எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வார ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: Monday, May 29, 2023 to Sunday, June 4, 2023
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி -- இந்த வாரம் எதிர்பாராத தன வரவுகள் ஏற்படும். பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புதிய வியாபார தொடர்புகள் இலாபம் தரும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பலன்களை அடைவார்கள். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். நல்ல நண்பர்களுடன் பழகுவது நன்மை அளிக்கும். இடைவிடாத பணியின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். புலால் உண்பவர்களுக்கு அஜீரண தொல்லைகள் எழலாம். சிலருக்குப் பாசம் மிக்க உறவுகளைப் பிரிந்து வாழ நேரிடலாம்.
பரணி -- இந்த வாரம் பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும். வேலையில் சுணக்கம் ஏற்படுவதன் காரணமாக பணவரவுகளில் தாமதம் ஏற்படும். சிலருக்கு மேல்மட்டத்தில் உள்ள முக்கிய நபர்களின் உதவியால், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். புதிய வியாபார தொடர்புகள் மூலம் இலாபத்தின் சதவீதம் அதிகரிக்கும். கோபத்தால் காரியங்கள் கெடலாம். எனவே, கோபத்தை அடக்குவது நல்லது. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் தலால், பிறரிடம் கடன் வாங்கும் சூழல் உருவாகும்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் புதிய திருப்பங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் ஏற்படும். புகழ் ஓங்கும். அதிகாரப் பதவிகள் கிடைப்பதால் அந்தஸ்தும் உயரும். வியாபாரத்தில் வங்கி உதவியுடன் திட்டமிட்டபடி புதிய விரிவாக்கங்கள் செய்து முடிப்பீர்கள். அதன் காரணமாக வருவாய் ஓரளவு அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர் களுக்கு தங்கள் வாக்குவன்மையால் வருமானம் அதிகரிக்கும். பெண்களால் ஆதாயம் ஏற்படும். மாணவர்கள் போட்டி பந்தயங்களில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ப்பர். நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிட்டும். பிறரிடம் கோபத்தால், துர் வார்த்தைகள் பேசாதிருப்பது நல்லது, சகோதர்களிடம் விரோதம் ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்லுங்கள்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் விருந்தினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அரசு ஆதாயங்களால் தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும். இன்பப் பயணங்களால் சந்தோஷம் பெருகும். நண்பர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பெரியவர்கள் நல்வார்த்தைகள் கேட்டு, ஞானம் பெறுவீர்கள். பயணங்களில் முன்பதிவுப் பிரச்சனைகள், வசதியற்ற நிலைகளால் இடையூறுகள் என அவதிப்பட நேரலாம். வணிகர்களுக்கு, தர்ணா, கடையடைப்பு போன்ற பிரச்சனைகளால் தொழிலில் தடைகள் ஏற்படலாம். அதன் காரணமாக வருமானம் குறையும் நிலை ஏற்படலாம். சிலருக்குக் கட்டுக்கடங்காத செலவுகள் காரணமாக கடன் தொல்லைகள் எழலாம்.
ரோகிணி – இந்த வாரம் பண விஷயம் சம்பந்தமான சிந்தனைகள் அதிகம் இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் கோலாகலமாக நிறைவேறும். உடன் பிறப்புக்களிடையே ஒற்றுமை நிலவும். சமையலறையில் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். பிள்ளை பாசத்தால் மன உளைச்சல் ஏற்படலாம். சிலருக்கு மகான்களின் சந்திப்பால் மனம் மகிழும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சிலருக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். நேர்த்தியாக உடையணிந்து, வாரக் கடைசியில் விருந்து, கேளிக்கைகளில் மகிழ்ச்சியின் உச்சிக்குச் செல்வீர்கள். அரசுப் பணியாளர்களின் அயராத உழைப்பை கண்டு உயர் அதிகாரிகள் பாராட்டுவர்.
மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் பாக்கிய விருத்தியால் மகிழ்ச்சியான நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதுப்புது தொழில் தொடர்புகள் ஏற்படலாம். அதன் காரணமாகத் தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். சிலர் பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க நேரும். நல்லோர் தொடர்பால் நன்மையே நடக்கும்.. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசால் ஆதாயங்கள் ஏற்படலாம். குழந்தைகள் மூலம் தொல்லைகள் ஏற்படலாம். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.
மிதுனம்
(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள் -- இந்த வாரம் உயர் வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வீடு, மனை ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். . பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் மனைவியிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பக்திக் கதைகள் கேட்டல் மற்றும் ஆன்மிகவாதிகளின் தரிசனத்தால் மனம் அமைதி பெறும். சிலருக்குக் காரியத் தடைகள் ஏற்படலாம். நல்லோர் சேர்க்கையால், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். அரசுப் பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும்.
திருவாதிரை --- இந்த வாரம் புதிய சாதனைகள் படைப்பீர்கள். மனதிற்கினிய பெண்கள் மூலம் மகிழ்ச்சி, முயற்சிகளில் வெற்றி போன்றவற்றால் மனம் மகிழும். பெரியவர்கள் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவு மற்றும் புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த படி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். முழு மூச்சுடன் ஈடுபடும் வேலைகளில் மாணவர்களுக்கு விளையாட்டு, டி.வி ஆகியவற்றால் ஏற்படும், கவனச் சிதறல்கள் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையும். எனவே, ஆழ்ந்து கவனமாக படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். சிலருக்கு எதிர்பார்த்தபடி நல்ல இடமாற்றங்கள் ஏற்படலாம்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் வீட்டில் கேளிக்கைகள், பிறந்த நாள் விருந்துகள் என மகிழ்ச்சி பொங்கும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது. தூரதேசத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்கள் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரம் நெருங்கிய நண்பர்களுடனான தேவையற்ற பகையால் பிரச்சனைகள் ஏற்படலாம். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை ஆன்மிக காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். நாட்டில் அமைதியை நிலைநாட்ட வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்து சிக்கனமாக இருந்தால், பணமுடைகளைத் தவிர்க்கலாம்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்-- இந்த வாரம் உங்களுக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலம் அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். புதிய வாகன யோகம் ஏற்படலாம். தீர்த்த யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் விருந்தினருடன் சினிமா, டிராமா என செல்வதால் மனம் மகிழும். ஞானிகளின் அருளால் நல்லதே நடக்கும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால், எதிர்பார்க்கும் பணி உயர்வுகள் எளிதாகக் கிடைக்கும். சிலருக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். மாணவர்கள் உங்கள் கடின உழைப்பால் கல்வியில் நல்ல தேர்ச்சி அடைவர். பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கும்.
அஸ்தம் – இந்த வாரம் அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். உங்கள் சேவைகள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். அத்துடன் நல்ல பாராட்டு பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரம் மற்றும் தொழில் வழி புதுப்புது மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் நெளிவு சுளிவாக நடக்கும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். நினைத்தபடி அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், எவ்விதத் தடையின்றி வெற்றி பெறும். சுபகாரியங்களுக்கு வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும் பயணங்களால் ஆதாயம், மகிழ்ச்சியும் ஏற்படும்.
சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் பொருளாதார நிலை உயர்வால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். சிலருக்குப் பிள்ளைப் பேறு ஏற்படலாம். தொழிலில் புதிய வாய்ப்புகள், லாட்டரி யோகம் ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு அக்னி பயம், திடீர் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்தக் காரியத்தையும் முழுத் திறமையையும் காட்டித் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை எளிதாக அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் --- இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தங்கள் தனி திறமைக்கு ஏற்ப பெயரும் புகழும் கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துவது நல்லது. பதறாத காரியம் சிதறாது முடியும் என்பதால், எந்த ஒரு காரியத்தையும் பதட்டமின்றி பொறுமையாக செய்தால் வெற்றி நிச்சயம். பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்குப் பணி அல்லது வீடு ஆகிய இடமாற்றங்கள் ஏற்படலாம். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தன லாபம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.
திருவோணம்- இந்த வாரம் சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும். புதிய கொள்முதல் களால் வியாபாரம் பெருகி இலாபம் அதிகரிக்கும். பொழுது போக்குச் செலவுகள் அதிகமாகும். பணியாளர்கள் கடினமாக உழைத்தாலும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது. சிலருக்குப் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். புதிய கடன்களை அடைக்க, சேமிப்புகளில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். பங்குச் சந்தையில் ஆலோசித்து முதலீடு செய்வது நல்லது. புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய விரிவாக்கங்கள் செய்வதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிவுடன் நடக்கும் பணியாளர்கள், அதிகாரிகள் உதவியால் உயர் பதவிகள் அடைவார்கள்.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்திற்கு ஆன முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்களால் தேகசுகம் குறையும். கடமை உணர்வு மிக்க அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். பல வகையான உயரக வாகன வசதி அமையும். கணவன், மனைவி இடையே மிகுந்த ஒற்றுமை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். அலங்காரப் பொருட்கள் மற்றும் வாசனை திரவிய வியாபாரங்களில் அதிக இலாபம் காணலாம். நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் அதிக இழப்பைத் தவிர்க்கலாம்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் வாகன சுகங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் அமையும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடி கிடைக்கும். உறவுகளுடன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒற்றுமை ஓங்கும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளை கடைப்பிடிப்பீர்கள். எதிர்பாராத விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியில் இருக்கும். செலவுக்கும் குறைவிருக்காது. அரசு வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தரும. கணவன், மனைவிக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாகி, இணைந்து பேரின்பம் அடைவர். அளவுக்கு அதிகமாக அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும்.
பூசம் -- இந்த வாரம் உறவுகளின் உல்லாசப் பொழுது போக்குகள் மற்றும் விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்படும் முழுமையான ஈடுபாடு காரணமாக தாராளமான பணவரவு இருக்கும். சிலருக்குப் பருவ மாற்றம் காரணமாக சளி, தலைவலி, காய்ச்சல் என சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். அதன் காரணமாக வைத்தியச் செலவுகள் கூடும். வீட்டில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக கோபமும், உணவின் மீது வெறுப்பு ஏற்படலாம். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பாசம் மிக்க பெண்கள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் சுகம் ஏற்படும்.
ஆயில்யம் – இந்த வாரம் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு ஏற்படும். உறவுகள் மூலமாகவும் பணவுதவி கள் கிடைக்கும். புதிதாக தொழிலில் மேற்கொள்ளப்படும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். தேவையற்ற கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அத்தகையோரை விட்டு விலகுவது உத்தமம். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய தொழிலாளர் சேர்க்கை காரணமாக தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் உற்பத்தி பெருகும். புத்திர பாக்கியம் ஏற்படும். தாய் மூலம் நன்மைகள் ஏற்படும்.
சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் – இந்த வாரத்தின் மத்தியில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படும். துவக்கத்தில் பண விஷயமான சிந்தனைகள் தலைதூக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவு, காவல்துறையினர் மூலம் அச்சம் ஆகியவை ஏற்படலாம். திட்டமிடப்பட்ட பயணங்களில் முன்பதிவு கிடைக்காமல் தடைகள் ஏற்படலாம். பிறரின் உயர்வு கண்டு ஏற்படும் பொறாமை மற்றும் கோபங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் தெய்வ சிந்தனையும், தர்ம சிந்தனையும் நிலைத்திருக்கும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். வீண் மனஸ்தாபங்கள் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து விடுவார்கள்.
பூரம் – இந்த வாரம் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், எவ்விதத் தடையின்றி வெற்றி பெறும். சுபகாரியங்களுக்கு வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயம், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். உங்கள் சேவைகள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். அத்துடன் நல்ல பாராட்டு பெறுவீர்கள். வியாபாரம் மற்றும் தொழில் மாற்றங்களால் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் நெளிவு சுளிவாக நடக்கும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். நினைத்தபடி அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். தெய்வ தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். குழந்தைகள் தரும் தொல்லைகளால் மனவருத்தம் ஏற்படும். அவர்கள் வழியாக சென்று அவர்களை திருத்துவது நல்லது. புதிய வியாபார முயற்சிகளால் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும். ஸ்த்ரீ சுகம், கேளிக்கை ஈடுபாட்டால் மகிழ்ச்சி, பந்து ஜன வரவால் உற்சாகம், மகான்களின் தரிசனம் ஆகியவை ஏற்படலாம்.
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் திரைத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இதுநாள் வரையில் இழுபறியாக இருந்த வழக்குகள் பைசலாகும். முன் கோபத்தைக் குறைத்தால் வாழ்க்கையின் நல்ல முன்னேற்றங்களை எதிர் பார்க்கலாம். தாய்வழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பலவழிகளிலும் பணவரவுகள் அதிகம் கிடைக்கும். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாகத் தொழில் புரியும் வாய்ப்புகள் ஏற்படும்.
சுவாதி – இந்த வாரம் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிவர். பிள்ளைகளின் முன்னேற்றங்கண்டு பெருமை கொள்வீர்கள். இல்லத்துக்கு தேவையான நவீன வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி அனுபவிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் கடின உழைப்பு பாராட்டுக்களைப் பெறுவதோடு, பதவி உயர்வுக்கு கைகொடுக்கும். வண்டி, வாகனங்களில் அபராதம் கட்டாதிருக்க அனைத்து ஆவணங்களையும் மறவாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள். பொருளாதார நிலையை பொறுத்தவரை சீராக இருக்கும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் செய்தொழில், வியாபாரம் எதுவானாலும் புதிய திட்டங்கள் தீட்டுவதன் மூலம் அதிக இலாபங்களை அடைவீர்கள். அனைத்து வசதிகளும் இன்பமும் ஏற்படும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பால் உயர்வு ஏற்படும். அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீர்கள். நீண்ட நாட்களாக தீட்டிய திட்டங்களின்படி புண்ணிய தல யாத்திரை செல்லும் நிலை ஏற்படலாம். அரசுப் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகள் கெடுபிடிகளும் அதிகமாகும். தன வருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக இருக்கும். அதற்கேற்ப செலவினங்களும் கூடும். தொழிலில் மிகப் பெரிய சாதனைகள் புரிவார்கள்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனு செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் தர்க்கம் செய்யாதிருப்பது நல்லது. அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரும். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும். சிறப்பான பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தினரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ வைப்பீர்கள். நல்லதொரு வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். மிகக் கடினமான வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள்.
உத்திரட்டாதி- இந்த வாரம் சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும் எதையும் சாதிக்கும் திறன் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மதிப்பு உயரும். அதிகாரம் மிக்க பதவிகளை அலங்கரிக்கும் நிலைக்கு நீங்கள் உயர்வீர்கள். தொழில் புரிபவர்கள் புதிய எந்திரங்களை வரவழைத்து உற்பத்தியை பெருக்கி ஆதாயம் காண்பர். பிராயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பலவழிகளிலும் பணவரவு ஏற்படும். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அரசு உதவிகள் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ரேவதி- இந்த வாரம் தேவையான நேரத்தில் நண்பர்களின் உதவி கண்டிப்பாகக் கிடைக்கும். சிலருக்குச் சுறுசுறுப்பற்ற நிலையாலும், மந்த புத்தியாலும் காரியத் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த இனங்களில் இருந்து ஏற்படும் பணவரவால், இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். அனைத்து வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைகளுக்கு மனு செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் தர்க்கம் செய்யாதிருப்பது நல்லது. அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரும். மதிப்பு மிக்க பெரியவர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். உங்கள் திறமைக்கு ஏற்றபடி புகழ், கௌரவமும் கூடும்.
தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் – இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். தாய் மூலம் நன்மைகள் ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். கல்வியில் தேர்ச்சி ஏற்படும். மொத்தத்தில் வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். வாடிக்கையாளர்களை கவர புதிய பரிசுத் திட்டங்களை அறிவிப்பீர்கள். வீட்டில் வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும்.
பூராடம் – இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உயர் வாகன வசதிகள் மேம்படும். எழுத்துத் தொழிலில் காட்டப்படும் சிரத்தை மற்றும் கடின உழைப்பால் கல்லாக் கட்டுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். உறவுகளிடையே ஒற்றுமைக் குறைவு மூலம் விரிசல்கள் ஏற்படும். பதட்டப்படாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் சமாதானமாகப் போவது நல்லது. இனிய பயணங்கள் மற்றும் புண்ணியத் தல யாத்திரைகள் மகிழ்ச்சி அளிக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சலுக்கு தக்க ஆதாயம் ஏற்படும்.
உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் மதிப்பு, கௌரவம் உயரும். பருவநிலை காரணமாக சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு, அதன் காரணமாக குடும்ப முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் முன்னேற்ற நடவடிக்கைகள் மகிழ்ச்சி தரும். ஆக்கமும், ஊக்கமும் பெருக சுயமாக சம்பாதிக்கும் வழிமுறைகள் கண்டறிவீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் இல்லத்தரசியின் உதவிகள் கை கொடுக்கும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் சொல் கேட்டு நடந்தால் உன்னத நிலை அடைவர். அறிவுத்திறன் கூடும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் அனைத்துப் பணிகளும் மனைவியின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். அரசுப் பணியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்கள் அடைவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். மேல்மட்ட அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். பெரியவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்ல முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வெளிவட்டாரப் பழக்கவழக்கங்களால் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். தந்தையின் அனுகூலமான வார்த்தைகள் உற்சாகம் அளிக்கும். தெய்வீக கைங்கர்யங்களில் ஆர்வம் ஏற்பட்டு தான தர்மங்கள் செய்ய முற்படுவார்கள்.
அனுஷம் – இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும். வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். சிலருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் அவர்களின் பேச்சுத் திறன் அதிகரிக்கும். உடன்பிறப்புக்களின் தீய நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். கூட்டாளிகளால் ஏமாற்றப்படுவதை தவிர்க்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மனைவியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் இல்லத்தில் இன்பம் பொங்குவதோடு, முன்னேற்றங்களும் தேடிவரும்.. உத்தியோக முயற்சியில் இருப்பவர்களுக்குப் போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.
கேட்டை – இந்த வாரம் உங்கள் அபரிமிதமான அறிவுத் திறனால் கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் ஆகியவை கிடைக்கும். அரசு அதிகாரிகளை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்கலாம். குடும்பத்தில் உறவுகளிடையே பாசம் அதிகரிக்கும். கடன்களை அடைக்க தக்க சமயத்தில் பணவரவு ஏற்படும். சிலருக்குப் புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன்களுக்கான முயற்சிகள் வெற்றி பெறும். அரசு அதிகாரிகள் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். அதைத் தக்க வைக்க கடின உழைப்பு தேவை. சிலருக்குச் சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயம் நிலவும். புதிய தொடர்புகள் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றி கிடைக்கும். தொழிலில் முழு வெற்றி அடைய அதிக முயற்சிகள் தேவைப்படும். நேர்மையும் கடின உழைப்பும் மட்டும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். பணியில் முழுக் கவனம் செலுத்துங்கள். ஏனெனில், நீங்கள் உயிரைக் கொடுத்து உழைத்தாலும், மேலதிகாரி அதில் ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பார். ஆயினும் சகப் பணியாளர்கள் உதவியால் சமாளித்துவிடுவீர்கள்.
சதயம்- இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அரசு வேலையில் அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும். அரசுப் பணியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. சிலருக்கு விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் பெண்கள் மூலம் சந்தோஷம் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது. தீய குணமுள்ள நண்பர்களைத் தவிர்த்தால், உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களை கொண்டதாக அமையும். விருந்துகளிலும், கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். புதிய தொழில் தொடர்புகள், அரசு வகை ஆதாயங்களும் தொழில் மேன்மை தரும். இதுவரை எட்டாதிருந்த கனிகளெல்லாம் எட்டும். அதாவது நீங்கள் விரும்பிய பொருட்களெல்லாம் கிடைத்துவிடும். நண்பர்கள், மற்றும் உறவுகளிடம் சுமூகமாக நடந்து கொண்டால் கருத்து பேதங்களைத் தவிர்க்கலாம்.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கோபி மஞ்சூரியன்![]() 2 days 12 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 6 days 11 hours ago |
முட்டை பக்கோடா![]() 1 week 2 days ago |
-
ஊழல் குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபருக்கு 9 வருட சிறை தண்டனை
02 Jun 2023பிரேசிலியா : பிரேசிலில் முன்னாள் அதிபர் பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 02-06-2023.
02 Jun 2023 -
கோகுல்ராஜ் கொலை வழக்கு: இதுவரை கடந்து வந்த பாதை
02 Jun 2023சென்னை, பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்
-
மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றி நீதியை பெற வேண்டும்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விளக்கம்
02 Jun 2023புதுடெல்லி, "மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம்.
-
ஐபோன்களில் ரகசிய மென்பொருள்: உளவு பார்த்ததாக அமெரிக்கா மீது ரஷ்யா குற்றச்சாட்டு
02 Jun 2023மாஸ்கோ : ஐபோன்களில் ரகசிய மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக அமெரிக்கா மீது ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
-
மத்திய அரசின் அவசரச் சட்ட விவகாரம்: ஜார்கண்ட் முதல்வரை சந்தித்து பேசினார் அரவிந்த் கெஜ்ரிவால்
02 Jun 2023ராஞ்சி : டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்க்ககோரி ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை நேற்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெ
-
மருத்துவமனையில் உள்ள மனைவியை காண சிசோடியாவிற்கு ஒருநாள் ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட் உத்தரவு
02 Jun 2023புதுடெல்லி, மருத்துவமனையில் உள்ள மனைவியை காண டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்
-
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. காட்டம்
02 Jun 2023மதுரை : மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
ஊதிய உயர்வு பெற தேர்வு அவசியமில்லை: பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
02 Jun 2023சென்னை, 2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என அனுமதியளித்த சென்னை உயர் நீத
-
ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு எதிரொலி: கூடுதலாக 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழக போக்குவரத்துத் துறை அறிவிப்பு
02 Jun 2023சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவி
-
கோவாவின் முதல் வந்தே பாரத் ரயில்: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
02 Jun 2023பானாஜி, கோவாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
-
கலைஞர் நூற்றாண்டு இலச்சினை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
02 Jun 2023சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
பதற்றம் தணிந்ததால் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்தி அறிவிப்பு
02 Jun 2023இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு குடம் குடமாக நடந்த பாலாபிஷேகம்
02 Jun 2023மதுரை : வைகாசி விசாகத்தையொட்டி நேற்று திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது.
-
புதுச்சேரியில் திருமண தாம்பூலத்தில் மதுபாட்டில்: மணமகன் வீட்டாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது காவல்துறை
02 Jun 2023புதுச்சேரி, புதுச்சேரியில் திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் மதுபாட்டில் போட்டுக் கொடுத்த திருமண வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது புதுச்சேரி காவல்து
-
பூமியின் மேற்பரப்பில் இருந்து 32,000 அடி வரை துளையிடும் பணியை தொடங்கிய சீனா
02 Jun 2023பெய்ஜிங் : பூமியின் மேற்பரப்பில் இருந்து 10,000 மீட்டர் (32,808 அடி) வரை துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.
-
சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை நமக்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
02 Jun 2023புதுடெல்லி, சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் கொள்கையும் நமக்கு உத்வேகத்தை அளிக்கின்றன எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
02 Jun 2023சென்னை : ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
-
கரூரில் 8-வது நாளாக தொடர்ந்த வருமான வரித்துறை சோதனை
02 Jun 2023கரூர் : கரூரில் நேற்று 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-
நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி : கோபால கிருஷ்ண காந்தி புகழாரம்
02 Jun 2023சென்னை : நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி என்று மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னால் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 2 நாட்கள் வெயில் தாக்கம் உயரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
02 Jun 2023சென்னை, தமிழகம், புதுச்சேரியில் 2 நாள்களுக்கு இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
-
தமிழகத்தில் முருகன் ஆலயங்களில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : பால்குடம் சுமந்து வந்து பக்தர்கள் அபிஷேகம்
02 Jun 2023சென்னை : அறுபடை வீடுகளிலும் முருகனின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகம் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
-
சேலம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் கைது: 3 பேர் மீது வழக்குப் பதிவு
02 Jun 2023சேலம், சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி அருகே நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்துக்கு காரணமான 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள இரும்பாலை காவல்துற
-
பட்டாசு ஆலைகளை தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கனும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
02 Jun 2023சென்னை, தமிழகத்தில் சமீப காலமாக பட்டாசு ஆலை விபத்துக்கள் தினசரி செய்தியாகி வருகின்ற நிலையில் பட்டாசு ஆலைகளை தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதி
-
ஒடிசாவில் விபத்துகுள்ளானது கோரமண்டல் விரைவு ரெயில் : மீட்பு பணிகள் தீவிரம்
02 Jun 2023புவனேஷ்வர் : சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதை அடுத்து அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.