எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.15 - டெல்லியில் நடைபெற உள்ள மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா நாளை டெல்லிக்கு செல்கிறார். தீவிரவாதத்தை கட்டுப்படுத்த, மாநிலங்களில் பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களில் இது போன்ற மையங்களை மத்திய அரசு அமைப்பது மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாகும்.
எனவே பயங்கரவாத தடுப்பு மையங்களை மாநிலங்களில் அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளார். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜியும் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபோல் பீகார் முதல்மந்திரி நிதிஷ்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாத கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்மந்திரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்றாலும், மாநிலங்களில் பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
எனவே இந்த பிரச்சினை குறித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்மந்திரிகள் வற்புறுத்தினார்கள். அதைக் கருத்தில் கொண்டு மே மாதம் 5-ந்தேதி முதல்மந்திரிகள் கூட்டத்துக்கு மத்திய உள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து இருக்கிறது. அதற்கு முன்பாக வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) முதல்அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக 16ந்-தேதி கூட்டப்படும் இந்த மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். இதற்காக அவர் திங்கட்கிழமை காலை தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மாநாட்டில் பயங்கரவாதம், மாவோயிஸ்டுகள் பிரச்சினை, காவல் துறையை நவீனமயம் ஆக்குவது, மாநில எல்லை பாதுகாப்பு, கடலோர கண்காணிப்பு போன்றவை குறித்து முதல்மந்திரிகளுடன் ஆலோசிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் முதல்அமைச்சர் ஜெயலலிதா தனது கருத்தை வற்புறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் மத்திய உள் துறை மந்திரி ப.சிதம்பரம் தொடக்க உரையாற்றுகிறார். அப்போது பயங்கரவாதத்தை ஒடுக்குவது, ரகசிய உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது ஆகியவற்றில் மத்தியமாநில அரசுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர் வலியுறுத்துகிறார். இது தவிர ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்தும், அதை அடக்கும் வழிமுறைகள் குறித்தும் அந்த மாநில முதல்மந்திரிகளுடன் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்துகிறார். தற்போது தமிழக சட்ட சபை கூட்டம் நடந்து வருகிறது. எனவே முதல்மந்திரிகள் மாநாடு முடிந்ததும், திங்கட்கிழமை மாலையே முதல்அமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்ப முடிவு செய்துள்ளார். அதன்படி தனி விமானத்தில் திரும்புகிறார். முதல்அமைச்சர் டெல்லி சென்று வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
பாம் திரைவிமர்சனம்
15 Sep 2025ஒற்றுமையாக இருந்து பிரிந்த இரண்டு கிராம மக்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
ஆசிய கோப்பை 6-வது லீக்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை 6-வது லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
முதல்முறையாக ராமதாஸ் மகள் பா.ம.க. கூட்டத்தில் பேச்சு
15 Sep 2025கிருஷ்ணகிரி : முதல்முறையாக டாக்டர் ராமதாசின் மகள் பா.ம.க. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
-
குமாரசம்பவம் திரைவிமர்சனம்
15 Sep 2025இயக்குநராக வேண்டும் என்ற என்னத்தில் பயணிக்கும் நாயகன் குமரன் தியாகராஜன் வீட்டில் திடீர் மரணம் ஒன்று நிகழ்கிறது.
-
பிளாக்மெயில் திரைவிமர்சனம்
15 Sep 2025மருந்து கடை சப்ளையராக வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ் செய்யாத குற்றத்திற்காக தன் கடை உரிமையாளருக்கு ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
சென்னையில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக்கோரி காவல்துறையிடம் மனு
15 Sep 2025சென்னை, சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதிகோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
-
மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை
15 Sep 2025மும்பை : மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் அந்த பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.