று மகிழ்வர். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சிலருக்கு அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் ஏற்படும். அரசு ஊழியர்களுக்குக் கீழே பணிபுரிபவர்களை கட்டளை இடும் படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். மேற்படிப்புக்கான புதிய கல்லூரிகளைத் தேடி அலையும் படியான நிலை ஏற்படும். கல்விச் செலவுகள் கூடும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபச் செய்திகள் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தன லாபம் அதிகரிக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க, அனுசரித்துச் செல்வது நல்லது. ஒளிமயமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். அன்பு உறவுகள் வருகையால் ஆனந்தம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும். கோடைகாலப் பயணங்கள் குளுமை தரும்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் உங்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். எறும்பை ஒத்த, உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளை கண்டு அனைவரும் பாராட்டுவர். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து, எதிர்பார்த்தபடி தனவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடமிருந்து வெகு நாளாக எதிர்பார்த்திருந்த அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் தடங்கலின்றி வந்து சேரும். சினிமா, கேளிக்கை விடுதிகள் என ஆரவாரம் மிக்க சூழலில், மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களும் அதில் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சி கரமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும்.
பூசம் -- இந்த வாரம் உங்களுக்கு நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். சிலருக்கு பிரிவும், பகையும் ஏற்படலாம். பண விஷயங்களில் யாரையும் நம்பி ஏமாறாமல், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தீவிர முயற்சிக்குப் பின், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் பயணத்தில் துன்பமும் ஏற்படும். கடன் கொடுத்தவர்கள் கெடுபிடி செய்வார். தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள் யாவும் அனுகூலமாக முடியும். தொடர் முயற்சி காரணமாக, வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர்.
ஆயில்யம் – இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். மனதுக்குப் பிடித்த மங்கையுடன் நட்பு ஏற்படும். கோடை விடுமுறையில் இனிய பயணங்களால் இன்புறுவீர் கள். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பலன்களை அடைவார்கள். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு மூலம் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். ஆயினும், எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம்.
சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் – இந்த வாரம் தொலை தூரச் சுபச்செய்திகள் எதிர்பார்க்கலாம். பெரியவர்கள் உதவியால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். அரசுப் பணியில் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். விருந்து, மகிழ்ச்சி கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உறவுகளால் எவ்வித உதவியும் இருக்காது.
பூரம் – இந்த வாரம் உங்களுக்கு பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் பல ஏற்படும். நல்ல குரு வாய்க்கப் பெற்று அனைத்து வழிகளிலும் அறிவுத் தெளிவு ஏற்படும். சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படும். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைத்துப் புகழும் ஓங்கும்.. வாக்கு வன்மை ஓங்கி, அதன் மூலம். ஆதாயம் அடைவீர்கள். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் நீங்கள் முக்கிய விருந்துகளில் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதை கழிப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் தேவை அறிந்து, நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள். பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசியல்வாதிகளிடம் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களை பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர்.
துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் சுபகாரியங்களுக்கான முன்னேற்பாடுகளில் இல்லமே விழாக்கோலம் பூ ணு ம். திடீரென ஏற்படும், வியாபார சம்பந்தமான பயணங்களால் ஆதாயம், மகிழ்ச்சியும் ஏற்படும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டும் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத விதத்தில் பணியில் இட மாற்றங்கள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.
சுவாதி – இந்த வாரம் சம்பாதிக்கும் திறன் மேம்படும். நவநாகரீக ஆடைகள் வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். மகான்கள் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். அரசு வேலைக்கு மனு செய்தவர்கள் அனுகூலமான பதில்களை எதிர்பார்க்கலாம். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். அதன் காரணமாக தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சில மாணவர்கள் மிகப் பெரிய சாதனைகள் புரிவார்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் திருமணம் கைகூடி வரும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்படும் அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். நண்பர்கள் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பு, உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்.
மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் பணவரவு அதிகரிப்பால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும் வழக்குகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். விஐபி களின் நட்பின் மூலம் ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சி தனை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களால் மகிழ்ச்சி பொங்கும். ஆழ்ந்த மனக்கவலைகள் கூட அன்பு மனைவியின் அரவணைப்பால் குறையும். விடுமுறைக் காலமாதலால் வீட்டில் குழந்தைகளின் சேட்டை, செயல்பாடு கண்டு உங்கள் முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
உத்திரட்டாதி- இந்த வாரம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். பல வகையான உயர்ரக வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுப மங்கள காரியங்கள் காரணமாக தாராளமான பணச் செலவுகள் ஏற்படும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.
ரேவதி- இந்த வாரம் பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். நல்ல புத்திர பாக்கியம் ஏற்பட்டு குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். ஞானிகள் மற்றும் பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பக்கத்து வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். தொழில் வாய்ப்புகள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும்.
தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் – இந்த வாரம் சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீர்கள். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். சிலருக்கு எல்லா விஷயத்திலும் ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். உயர்ந்த மனிதர்களின் நட்பு கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்கள் உழைப்பால் உற்பத்தி பெருகி லாபம் அதிகரிக்கும்.
பூராடம் – இந்த வாரம் அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் லாபம் ஏற்படும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் , விருப்பங்கள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு, அதன் காரணமாக குடும்ப முன்னேற்றம் ஏற்படும். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வர். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. சிலருக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.
உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல் ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். உறவுகள், நண்பர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலம் பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்ப்பு படி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம்.
விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள்)
விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். அதன் காரணமாக சந்தோஷம் பொங்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. வியாபாரத்தில் கடின உழைப்பால் மட்டுமே நல்ல லாபம், அதிக பலனோ கிடைக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள்.
அனுஷம் – இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பெண்களுக்கு பணியிடத்தில் மற்றவர்களின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கும். தங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனு செய்தவர்கள் அனுகூலமான பதில்கள் வரும். ஏமாற்றத்தை தவிர்க்க வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கேட்டை – இந்த வாரம் வாழ்க்கையில் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். உடன்பிறப்புகளிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவி கள் கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அரசு பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு எனும் காற்று உங்கள் பக்கம் வீசும். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்றபடி, உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். வீண் செலவுகளை குறைத்து பணத்தை சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். வீட்டில் வசதிகளைப் பெருக்கி கொள்வீர்கள்.
கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவு மூலம் ஏற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். அரசு பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம்.
சதயம்- இந்த வாரம் நேர்மையும் கடின உழைப்பும் மட்டும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். போதுமான தனவரவு இருக்கும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். வியாபாரிகள் நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் அரசு பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் பெற முயற்சிப்பர். அதில் வெற்றியும் அடைவர். நல்லவர்களுடன் தொடர்புகள் ஏற்பட மனம் உயர்ந்த எண்ணங்களை கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபார விரிவாக்கத்தால் கிடைக்கும் லாபம் சிறப்பானதாக இருக்கும். மாணவர்கள் தங்களுக்கு புதிய கல்லூரிக் கனவுகள் திளைப்பர். விடுமுறைக் காலத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவர். அரசியல்வாதிகள் உங்களை சார்ந்தவர்களுக்கு நல்லது செய்வதன் காரணமாக புகழ் பெறுவர். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த